tag:blogger.com,1999:blog-81010821495160198342024-03-13T23:20:57.444-07:00கோயில்பிள்ளை In செதுக்கல்கள்koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger474125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-37652233500522455692023-11-16T08:41:00.000-08:002023-11-17T02:05:36.142-08:00மருதாணி!<p style="text-align: center;"><u>உள்ளமும் சிவக்கட்டும் !!</u> </p><p style="text-align: justify;">காலம் காலமாக நம் நாட்டில் பல காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒருசில இயற்கை மூலிகை தாவரங்களில் அளப்பரிய பங்கு வகிப்பது. மருதாணி.<span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">நம் நாட்டில் மட்டுமின்றி, பல ஆஃப்ரிக்க நாடுகளிலும் இதுபோன்று வண்ணப்பூச்சுகளை மக்கள் பயன்படுத்துவதை நாம் கேள்வி பட்டிருப்போம்.</p><p style="text-align: justify;">ஆதிமனிதன் தோன்றியகாலம்தொட்டு தனது உடம்பில் பலதரப்பட்ட வண்ண பூச்சுகளை பூசி தனது உடலை சீதோஷணம், விஷப்பூச்சி கடிகள் போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுத்தி இருக்கிறான்.</p><p style="text-align: justify;">இதில் ஆண் பெண் பேதைமை இன்றி இருபாலாரும் பயன்படுத்தி இருக்கின்றனர், இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர் ஆப்பிரிக்க ஆசிய அமெரிக்க பழங்குடிகள்.</p><p style="text-align: justify;">உலகெங்கிலும் இந்தவகையான வர்ணப்பூச்சுகளை மக்கள் பயன்படுத்தினாலும் எவருக்கும் இல்லாத சிறப்பு நம் நாட்டில் உண்டென்றால் அது: இந்த வண்ண பூச்சுகளை பெண்கள் மட்டுமே செய்துகொள்கின்றனர் என்பதே. </p><p style="text-align: justify;">பழங்குடியினர் தட்பவெட்பம் , விஷப்பூச்சிக்கடிபோன்றவற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பயன்படுத்த ஆரம்பித்து நாளடைவில் ஆண் பெண் இன கவர்ச்சிக்காகவும் பயன்படுத்தினர் என்றறிகிறோம்.</p><p style="text-align: justify;">என்னதான் பெண்கள் இயற்கையிலேயே மிகவும் அழகாக இருந்தாலும் அழகிற்கு அழகு சேர்க்கவும் தன்னை பார்ப்பவர் கண்களுக்கு கூடுதல் அழகாகவும் வசீகரமாகவும் காட்டவேண்டும் என்பதற்காக பலதரப்பட்ட ராசயான - வேதியல் பொருட்கள் கலந்த விலை கூடிய அழகு(??) சாதனங்களை பயன்படுத்தினாலும் இவை எல்லாவற்றையும் விஞ்சும் இயற்கை அழகூட்டும் மருதாணி பூசிக்கொள்ள மறுப்பவர் எவரும் இருக்க முடியாது.</p><p style="text-align: justify;">இப்போதெல்லாம், திருமணங்களின்போது இந்த மருதாணி பூசி மணமகளின் முழங்கை, உள்ளங்கைகள், வெளிபுற கைகள், விரல்கள் பாதங்கள், கணுக்கால் , முழங்கால் போன்றவற்றின் அழகை மேலும் மெருகேற்றவென்றே பிரத்தியேகமாக ஒரு நாள் கொண்டாடப்படுகிறதாம். அந்த நாளுக்கென்று பிரத்தியேக ஆடை அலங்காரங்கள், விருந்து கேளிக்கைகள் தடபுடலாக.</p><p style="text-align: justify;">இந்த மருதாணிகள் வயது வித்தியாசமின்றி, குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை பூசிக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர் என்பதும் கண்கூடு.</p><p style="text-align: justify;">இவற்றை பூசிக்கொள்பவர்களின் தோலின் நிறம் என்னவாக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு கூடுதல் அழகை, பொலிவை, வசீகரத்தை, கவர்ச்சியை இந்த மருதாணி பூச்சு, பாரபட்சமின்றி வாரி வழங்குவது இதன் கூடுதல் சிறப்பு.</p><p style="text-align: justify;">எனது சிறு வயது ஞாபகம்: பெண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட எங்கள் கூட்டுக்குடும்பத்தில் விடுமுறை நாட்களில் வெளியூரிலிருந்து வரும் எங்கள் உறவினர்வீட்டு பெண்களும் சேர்ந்து வீட்டுக்கு அருகிலிருந்த மருதாணி குற்று மரத்திலிருந்து பறித்து கொண்டுவரப்பட்ட இலைகளை காம்புகளின்றி களைந்து அதை அம்மியில் வைத்து நன்றாக அரைப்பார்கள் கூடவே கொஞ்சம் எலுமிச்சை பழ ரசத்தை பிழிந்து விடுவார்கள் , பின்னர் முக்கியமான ஒன்றை சேர்க்க வேண்டும்என்பார்கள்.</p><p style="text-align: justify;">அந்த முக்கியமான பொருளை கொண்டுவரும் பணியை என்னிடம் ஒப்படைப்பார்கள்.</p><p style="text-align: justify;">நானும் கஷ்டப்பட்டு அந்த பொருளை கண்டுபிடித்து, சாகசங்கள் புரிந்து சேகரித்து கண்ணாடி பாட் டலில் அடைத்து கொண்டுவருவேன்.</p><p style="text-align: justify;">அப்படி நான் கொண்டுவந்த பொருளை பக்குவமாக அம்மியில் இருக்கும் விழுதுடன் சேர்த்து அரைப்பார்கள். அந்த கூடுதல் பொருளால்தான் கூடுதல் வண்ணம் கிடைக்குமாம்- கிரெடிட் வென்ட் டு மீ! மீ!!மீ!! </p><p style="text-align: justify;">இப்படி அரைத்த கலவையை இரவு சாப்பாட்டிற்கு பிறகு வழக்கமாக படுக்கும் மெத்தைகளுக்கு பதிலாக வரிசையாக பாய்களை விரித்துவிட்டு அதன்மீது அமர்ந்து எல்லோரும் மாறி மாறி எல்லா விரல்களுக்கும் , தவில் வாசிப்பவர் விரல்களில் அணியும் THIMBLE போன்று மொத்தை மொத்தையாக வைத்துகொள்வாரகள் கூடுதலா உள்ளங்கைகளிலும் வைத்துக்கொள்வார்கள்.</p><p style="text-align: justify;">ஏக்கத்துடன் பார்க்கும் என்னுடைய பங்களிப்பிற்கு கூலியாக எனக்கும் வைத்துவிடுவார்கள்.</p><p style="text-align: justify;">அடுத்த நாள் காலையில் எவரது கைகள் அதிகள் சிவந்து இருக்கின்றன என ஒருவருக்கொருவர் பார்த்து மகிழ்வார்கள். அதே சமயத்தில் படுத்திருந்த பாய்களில் சிந்தி இருக்கும் காய்ந்த உதிரிகளை சுத்தம் செய்வதிலும் என்னை இணைத்துக்கொள்வார்கள்.</p><p style="text-align: justify;">இப்படி இயற்கை பொருட்களை கொண்டு செய்யப்படும் எளிய மருதாணிகளை இப்போது பல ரசாயான பொருட்களை கொண்டு செய்யும் வண்ணப்பூச்சுக்கள் ஆளுகை செய்வதை என்னவென்பது?</p><p style="text-align: justify;">அதிலும் இதுபோன்ற மருதாணிஎன்றபெயரில் பல வண்ண குழைவுகளை பூசி அலங்கரிக்க பிரத்தியேகமான கலைஞர்களும் இருக்கின்றனராம்.</p><p style="text-align: justify;">சமீபத்தில் பார்த்த ஒரு மருதாணி செய்முறை காணொளியில் தேவையான பொருட்களின் பட்டியலில் , வெல்லம் இருந்தது, சர்க்கரை இருந்தது, நாட்டு சர்க்கரை இருந்தது, சீராகம் இருந்தது ,குங்குமம் இருந்தது; கலவையும் தயாரானது ஆனால் மருதாணி இலைகள் மருந்துக்குக்கூட இல்லை ஆனாலும் அந்த காணொளி மருதாணி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பது குறித்து.</p><p style="text-align: justify;">இப்படி இயற்கை முறையில் தயாரித்து பூசிக்கொள்ளும் பெண்களின் உள்ளங்கைகளை பார்க்கும்போது நம் உள்ளங்கள் அந்த உள்ளங்கைகளில் குடியேறி குழைந்துபோவதை தவிர்க்க முடிவதில்லை.</p><p style="text-align: justify;">அதிலும் சின்ன குழந்தைகளின் அந்த பிஞ்சு கைகளில் பூசி இருக்கும் இத்தகு மருதாணிகளின் வர்ணஜாலம் மனதில் மகிழ்ச்சி வர்ணம் பூசாமல் - நம் உள்ளத்தில் மழலையில் ஓசையின்றி பேசாமல் நம் உள்ளங்களையும் புன்னகையால் சிவக்கவைக்காமல் போவது அரிது.