பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 22 ஜூலை, 2016

மருந்து வச்சிட்டாங்கய்யா.

 நாட்டு மருந்து !!

நண்பர்களே,

சமீப காலம் வரை நண்பர்களாக திகழ்ந்த நம்மில் ஒருவருக்கொருவர் மனம் புண்படும்படி ஏதேனும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் ஏற்பட்டு, அதனால் உறவில் விரிசல் ஏற்படுமாயின்  நம் மனம் படும் வேதனையை சொல்லி மாளாது.

வியாழன், 21 ஜூலை, 2016

கவுண்டமணி - வைரமுத்து

"அப்போ செந்தில்....? "
நண்பர்களே,

பல வருடங்களாக நம் தமிழ் மண்ணில் பல விதமான வழக்கு சொற்கள் புதிதாக உலாவந்துகொண்டிருக்கின்றன.

புதன், 20 ஜூலை, 2016

இரண்டே இரண்டு கண்ணே கண்ணு.

கண்ணும் கருத்தும்.

நண்பர்களே,

"ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு" என்று பலரும் பலமுறை சொல்லியும் இருப்போம்  சொல்லவும் கேட்டிருப்போம்.

திங்கள், 18 ஜூலை, 2016

உலகே மா(சா)யம்!!

மெய்ப்பொருள் காண்பதரிது!!

நண்பர்களே,

பழைய காலத்து மனிதர்களுள்  பெரும்பான்மையானவர்கள், சூது வாது தெரியாத வெள்ளந்தி மனிதர்களாக வாழ்ந்திருந்தனர் என்பதை  வரலாறுகளும், வழி வழியாக சொல்லப்பட்ட உண்மை சம்பவங்கள் மூலமும் நாம் அறிவோம்.  

வெள்ளி, 15 ஜூலை, 2016

வேண்டாம் விட்டுடுங்க.

ஆமா நீங்க நலமா?

நண்பர்களே,

சமீபத்தில் ஊரில் தங்கி இருந்த நாட்களில் மிக முக்கியமான வேலைகள் இருந்தபோது மட்டுமே வெளியில் சென்று வந்தேன் மற்றபடி வீட்டிலேயே குடும்பத்தினருடன் தங்கி இருந்தேன்.

வியாழன், 14 ஜூலை, 2016

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ??

மகுடம் சூடு.!!

நண்பர்களே,

மனிதனின் வாழ்வோடு  நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டற  கலந்து மனித வாழ்வியலை வளம்பெற செய்வதில் கால்நடைகளின் பங்களிப்பு மிக மிக அதிகம்.

செவ்வாய், 12 ஜூலை, 2016

பதிவும் - பதிலும்

கைமேல்  பலன்!!.

நண்பர்களே,

பதிவர்களும் பதிவரல்லாத பெரும்பான்மையானவர்களும், பெரும்பான்மையான நேரங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி, "பதிவுகளால் என்ன பயன்?" என்பதே.

வெள்ளி, 8 ஜூலை, 2016

நேர் "கொன்ற" பார்வை.

"கை (துசெய்யும்) தொலைபேசிகள்"  
நண்பர்களே,

பேருந்தில் பயணித்துக்கொண்டே, அக்கம் பக்கம் என்ன நடக்கின்றது என்று கொஞ்சம் கண்களை அகல விரித்து ஆழ்ந்து கவனித்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்த எனக்கு பல விஷயங்கள் பார்வையில்பட்டு மறைந்தாலும் ஒரே ஒரு காட்சி மட்டும்  மனதில் புகுந்து கொஞ்சம் சிந்திக்க தூண்டியதின் விளைவே இந்த பதிவு.

வெள்ளி, 1 ஜூலை, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகா.!!

மணக்குமா?  இனிக்குமா?

நண்பர்களே,

இது என்ன தலைப்பு?

மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றுதானே கேட்டிருக்கின்றோம்.

சரிதாங்க, நானும் மல்லிகை என்றுதான் சில நாட்கள் வரை கேட்டிருந்தேன்.

ஆனால் சமீபத்தில் ஊருக்கு சென்றபோதுதான் இந்த மல்லிகாவை குறித்து அறிந்து சுவைத்தேன்.

என்ன சுவைத்துகூட விட்டீரா?

ஆமாங்க.

