பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

"இரவல் வாங்கவில்லையே"

 நண்பர்களே,


சுதந்தர தின வாழ்த்துக்கள்!!

Image result for picture of indian national flag

"பார்புகழும் பாரத நாடு
யார் விதைத்தார் அதற்குக் கேடு
எங்கும் எதுவும் லஞ்சத்தோடு ; அதை
எடுத்துப்போட்டால் நமக்கேது  ஈடு?

அரசியல் எனும் சந்தன குளத்தை
நரகல் சாக்கடை ஆக்கியது யார்
அரைவேக்காட்டு அரசியல் தரகர்
அவரே காரணம்  அவனியில் கடையர்.

வளங்களை சரியாய் பகிர்தல் வேண்டும்
நிலங்களை நித்தம் பயிரிடல் வேண்டும்
தரிசு நிலங்களை வீடாக்கலாம் - பயிர்
விளையும் நிலங்களை வீணாக்கலாமா?

அந்நியன் நம்மை ஆட்டிப்படைத்தது 
அன்றைக்கே முடிந்தது நாற்பத்தேழோடு
இன்னும் எவரேனும் வாலாட்ட முனைந்தால்
அன்றைக்குத் தெரியும் இந்தியர் யாரென்று.

இரவில் வாங்கினோம் சுதந்தரம்
இல்லை என்று மறுக்க வில்லை - ஆனால்
இரவல் வாங்கவில்லையே 
எவர்க்கும் திருப்பிக் கொடுக்க?

காஷ்மீர் என்ன பஞ்சு மிட்டாயா
கோஷமிடுவோர்க்கெல்லாம்  கிள்ளி கொடுக்க?
ரோஷமுள்ள இந்தியர் எவரும் ரொம்பப்
பாசமுடனதை பராமரிக்க வேண்டும்.

பட்டொளி வீசி பறந்திடும் கொடியை
பார்க்கையிலே நெஞ்சில் பரவசம் -அதில்
சட்டென வந்து மலர் முகம் காட்டி 
சரித்திரம்  சொல்லும் பலர்முகம் 

குருதியும் வேதனை சொல்லொன்னா துயரும்
கொட்டி கொடுத்தே  எல்லையில் 
உறுதியும் வலிமையையும் உரமென இட்டு 
காத்து நிற்கும் வீரனே- உனக்கின்று 

வீர வணக்கம் மட்டும் சொன்னால்
விடியுமா நாளை எம் பொழுது- இனி 
வாரம் ஒருமுறை உமக்காய் நாங்கள்
வேண்டுவோம் இறையடி தொழுது.

Image result for image of indian flag

எண்ணம் உதிர்த்தவை நிஜம்தானே - அதை
எழுத்தில் வடித்ததுவும் முறைதானே
என்ன யாம் உரைப்பது சரி தானே? - நமை
எதிர்ப்"போர்" முகத்தில் கரிதானே?"

வாழ்க பாரதம்!

ஜெய் ஹிந்த்.
நன்றி 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

14 கருத்துகள்:

  1. Nice. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் ஸ்ரீராம், உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

      நீக்கு
  2. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்...

    கவிதை வழி சொன்ன விஷயம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் வெங்கட் , உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

      நீக்கு
  3. கவிதை அருமை
    காஷ்மீரிகள் குரலும் அதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அவர்களின் குரலும் அதுதானே. வருகைக்கும் கவிதையை பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள் .

      நீக்கு
  4. சுதந்திர தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. உங்களுக்கும் வாழ்த்துக்கள் திரு கரந்தையாரே.

      நீக்கு
  6. அருமையான கவிதை. உங்கள் திறன் வியக்க வைக்கிறது.

    துளசிதரன்

    கோ ரொம்ப அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தமிழ் விளையாடுகிறது! கவிதையை மிகவும் ரசித்தேன்

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்

      நீக்கு