</p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg5RuWuE4M5fqD10kh6wLp3MQlcrSFoBQ38oS3yuwzWzU6MWYR0ELfPBIS6YCc14fscTvbHETA6S3qv-sw6SXq6e514jZSAMq1aeUkKVNzG1YZGjnIt4QzlF-W8AhLsbAAS-jW9697g-dZbUt62-wgeSod7cb4AoyouTXwmOtZYB5gdTif76rFBOo5b-9Dv" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="250" data-original-width="202" height="240" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg5RuWuE4M5fqD10kh6wLp3MQlcrSFoBQ38oS3yuwzWzU6MWYR0ELfPBIS6YCc14fscTvbHETA6S3qv-sw6SXq6e514jZSAMq1aeUkKVNzG1YZGjnIt4QzlF-W8AhLsbAAS-jW9697g-dZbUt62-wgeSod7cb4AoyouTXwmOtZYB5gdTif76rFBOo5b-9Dv" width="194" /></a></div><br /><br /><p></p><p style="text-align: justify;">வீட்டில் அரைத்த மருதாணியுடன் சேர்த்து அரைக்க என்னிடம் கொண்டுவர சொன்னபொருள் என்னவாக இருக்கும்?</p><p style="text-align: justify;">மருதாணி பூசிய மகளிர் வாசகர்களும் , மருதாணி அரைக்க உதவிய ஆடவ வாசகர்களும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் அது என்னவாக இருக்குமென்று.</p><p style="text-align: justify;"><b>பி கு:</b> மருதாணியின் பெயர்க்காரணம் இப்படியாக இருக்குமோ?: உன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு உன் உள்ளங்கைகள் சிவந்துபோகுமட்டும் முடிந்தவரை அவர்களின் உள்ளங்கள் உவகையினால் சிவந்துபோகுமட்டும் உதவிகளை <b>ம(ரு)று</b>க்காமல் <b>தா</b> <b>நீ.</b></p><p style="text-align: justify;">நன்றி. </p><p style="text-align: justify;">வணக்கம். </p><p style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம் </p><p style="text-align: justify;">கோ </p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-3198964172478531472023-11-14T07:13:00.000-08:002023-11-15T02:57:53.009-08:00பதில் சொல்வார் யாரோ?<p style="text-align: center;"><u> <span style="text-align: justify;">மறை பொருள்!!</span></u></p><p style="text-align: justify;">நண்பர்களே,</p><p style="text-align: justify;">இரண்டு தினங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் அழைப்பின்பேரில் அவரது தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும்பொருட்டு அவர் வீட்டிற்கு சென்றேன்.<span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">இந்தியாவில் அவர்கள் இருந்தவரை தீபாவளி பொங்கல் மற்றும் ஏனைய நமது பண்டிகைகளை எப்படி அனுசரிப்பார்கள் என்பதை குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.</p><p style="text-align: justify;">தமது வீட்டில் உள்ளவர்கள் ஏறெடுக்கும் சடங்கு சம்பிரதாயங்களை சொல்லிக்கொண்டு வந்தவர், இவற்றில் எல்லாம் அவருக்கு கொஞ்சம் கூட ஈடுபாடு இருந்ததில்லை என்றும் பெற்றோரின் வற்புறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு, அரை மனதுடன் கூட இல்லாமல் மனமே இல்லாமல்தான் பங்குபெறுவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.</p><p style="text-align: justify;">ஏன் எதற்காக ஈடுபாடு இல்லாமல் இருந்தீர்கள் என கேட்டதற்கு, எந்த பண்டிகை என்றாலும் அவரது வீட்டில் இறை நம்பிக்கையின் அடிப்படையில் , பூசை, புணஷ்காரங்கள்,வழிபாடுகள் , சாங்கியம், சம்பிரதாயங்கள், நோன்பு போன்றவை நடக்கும் என்றும் வீட்டினர் செய்யும் இந்தவிதமான எந்த செயலிலும் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை என்றார்.