இப்போ நம்ம ஊரில் சரியான மாங்காய் சீசன் என்பது நாம் அறிந்ததே.

 இந்த வருடம் சந்தைக்கு வந்த மாங்காய்களில் ஒருவகை மாங்காய்க்குத்தான் இப்படி பெயர் வைத்துள்ளனர்.  மல்லிகா என்று.

(இது வேற ரகம் - ஒருவேளை கனகவோ?)
.
சுவைமிக்க அந்த மாம்பழம்  நண்பரின் தோட்டத்தில் இருந்து  கொண்டு கொடுக்கப்பட்டது.  

எந்த மானுடனும் இதுவரை கண்டிராத சுவைகொண்ட இந்த மாம்பழத்தின் சுவையினை தேனுடன் தான்  ஒப்பிட வேண்டும் அத்தனை இனிப்பு.

மல்கோவா மாம்பழத்தை விட மூன்று மடங்கு பெரிது.

ஒரு பழத்தை துண்டுதுண்டுகளாக அரிந்தால் குறைந்த பட்சம் பத்துபேர் வரை சுவைக்கலாம் இந்த மல்லிகாவை.

அதன் விதையும்  மிக மிக தட்டையாகவே உள்ளதால் சதை பிடிப்பு  அதிகம்.

ஊரில் இருந்து திரும்பி வரும்போது கொண்டுவந்து அரிசி மூட்டையில் வைத்து பழுக்க வைத்து பதம் பார்த்தோம்.  ஆஹா.... என்னே சுவை.

வேண்டுமென்றால் கண்டுபிடித்து சுவைத்துப்பாருங்கள் மல்லிகாவை.

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

வியாழன், 30 ஜூன், 2016

"Money தா" பிமானம்

நமக்கு என்ன ஆச்சி  ?? 


நண்பர்களே,

சமீபத்தில் சென்னையில் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த துணிகர கொலை சம்பவம் என்னை மிகவும் பாதித்தது என்று சொல்வதைவிட, அந்த இளம்பெண்ணின் குடும்பத்தை எப்படி பாதித்திருக்கும் என்று கற்பனைகூட செய்ய முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

செவ்வாய், 28 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!--4


 மௌன சம்பாஷணை!!.

நண்பர்களே,

 தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க, அம்மா இங்கே வா! வா!!--3

தான் வருவதற்குள் -  தன்னை காண்பதற்குள் கண்மூடிப்போன அம்மாவை மண்மூட காத்திருக்கும் கந்தக செய்தியால் பேரதிர்ச்சியில் மூழ்கி இருந்தவர் தன்னிலை மறந்தவராய், தன் தாயாரின் ஆன்மாவோடு மானசீகமாக தன் மனதிற்குள் பற்பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாராம்.

திங்கள், 27 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!--3

"தலை மகனுக்கு தலைப்பு செய்தி"

நண்பர்களே,

 தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க, அம்மா இங்கே வா! வா!!--2

காரில் சுமார் 2 மணி நேர பயணத்தின்போது, நாட்டின் வளர்ச்சி, சாலை பராமரிப்பு,  குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரின் நலன் பற்றிய விசாரிப்புகள், தொடர்பான பேச்சுக்கள் இடம் பெற்றன.

வெள்ளி, 24 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!--2



இனிய பயணம்.

நண்பர்களே,

 தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க.....அம்மா இங்கே வா! வா!!

விமான நிலையத்தில் தன் அம்மாவை நினைத்து கண்ணீரோடு இறைவனிடம் பிரார்த்திக்கொண்டிருந்தவரின் தொலைபேசி சிணுங்கிடும் அதிர்வலைகளால் தன் இயல்பிற்கு திரும்பியவருக்கு, தன் சகோதரியின் அழைப்பு.

புதன், 22 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!...



வேண்டாம் ... நான் வருகிறேன்.

நண்பர்களே,

என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்துவரும் உங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பரிட்சயமானவரும், என் நிழலாக விளங்குபவரும்  வெளி நாட்டில் வசித்துவருபவருமான ஒருவரின் வாழ்க்கையில் சமீபத்தில், அதாவது 30 நாட்களுக்கு முன்,  ஏற்பட்ட நிகழ்வு ஒன்றை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க விழைகின்றேன்.

வெள்ளி, 20 மே, 2016

"நான் தான் அப்பவே சொன்னேனே"


இப்ப பார்த்தீர்களா?

நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்க பட்ட தமிழக மற்றும் வேறு பல மாநிலங்களின் தேர்தல்களை குறித்து  ஒரு சிலர்  , நான் தான் அப்பவே சொன்னேனே இப்படித்தான் ஆகும் என்று, என்று சொல்பவர்கள் இப்போது ஆங்காங்கே இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

செவ்வாய், 17 மே, 2016

தொலை(ந்துபோன)பேசி எண்கள் - 2

 தொடர்பு எ(இ)ல்லைக்கு அப்பால். 

நண்பர்களே,

தொடர்பு தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க.. தொலை(ந்துபோன)பேசி எண்கள்.

மனதிற்குள் மடை திறந்த மகிழ்ச்சி வெள்ளம், அதே  சமயத்தில் என் கண்களில் ஆனந்த  கண்ணீர் துளிகள்..

வெள்ளி, 13 மே, 2016

தொலை(ந்துபோன)பேசி எண்கள்.

மீண்டும் தொடர்பில்...

நண்பர்களே,

பள்ளி, கல்லூரியில் பல வருடங்கள் ஒன்றாக இணைந்து படித்திருந்தாலும், படிப்பிற்கு பின்னர், அவரவர் பாதையில் பயணிக்க நேரும்போது  நண்பர்களை பிரிந்து செல்வது வாடிக்கை.

புதன், 11 மே, 2016

"தலை(முறை) காக்கும்"

அ(ம்மா)தர்மம் ...தாயே..!!..  

நண்பர்களே,

தர்மம் தலைகாக்கும்  என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு சொல்லபட்டுகொண்டிருக்கும் ஒரு பழமொழி.

செவ்வாய், 10 மே, 2016

"MONEY ஓசை வரும் முன்னே"

 "சின்ன மீன் பெரிய மீன்"!!

நண்பர்களே,

சமீபத்தில் கேட்ட தொலைகாட்சி செய்தியில், இதுவரை, சட்டத்திற்கு புறம்பாக வீடுகளிலும், பண்ணைகளிலும் , குடோன்களிலும் வாகனங்களிலும் பதுக்கி, தேர்தலை முன்னிட்டு, பட்டுவாடா செய்யவும் , தேர்தல் செலவுகளை உச்ச வரம்பிற்கு மீறி ஆடம்பரமாக செலவழிக்கவும் வைக்கபட்டிருந்த பணத்தில் பிடிபட்ட பணம் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் என தகவல் சொல்லக்கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.

திங்கள், 9 மே, 2016

"படிக்காத மேதைகளுக்கு"


சுய புராணம்!! 

நண்ப(ரே)ர்களே,

தமிழ் பெற்றோர்களின் தவப்புதல்வனாக பிறந்ததால் மட்டுமின்றி, பள்ளி நாட்களில் தமிழை எனக்கு விருப்பபாடமாக்கிய தமிழாசிரியர்களின் பாடம் கவிதை,  நடத்திய விதங்களும், தமிழின் சிறப்பான படைப்புகள்

வெள்ளி, 6 மே, 2016

"கொல்"வதெல்லாம் உண்மை!!


"வெள்ளை"(யர்) அறிக்கை"

நண்பர்களே,

நான்கு சுவர்களுக்குள்  நடக்கவேண்டிய எத்தனையோ அந்தரங்க - தனி மனித, தனிப்பட்ட குடும்ப விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டி அம்பலபடுத்தி அதில் ஆதாயம் காணும் ஊடகங்களில்...

வியாழன், 5 மே, 2016

"தேவதூதனும் எருமை மாடும்"

செல்பி !!- குல்பி !!

நண்பர்களே,

வளர்ந்துவரும் நாகரீக உலகில் மனித பிறவியின் இன்றியமையாத தேவைகளுள் உணவு உடை உறையூளுக்கு இணையான  மற்றொன்று  உடல் ஆரோக்கியமும் அதற்கான நல்ல மருத்துவமும் என்றல் மிகை அல்ல.

புதன், 4 மே, 2016

"வானவில்லும் வாக்குபதிவும்"

"சிறும்புள்ளி - கரும்புள்ளி - செம்புள்ளி ".


நண்பர்களே,

நாளை இங்கிலாந்திலுள்ள 124 மாநகராட்சிகளுக்கான மேயர்,மற்றும் கவுன்சிலர் தேர்தல் நடைபெற இருக்கின்றது.

