பின்பற்றுபவர்கள்

சனி, 30 மே, 2020

இனியும் இனிமை!!







தனிமையிலும்...
நண்பர்களே,

சமீபத்தில் ஊர் விட்டு ஊர் மாவட்டம் விட்டு மாவட்டம்,மாநிலம் விட்டு மாநிலம் மக்கள் செல்வது தடை செய்யப்பட்டிருந்ததை நாமறிவோம்.

திங்கள், 25 மே, 2020

பாவம் குருமா!!

சொரணை வருமா ?
நண்பர்களே,
சில வாரங்களுக்கு முன் சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட தினத்தன்று மக்கள் எல்லோரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து  கை தட்டினார்கள், மருத்துவ முன்னணி வீரர்களையும்  , துப்புரவு பணியாளர்களையும் மற்றும் காவல் கள அதிகாரிகளையும்   கௌரவிக்கும் பொருட்டு.

சனி, 23 மே, 2020

ஆராய்வோம்!


அனுபவிப்போம்.!!
நண்பர்களே ,

நம் நாட்டில் மட்டுமல்லாது ஏனைய வெளி நாடுகளிலும் பழமொழிகள் பிரபலம்.

செவ்வாய், 19 மே, 2020

என்று பணியும் இந்த….

புரளியின் மோகம்?
நண்பர்களே,


வெள்ளையனிடம் அடிமை பட்டு கிடந்த காலங்களில்கூட இத்தகு ஊரடங்கும் வீட்டுக்குள் முடக்கமும் இருந்ததில்லை என அந்த காலத்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் கீ(த்)தா க்களும்  பல தாத்தாக்களும் சொல்ல கேட்டிருப்போம்.

திங்கள், 18 மே, 2020

பூவாகி... காயாகி - 4

என் வீட்டுத்தோட்டத்தில்….

நண்பர்களே ,

தொடர்கிறது ….

முந்தய பதிவை வாசிக்க..பூவாகி... காயாகி - 3

அடுத்த நாள் காலை   தொலைபேசி மனிஷா கொய்ராலா குரலில் சிரித்துகொண்டே  மணி அடித்தது. (ஏன் .. .. இப்படி இருக்கக்கூடாதா?)

ஞாயிறு, 17 மே, 2020

பூவாகி... காயாகி - 3

நீ வேரு!  நான் வேறு!! 

நண்பர்களே ,

தொடர்கிறது ….

முந்தய பதிவை வாசிக்க…பூவாகி... காயாகி-2

பல நாட்களின் சிந்தனைக்கு பின் மனதை திடப்படுத்திக்கொண்டு தோட்ட வேலை செய்யும் ஒருவரை வரவழைத்து ஆலோசனை நடத்தி .... நாள் குறித்தாயிற்று.

வெள்ளி, 15 மே, 2020

பூவாகி... காயாகி - 2

 கனியெல்லாம் ஹனியானால்..
நண்பர்களே ,

தொடர்கிறது ….

முந்தய பதிவை வாசிக்க... பூவாகி… காயாகி-1

இதற்கிடையில் பனிரெண்டு நாட்கள் வெளி நாட்டு சுற்றுப்பயணம்  முடிந்து திரும்பிதும் முதலில் தோட்டத்திலுள்ள ஆப்பிள் மர தரிசனம்.

வியாழன், 14 மே, 2020

பூவாகி... காயாகி - 1


பூவெல்லாம் காயானால்...
நண்பர்களே ,

தொடர்கிறது ….

முந்தய பதிவை வாசிக்க பூவாகி... காயாகி

எந்த ஒரு செய்தியையும் நேரடியாக சொல்லாமல்  , சில உவமைகள் (parables) மூலம் சொல்லி புரியவைப்பது என்பது ஒருவகை.

புதன், 13 மே, 2020

பூவாகி... காயாகி..


மரத்த வச்சவன்…..!!
நண்பர்களே ,

ஒரு திராட்ச்சை தோட்டத்தின் மத்தியில் சில கனி மரங்கள்    இருந்தன. 

அவற்றுள் சில அத்திமரங்களும் இருந்தன ;அவற்றை  பராமரிக்க நம்பிக்கையும் நேர்மையான  ஒரு தோட்டக்காரரும் இருந்தார்.

ஞாயிறு, 10 மே, 2020

ஒரே சொல்! - ஒரே பொருள்!!

ரெண்டு ரெண்டா தெரியுது…

நண்பர்களே,

ஒரே சொல்லாக இருந்தாலும்  அவை இடம் பொருள் ஏவல் என்பதற்கேற்ப பல பொருட்களை- (அர்த்தங்களை)  கொடுக்கும் பல வார்த்தைகள் தமிழில் உள்ளன என்பதை நாம் அறிவோம்.

சனி, 9 மே, 2020

வீட்டு வேலை - 3

 மிகை நாடி மிக்கக்கொளல் !! 
நண்பர்களே,


வேலை தொடர்கிறது…


முந்தய பதிவை வாசிக்க  வீட்டுவேலை -2

செயல் அலுவலர் சொன்ன அந்த செய்தி:
இப்போதிருக்கும் சூழ் நிலையில் புதிய கணக்காளர் நியமனம் நடக்க  கொஞ்சம் கால தாமதம் ஆகும் எனவே ……

வியாழன், 7 மே, 2020

வீட்டு வேலை -2

நண்பர்களே,


வேலை தொடர்கிறது…


முந்தய பதிவை வாசிக்க  வீட்டுவேலை


நல்லதொரு வேலை , கை  நிறையா(!!) சம்பளம் , என் பேச்சை கேட்டு ஏவல் புரியவும்  சிலர்.

 நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.



என் குழுவில் ஒரு அலுவலக மேலாளர், தட்டெழுத்தாளர்,ரசாயன நிபுணர் கணக்கு பதிவாளர் , காசாளர்  அலுவலக உதவியாளர் , பத்து பனிரெண்டு பேக்டரி ஊழியர்கள்  ஒரு வாகன ஓட்டுநர் இருந்தனர்.

என் பணி:- அரசாங்கத்திற்கும் , கிராம மேம்பாட்டு பயனாளிகளுக்கும், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளுக்கும் இடையில் இருந்து கிராம மக்கள்  படித்த மற்றும் படிப்பற்ற மக்களின்  தகுதிக்கும் , திறமைக்கும் ,   அனுபவத்திற்குமேற்ற  கடனுதவுகளை பெற்றுத்தருவதும் அவற்றை எப்படி பயன் படுத்துவது, மானிய தொகை போக கடனை எப்படி திருப்பி செலுத்துவது , அவர்களின் வாழ்வாதாரத்தை இருக்கும் வசதிகளை கொண்டு எப்படி அமைத்துக்கொள்வது போன்று வழி காட்டுதல். 



இத்தனைபேர் என் சொல்லுக்கு கட்டுப்பட்டிருந்தாலும் , " நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாளும் தெரிந்த தலைவனடா" என்பதற்கேற்ப ;



தமிழ் சினிமாவில், லுங்கி கட்டிக்கொண்டு, முகத்திலே மரு   வச்சிக்கிட்டு நம்பியார் , "டேய்  கபாலி"  அப்(ப)டி கூப்பிட்டவுடனே , கையை கட்டிக்கொண்டு "சொல்லுங்க எஜமான்னு" போய்  நிக்கிற கபாலிபோல அல்லாமல் , அலுவலக  மற்றும் தொழில் தர்மத்திற்கும், கல்வித்தகுதி , பதவிக்கு தகுந்த பக்குவத்துடன் நடத்தும் செயல் அலுவலர் கண்ணியவான்  ஒருவரும் இருந்தார்-(டாக்டர். செபாஸ்டின்) 

நாட்களும்  சென்றுகொண்டிருக்க ஒரு நாள் காலை செயல் அலுவரின் அறைக்கு அழைக்கப்பட்டேன்.

 சம்பிரதாய நலம் விசாரிப்பு, முகஸ்துதிக்குபின்  "கணக்கு பதிவாளரிடம் இருந்து ஒரு தொலை  பேசி செய்தி, " வங்கி தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடை பெற்ற நேர்முக தேர்விலும் தேர்வு  பெற்றதினால் , நம்ம (திருப்பதி மகேஷ் போல) தூர மாநிலத்தில் ட்ரைனிங் செல்ல ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் இனி பணிக்கு வர மாட்டார்.

எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இத்தனை துரிதமாக நிகழும் என்று நினைக்கவில்லை என்றார். வேலைக்கு சேர்ந்து சில மாதங்களே ஆன எனக்கு இந்த எல்லா செய்திகளும்  எதிர்பாராதவைதான்.

பிறகு நிதானமாக அவர் சொன்னது எனக்கு இன்னும் ஒரு எதிர்பாராத செய்தி.

அது என்ன செய்தி?

அதற்குள் என்ன அவசரம் ?

நாளை சொல்கிறேன்.

அதுவரை.

நன்றி,

மீண்டும்  ச(சி )ந்திப்போம். 

கோ

செவ்வாய், 5 மே, 2020

வீட்டுவேலை

பத்து  - பாத்திரம் 

நண்பர்களே,

ஆரம்ப பாட சாலையில் முதலாம் வகுப்பு படிக்கும்போதே,ஆசிரியரான என் தந்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததிந்த வீட்டுவேலை எனப்படும் ஹோம்  ஒர்க்.

தொட்டில் பிள்ளை!?

பாத பூஜை!!

நண்பர்களே,

மருத்துவர்  செவிலியர்  மருத்துவ பணியாளர்கள் , காவல் துறையினர் மற்றும் சுகாதார தொழிலாளர்கள்  அத்தனை போரையும் கௌரவிக்கும் பொருட்டு உணவு பொருட்கள் வழங்குதல் மலர் மாலைகள் சூட்டுதல்  , பாத பூஜைகள் செய்தல் இன்னும் பல படிகள் உயரே சென்று ராணுவ  விமானத்தில் இருந்து பூச்சொரிதல் போன்று பலவகைகளில் ஆராதனை செய்யப்படும் போற்றுதலுக்குரிய நற்செயல்கள்  பாராட்டுக்குரியவை.

ஞாயிறு, 3 மே, 2020

தடை நீங்கும் - தள்ளி நிற்போம்!


விடை தோன்றும் -விழித்திருப்போம் !!


நண்பர்களே,




 பேரிரைச்சலோடு பெருகி ஓடும் காட்டாற்று வெள்ளத்திற்கு தடை  போட முடியுமா?




கட்டவிழ்ந்து சுற்றி சுழன்றடிக்கும் சூறாவளி காற்றைசுற்றி  வேலி கட்ட  முடியுமா?




அலையாடும் கடல் தன்  நிலை மாறி பொங்கி பிரவாகமாக உருவெடுத்து சுனாமி என்ற பெயரோடு ஊரை சூறையாடும் களேபரத்தை நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க முடியுமா?