</p><p style="text-align: justify;">இப்போது எப்படி என்ற என் கேள்விக்கு, பண்டிகைகள் என்பது இறைவழிபாடு, மத நம்பிக்கையிலான சடங்கு செயலாக கருதாமல், எல்லோரும் சந்தோஷமாக கூடி , சிரித்துப்பேசி, அன்பை பகிர்ந்துகொண்டு, இருக்கும் உணவு பலகாரம் பதார்த்தங்களை கூடி சேர்ந்து பங்கிட்டு உண்பதும் அந்த நாளில் எந்த காழ்புணர்ச்சிக்கும் விரோத சிந்தைக்கும் இடம் கொடுக்காமல் கூடுமானவரை மனதில் அமைதியை கடைபிடிப்பிடித்து, குடும்பத்தினர் , உறவினர் நண்பர்களோடு பிடித்த செயலில் ஈடுபடுவதுமாகத் தான் இருக்கிறேன் என்றார்.</p><p style="text-align: justify;">அப்படியானால், கடவுள் பக்தி - நம்பிக்கை என்பதில்....</p><p style="text-align: justify;">இல்லை நான் ஒரு நாத்திகன் என்றாலும் இதுபோன்ற விழா காலங்களில் நண்பர்களோடு இணைந்து அவர்களது மகிழ்ச்சியில் பங்குபெறவும் தவறுவதில்லை என்றார்.</p><p style="text-align: justify;">விருந்தினராக சென்றிருக்கும் இடத்தில் தேவை இல்லாத மேலும் பல கேள்விகளை கேட்க்காமல், பேச்சை வேறு திசைக்கு பயணித்து அவரது அன்பின் உபசரிப்பை முழுமையாய் அனுபவித்து பின்னர் வீடு திரும்பினேன்.</p><p style="text-align: justify;">அப்படி வீடு வந்தபிறகு என் கல்லூரி நாட்களின் நினைவு என்னை பின்னோக்கி இழுத்து சென்றது.</p><p style="text-align: justify;">சமீபத்து ஆண்டுகள் ஒன்றில் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த நான் என் நண்பர் ஒருவரின் கடைக்கு சென்றிருந்தேன் அவரை பார்ப்பதற்கு.</p><p style="text-align: justify;">ஆனால் அவர் அங்கு இல்லை அதே சமயத்தில் அவரது கடையின் வரவேற்பறை இருக்கைகளில் சிலர் அமர்ந்திருந்தனர்.</p><p style="text-align: justify;">அவர்களுள் ஒருவர் என்னையே உற்று உற்று பார்ப்பதாக உணர்ந்தேன், நாம் நேரடியாக பார்க்கவில்லை என்றாலும் யாரோ நம்மை உற்று கவனிப்பதை என் உள்ளுணர்வு உணர்த்தியது.</p><p style="text-align: justify;">கடையில் இருந்து வெளியில் வந்து அங்கு என்னோடு வந்திருந்தவரிடத்தில் அடுத்து எங்கே போகப்போகிறோம் என்பதுகுறித்து கடை வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது என்னை உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்த நபரும் வெளியில் வந்து, நான் படித்த கல்லூரியின் பெயரை சொல்லி நீங்கள அங்குதானே படித்தீர்கள், உங்கள் பெயர் இதுதானே.... என்னை தெரியவில்லையா என் கேட்டுக்கொண்டிருந்தபோதே, அவர் யார் என்பதை ஓரளவிற்கு யூகித்துக்கொண்டு, உங்கள் பெயர் R.சேகரா? என கேட்க அவரும் ஆமாம் நானேதான் பரவாயில்லையே என் பெயரை இனிஷியலோடு இன்னும் நினைவில்கொண்டு இருக்கின்றீர்களே என்றார்.</p><p style="text-align: justify;">உங்களை பார்த்தவுடனே நீங்கள் கோயில் பிள்ளையாகத்தான் இருக்கும் என்று யூகித்தேன் , எனினும் பல ஆண்டுகள் ஆனதினாலும் உருவ மாறுபாடுகள் உள்ளதாலும் உறுதியாக சொல்ல முடியாமல் இருந்தேன், ஆனால் நீங்கள் அந்த கடை சிப்பந்தியிடம் பேசிய விதத்தையும் , உங்கள் நடை உடை பாவனைகளை வைத்தும் 99% நீங்களாகத்தான் இருப்பீர்கள் என முடிவுசெய்தேன் என்றார்.</p><p style="text-align: justify;">அவரிடம் நலன் விசாரித்துவிட்டு, அவரிடம் அவரின் நினைவு என்னில் இருப்பதை அவரிடம் ஊர்ஜிதம் செய்துகொள்ள, பிரத்தியேகமாக நான் கேட்ட ஒரு விஷயம், இப்போது உங்கள் கடவுள் நம்பிக்கை - பக்த்தி எப்படி என்பதுதான்.