ஞாயிறு, 1 மே, 2016

"வேலை வெட்டி"

நிற்ககூட  நேரமில்லை!!


நண்பர்களே,

நம்மில் யாராவது எந்த வேலைக்கும் போகாமல் இருந்தால் பார்ப்பவர்கள் கேட்பார்கள், வேலைக்கு போகலையா? என்று.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

"ஆசை முத்தம் தா".

ரொம்ப அவசரம்....

நண்பர்களே,

பணம் இல்லை வசதி இல்லை என்றாலும், இருக்கும் சொற்ப பணத்திலும் சுகமாக வாழும் மனிதர்கள்தான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் என்றால் அது மிகை அல்ல.

வியாழன், 28 ஏப்ரல், 2016

"உண்மையான போலி மருத்துவர்கள்"

பித்தலாட்ட ஸ்பெசியலிஸ்ட்!!!


நண்பர்களே,

கடந்த இரண்டு நாட்களாக,இங்கிலாந்தில் இருக்கும் ஜூனியர் டாக்டர்கள் புதிதாக வந்திருக்கும் அரசு செயல் திட்டங்களில் உடன்பாடு இல்லாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றர்கள்.

புதன், 27 ஏப்ரல், 2016

வியாபாரம் - துலாபாரம்!!

லாபம் யாருக்கு?

நண்பர்களே,

போட்ட முதலுக்கு ஏற்ற வருமானம் கிடைக்குமா, அதில் செலவுகள் போக எவ்வளவு லாபம் கிடைக்கும் அல்லது லாபம் கிடைக்காமல் வெறும் அசலாவது திரும்புமா அல்லது நஷ்டம் ஏற்பட்டு கையை கடிக்குமா என்றெல்லாம் கணக்குபோட்டு பார்த்து செய்யும் செயலுக்கு வியாபாரம் என்று பெயர்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

போயே போச்சாமே ?

நெசம்தானா?


நண்பர்களே,

கடந்த  சில நாட்களுக்கு முன் ஒரு பட்டி  மன்ற நிகழ்ச்சி குறித்து நண்பர்களோடு பேசிகொண்டிருந்தபோது;

சனி, 23 ஏப்ரல், 2016

கோஹி "நோர்முஸ்க்கோ".

பட்டை (தீட்டிய)  நாமம்!!

உலக பிரசித்தி பெற்ற, பல நூற்றாண்டுகளையும் பல ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து இன்னும் கூட அறுதி இட்டு உறுதியாக மதிப்பீடு செய்ய முடியாத விலை உயர்ந்த

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

வந்துட்டான்யா...... வந்துட்டான்யா!!

நினைத்தீர் வந்தேன் !!


நண்பர்களே,

கடந்த சில வாரங்களாக பதிவுகள் எதுவும் என் பட்டறையில் இருந்து வெளிவரவில்லை என்ற ஏக்கம் உங்களில் பலருக்கு இருந்ததை நீங்கள் வெளிபடுத்திய அர்த்தமுள்ள ஆதங்க வெளிப்பாடுகள்  மூலம் அறிந்துகொண்டேன்.

ஞாயிறு, 6 மார்ச், 2016

உப்பிட்ட (தமிழ்) இங்லீஷ் மண்ணை.....

நான் மறக்கமாட்டேன்....

நண்பர்களே,

சூப்பர் ஸ்டார் திரு ரஜினி காந்த் அவர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம், பாபா.  அதில் அவர் பாடுவதாக அமைந்திருந்த ஒருபாடலில் "உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன், நான் உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன் " எனும் வரிகள் வரும்.

சனி, 5 மார்ச், 2016

அந்த சிலமணி நேரம் ??!! --5

லைசென்ஸ் -சஸ்பென்ஸ்-"நான்" சென்சு!!

நண்பர்களே,

முன் பதிவை படிக்க .. அந்த சிலமணி நேரம்--4

டைரியின் ஒவ்வொரு பக்கமும் அதிர்ச்சிகளும் ,பயங்கரங்களும், மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவைகளின் தொகுப்பாக இருந்ததை கண்டு காவல்துறை அதிர்ந்து போனது.

வியாழன், 3 மார்ச், 2016

அந்த சிலமணி நேரம் ??!! -- 4

டிரைவரின் டைரி குறிப்பு.!!


