பெருந் தூணெனவே!!
நண்பர்களே,
ஆதி பகவன் முதற்றே உலகு எனும் பொதுமறை போதனையின் பொக்கிஷ வாக்கிற்கிணங்க இந்த புதிய நாளை இறை வழிபாட்டோடு துவங்குவது ஏற்புடையதாக இருக்கும் என கருதுகிறேன்.
அவ்வகையில் :
"ஆதியுமாய் அந்தமுமாய்
அனைத்து உயிர்க்கும் தந்தையுமாய்
ஜோதியுமாய் நீதியுமாய்
அகிலலோக அதிபனுமாய்
விண்ணிலே வீற்றிருந்தும்
விளங்காத விந்தையென
மண்ணிலும் என்னிலும்
மாட்சியுடன் ஆட்சிசெய்யும்
மறை போற்றும் மா மணியே!
மாசில்லாத் திருச்சுடரே!! - எம்மின்
கறை நீக்கி கரை சேர்ப்பாய்
கரம் குவித்து பதம் பணிந்து
இந்த புதிய நாளில் - என்
பயணத்தை தொடர்கிறேன்
துணை நிற்பாய் பெருந்
தூணெனவே.
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக