பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 22 மே, 2015

" மாலை முரசு - மனசெல்லாம் சொகுசு"

வெற்றி கொட்டும் !!


நண்பர்களே,

எங்கள் ஊரின் பல சிறப்புகளுள், கோவில்கள், மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், காவலர் கல்லூரிகள், சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட ஆறு, மலைகள்,வரலாற்று சிறப்பு மிக்க , எங்கள் ஊரையும் பக்கத்திலுள்ள ஊரையும் இணைக்ககூடிய சுரங்கபாதைகள் கொண்ட பழங்கால அதே சமயத்தில் இன்னும் கம்பீரமாகவும் வலிமையுடனும் காணப்படும் உபயோகபடுத்தபட்டு கொண்டிருக்கும்  கட்டிடங்கள் போன்றவற்றிற்கு அடுத்து,

வெள்ளி, 15 மே, 2015

"சுபயோக சுபதினங்கள்"

பெரியோர்களால் நிச்சயித்த (பல) வண்ணம் !!

நண்பர்களே,

இந்தியாவை விட்டு கடல் கடந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இழந்து தவிக்கும், இந்தியாவில் மட்டுமே அனுபவித்து மகிழ்ந்த பல அருமையான விஷயங்களுள் தலையான ஒன்று என் குடும்பத்தினரின் அன்பும் என் நண்பர்களின் நட்பும் என்று சொன்னால் அது மிகை அல்ல.

செவ்வாய், 12 மே, 2015

"ஆயத்தம் ஆச்சரியம்"!!!!


நான்  தயார் நீ  தயாரா?


மழை  வரும், வெயில் அடிக்கும் என்று அறிந்து குடையை கூடவே கொண்டு செல்பவர்களை நமக்கு தெரியும்

அதே போல, காலை எழுந்த உடன் பசிக்கும் என்று தெரிந்து அதற்கான உணவு பொருட்களை முன்தினமே தயார்படுத்துவதும் அடுத்த வேளை  உணவிற்கு அதை முன்னமே தயாரித்து வைத்து வேளா வேளைக்கு சாப்பிடுவதும் உலகில் சர்வ சாதாரணமாக நடக்கும் தயார் நிலை வேலைகள் தான்.

சனி, 9 மே, 2015

"கோபால் பல்பொடி".



வேரடி மண்.


நண்பர்களே,

பல வருடங்களுக்கு முன் வானொலியில் கேட்ட ஒரு விளம்பரம்:

இந்தியா இலங்கை, மலேசியா சிங்கபூர் ஆகிய நாடுகளில்  மக்களின் பேராதரவு பெற்ற  பல்பொடி, "கோபால் பல்பொடி".

Image result for pictures of gopal tooth powder

இந்த விளம்பர வாசகம் சமீபத்தில் என் மன கிடங்கில் இருந்து என் காதுகளில் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.

வெள்ளி, 8 மே, 2015

"டீயா" வேலை செய்யனும் குமாரு!!

இலைமறைவு

நண்பர்களே,

மனித குலம், ஏற்ற இறக்கங்கள், உயர்வு, தாழ்வு, வசதி, வறுமை,ஆண்,பெண் சாதி, மதம்,  மொழி, இனம், இன்னும் எத்தனயோ வேறுபாடுகளை பொருட் படுத்தாமல், உலகின் எல்லா மனிதரும் தினமும் சுவைத்து மகிழக்கூடிய "பானங்களில்" தண்ணீருக்கு அடுத்தபடியாக பெருமளவிற்கு பயன்படுத்தப்படும் பானம் தேநீர் என்றால் அது மிகை அல்ல என்று சொல்லவும் வேண்டுமோ?

சனி, 2 மே, 2015

"கொடுத்து வைத்தவர்கள்"


கடன்-வட்டி

நண்பர்களே,

நாம் அன்றாடும் கேட்க்கும் சொற்றொடர்களுள் , உனக்கென்னப்பா, நீ "கொடுத்து வைத்தவன்", அவனுக்கென்னப்பா அவன் "கொடுத்து வைத்தவன்", அவர்கள் "கொடுத்து வைத்தவர்கள்".....இவர்கள் "கொடுத்து வைத்தவர்கள்" .... போன்றவையும் அடங்கும்.

வெள்ளி, 1 மே, 2015

"கண்ணும் GUNம் NOKIA"

கொள்ளை கொள்ளும் மாபியா


நண்பர்களே,

இந்த நாட்டுக்கு  (இங்கிலாந்து) வந்த புதிதில் சில விஷயங்களால், ஓரளவிற்கு மனதளவில் வருத்தமாகவே இருந்தேன், இந்த வருத்தத்தை போக்க முடியாது என்பதால் அந்த வருத்தத்தை வாடிக்கையாக்கி பழகிக்கொள்ள சில காலங்கள் ஆனது.