நண்பர்களே,

முன் பதிவை படிக்க ...அந்த சிலமணி நேரம் ??!! --3

நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த பிரேத பரிசோதனையின் முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், பல மர்ம முடிச்சிகள் கட்டவிழ்க்கபட்டன.

செவ்வாய், 1 மார்ச், 2016

அந்த சிலமணி நேரம் ??!! --3

மர்ம இருள்!!

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க...அந்த சிலமணி நேரம்--2 ??!!


அந்த கார் நிறுத்த பட்டிருந்த இடத்தை சுற்றிலும் ஒரு வெள்ளை கூடாரம் அமைத்து உள்ளே என்ன நடக்கின்றது என்று வெளியே இருக்கும் யாருக்கும் தெரியாதபடி மேலும் சில ஆய்வு நடவடிக்கைகள் அந்த சம்பவ இடத்தில் நடந்துகொண்டிருந்தது.

வியாழன், 25 பிப்ரவரி, 2016

அந்த சிலமணி நேரம்??!!--2

கூடாரத்திற்குள் ....


நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க ..... அந்த சிலமணி நேரம்??!!

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவை கடந்து சுமார் 1.00 மணி அதி காலையில் இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் பிரதான எட்டு வழி சாலையில் வாகன நடமாட்டங்கள் குறைந்திருந்த அந்த சமயத்தில், நெடுஞ்சாலை விதிகளின்படியான அதிக பட்ச வேகமான 70 மைல்  வேகத்தில் ஒரு கார் பயணித்து கொண்டிருந்தது.

புதன், 24 பிப்ரவரி, 2016

அந்த சிலமணி நேரம்??!!

கா - ரோடுதான்.... .... !

நண்பர்களே,

நாம் நம் வாழ்நாளில் முதன் முதலில் பார்க்கும், அல்லது, கேள்விப்படும் வழக்கத்திற்கும் நடை முறைகளுக்கும் மாறான செயல்களையும் செய்திகளையும் மிகவும் வியப்புடனும் திகிலுடனும் , அல்லது பரவசமுடனும் தான் பாப்போம், உணர்வோம்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

அடுத்த ஜென்மத்தில் அமெரிக்க குதிரை !!!

 தண்ணி தொட்டி தேடி வந்த... !!

நண்பர்களே,

ஒரு சில விஷயங்களில் ஒருசிலருக்கு ஓரளவிற்குதான்  புத்திமதி சொல்ல முடியும், அல்லது ஓரளவிற்குதான்வழி காட்ட முடியும்,அல்லது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் அழைத்து செல்ல முடியும் மற்றபடி அவர்களை, நாம் சொல்லும்  அல்லது நாம் காட்டும் வழியை அல்லது நாம் போதிக்கும் போதனைகளை ஆலோசனைகளை ஏற்க வைக்க முடியாது.

திங்கள், 15 பிப்ரவரி, 2016

தானமாக கிடைத்த பசுமாடு !!

"ரகசிய காதலி"

நண்பர்களே,

அலுவலக ஊழியருள், வார இறுதி விடுமுறையில் செல்வோரும், ஓரிரு வார அல்லது மாத  விடுமுறையில் செல்வோரும் , தங்கள் விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் வேலைக்கு திரும்பும் போது, விடுமுறை எப்படி இருந்தது என்று கேட்டால், ஏகோபித்த பதிலாக அனைவரும் சொல்லுவது :

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

கல்யாண சாப்பாடு போட "வா"

வழு(ழ) க்கு சொற்கள் 
நண்பர்களே,

நமது தமிழகத்தில் உலா வந்த  பல வழக்கு சொற்கள் - (பழ)மொழிகளுள், "வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்" என்ற சொற்றொடரை முன்பெல்லாம் கேட்டிருப்போம்.

வியாழன், 4 பிப்ரவரி, 2016

தீவிர(வி)வாத சிறுவன் - வயது பத்து!!

"அழுத்தம் திருத்தம்"

நண்பர்களே,

இன்றைய உலக சூழ்நிலையில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் திகிலுடனும் அச்சத்துடனும் தான் இருக்க முடிகிறது.

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

லில்லிபுட்(டு) !!!

(வி)சித்திர படைப்பு !! 


