என்ன ?
இசை கலைஞன் என்றறிந்து:
வீணையை பரிசளித்தது
விரல்களை பறித்துக்கொண்டது
பதறிப்போனேன்
கவிஞன் என்றறிந்து:
எதுகையை எமக்களித்தது
எக்காளமிட்டேன்
மோனையை முறித்துப்போட்டது
முடங்கிப்போனேன்
பயணி என்றறிந்து:
படகினை கொடுத்தது(ம்)
பரவசமானேன்
துடுப்பினை துண்டித்துப்போட்டது
துடித்துப்போனேன்
பசி என்றறிந்து:
இலை எமக்காய் விரித்துப்போட்டது
இளகிப்போனேன்
விருந்தினை அது சுவைத்தது
இடிந்துப்போனேன்
தாகம் என்றறிந்து:
நீரூற்றை காட்டியது
பருகச்சென்றேன்
குரல்வளையை நெருக்கிக்கொண்டது
குமுறிப்போனேன்
தெளிவு வேண்டுமே:
போதிமரம் புத்திபுகட்டியது
சமூகத்து சாயல் எதுவென்று.
அது:
"மடியினில் மல்லிகைக்கூடை
மனதினில் கருவாட்டு வாடை" என்று
நன்றி
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
முடித்ததும் அருமை... உண்மை...
பதிலளிநீக்குதனப்பால்,
நீக்குசமூகத்தை பாராட்டியமைக்கு மிக்க நன்றி
நட்புடன்
கோ
போதிமரம் புத்திபுகட்டியது
பதிலளிநீக்குசமூகத்து சாயல் எதுவென்று.
அது:
"மடியினில் மல்லிகைக்கூடை
மனதினில் கருவாட்டு வாடை" என்று//
மிக மிக அருமையான வரிகள் நண்பரே!
அன்பிற்கினிய நண்பர்களே,
பதிலளிநீக்குதங்கள் சமூகம் வந்த எந்தன் சமூகத்தை பாராட்டிய உங்கள் சமூகத்துக்கு மிக்க நன்றி.
நட்புடன்
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குசமூகத்தைக் காலம் தாழ்ந்து கண்டு கொண்டிடர்கள் போலும்,,,,,,,,
நன்றி.