நண்பர்களே,

அயர்லாந்தை சார்ந்த பாதிரியார் ஜோனத்தன் ஸ்விப்ட்  எனும் நாவல் ஆசிரியரால் 1726 ஆம் ஆண்டு எழுதப்பட்ட "கல்லிவரின் பிரயாணம்" (Gulliver's Travels) 

செவ்வாய், 19 ஜனவரி, 2016

உர(ட)ல் மறைந்த மாயம்.

அரிசி குத்தும் அக்கா மகளே!!

நண்பர்களே,

மூச்சுக்கு முப்பத்தெட்டு தடவைகள், நம் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், பாரம்பரியம் என்று சில  விஷயங்களை பேசும் நாம் பல விஷயங்களில் பழமையை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம் என்பதை நினைத்து பார்க்க கூட மறந்து போய்விட்டோம்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

விழி மலரும் விழா காலங்கள்

"புன்னகை வந்தனம்"

நண்பர்களே,

தேம்ஸ் கரை தாண்டா  புரண்டோடும் நதி வெள்ளம் ஜதி பாடும் பின்னணி தாளம் கேட்டு பிண்ணப்பட்ட இந்த பதிவினில் கொஞ்சம் பதியுங்கள் உங்கள் பார்வைகளை, பகிருங்கள் உங்கள் உறவுகளோடு  இந்த கோர்வைகளை.

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்க"low" பொங்கல் !!

எளிமையே இனிமை 

நண்பர்களே,

வருடத்திற்கு ஒருமுறை வந்துபோகும் இந்த உன்னத திருவிழாவை கொண்டாட ஓராண்டாக காத்து இருந்தோம்  என்பது உண்மைதான்.

மஞ்சு விரட்டு!!

விரட்டியது யார்??

நண்பர்களே,

மஞ்சு விரட்டுக்குபோன  இளைஞர் ஒருவரை  போலீஸ் வலைவீசி தேடுவதாக ஒரு தகவல் கிடைத்தது.

புதன், 13 ஜனவரி, 2016

கட்டு அவிழ்ந்தது!!


முடிச்சி விழுந்தது. !!
நண்பர்களே,

தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் அல்லது அறுவடை திருநாள், அல்லது நன்றியின் நன்னாள் என்று வரபோகும் தை பொங்கல் திருநாளை எத்தனை விதங்களில் அழைத்தாலும் அவை அத்தனையும் ஒட்டு மொத்தமாக  இன்பத்தை நம் இதயங்களில் பொங்கச்செய்யும் மகத்துவ நிறைவையும் குதூகல  மகிழ்வையும் கொடுக்கும் , இயற்கையோடு இயைந்த ஒரு உன்னதமான பண்டிகை பொங்கல் திருநாள்.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

பிரிட்டனில் நாடி ஜோசியர்!?!?!

 நாள்  நட்ச்சத்திரம் 

நண்பர்களே,

நம் நாட்டில்  சாஸ்த்திரங்கள் ,சாங்கியங்கள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் சடங்குகள்,தோஷங்கள் பரிகாரபூசைகள்,

வெள்ளி, 8 ஜனவரி, 2016

நீ சொன்ன வார்த்தைகள் ....

மறைந்தாலும் மறையாது !!


நண்பர்களே,

நேற்றைய பதிவினூடே, (கண்மணிபோல்) புத்தாண்டின் முதல் நாள் நான் கேட்ட பாடல் ஒன்றை நாளை சொல்வதாக சொல்லி இருந்தேன் அல்லவா? அதை பற்றித்தான் இன்றைய பதிவு.

வியாழன், 7 ஜனவரி, 2016

கண்மணிபோல்

நன்றி - நம்பிக்கை

நண்பர்களே,

புத்தாண்டின் முதல்நாள் காலையில் ,நம்மில் பெரும்பான்மையானோர், நல்ல செய்திகள் கேட்பது  அல்லது நல்ல விஷயங்கள்அறிவது , மங்களகரமான சூழல் நமை சூழ்ந்திருக்க விரும்புவது

வெள்ளி, 1 ஜனவரி, 2016

"புத்தாண்டின் முதல்நாள்போல்"

வாழ்த்துக்கள்!!


"புத்தாண்டு மலரட்டும் 
புது வாழ்வு புலரட்டும் 
சத்தான மகிழ்வென்றும்
சளைக்காமல் வளரட்டும்