</p><p style="text-align: justify;">அவருக்கு இன்னும் ஆச்சரியம், எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்னும் என்னைப்பற்றிய நினைவு உங்களிடம் இருப்பது என்னை உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றது என்றார்.</p><p style="text-align: justify;">கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டு படிப்பிற்கு பிறகு பல பத்து ஆண்டுகள் கழித்து அவரை அன்று தான் பார்க்கிறேன். </p><p style="text-align: justify;">நான் கேட்ட கேள்விக்கு அவரின் பதில் , "மாற்றங்களால் ஏற்படும் மாற்றங்களால்கூட என் நம்பிக்கையை மாற்றமுடியாது என்பதுதான்." </p><p style="text-align: justify;">சரி சந்தர்ப்பம் வாய்த்தால் மீண்டும் சந்திப்போம் என கூறி குடும்பம் பிள்ளைகள் குறித்து பரஸ்பரம் விசாரித்துவிட்டு விடைபெற்றோம்.</p><p style="text-align: justify;">அன்று சந்தித்த அந்த நண்பரின் நினைவு நேற்று மீண்டும் என் நினைவு கருவூலத்தில் இருந்து கண்களை சிமிட்டி எட்டிப்பார்த்தது.</p><p style="text-align: justify;">முதலாமாண்டு சேர்ந்து சில தினங்களில் நண்பர்களானோம். என்னோடு இன்னும் பலரும் இவரின் நண்பர்களாக ஒரு குழுவாக இணைந்திருந்தோம்.</p><p style="text-align: justify;">இவ்வாறான ஒரு நாளில் தங்களது பெற்றோர், சகோதர சகோதரிகளை குறித்த செய்தி பரிமாற்றலின்போது, இந்த நண்பர் சொன்ன செய்தி எங்கள் எல்லோருக்கும் பெரும் சோகத்தை உண்டுபண்ணியது.</p><p style="text-align: justify;">அவருக்கு பெற்றோர் இருவரும் இல்லை என்றும் தமது 7 வது வயதில் அப்பா ஒரு விபத்தில் இறந்துபோனதாகவும் தமது 13ஆம் வயதில் அம்மாவும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாகவும் சொன்னதும் எங்கள் அனைவருக்கும் அவர்மீது மிகுந்த இரக்கமும் பரிதாபமும் ஏற்பட்டது.</p><p style="text-align: justify;">அதில் ஒரு நண்பர், கவலைப்படாதே சேகர் , கடவுள் நம் எல்லோருக்கும் தந்தையாக தாயாக இருந்து நம்மை அரவணைத்து காப்பாற்றுவார் என்றார்.</p><p style="text-align: justify;">அப்போது அவர் சொன்ன மற்றுமொரு தகவல் எங்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.</p><p style="text-align: justify;">அப்படி கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் அப்பா அம்மாவை எடுத்துக்கொண்டு அவர்களின் இடத்தில் இருந்து ஏன் நம்மை காப்பாற்றவேண்டும், அப்பா அம்மாவையே கொடுத்து காப்பாற்றலாமே?</p><p style="text-align: justify;">இடை மறிக்காமல் தொடரும் அவரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தோம்.</p><p style="text-align: justify;">அப்பா இறந்தபோது எனக்கு அவ்வளவாக விவரம் தெரியாது ஆனால் எட்டாம் வகுப்பு படிக்கும் எனக்கு அம்மாவை குறித்த அனைத்தும் நினைவில் இருந்தது.</p><p style="text-align: justify;">கடும் வியாதிக்குளாகியிருந்தவரை காப்பாற்ற எங்கள் மாமா, தாத்தா குடும்பத்தினர் எவ்வளவோ பணம் செலவுசெய்து மருத்துவம் பார்த்தனர். எப்படியும் பிழைத்துக்கொள்வார் என்று நாங்கள் எல்லோரும் மருத்துவரையும் மருந்து மாத்திரைகளையும் நம்பி இருந்தோம், ஆனால் மருத்துவரோ எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம் கடவுள் காப்பாறுவார் என்றார்.</p><p style="text-align: justify;">எட்டாம் வகுப்பு படிக்கும் எனக்கு நோய் என்றால், வியாதி என்றால் மருத்துவரும் மருந்துகளும்தானே, ஆனால் இப்போது மருத்துவரே கடவுள் காப்பாற்றுவார் என்கிறாரே.</p><p style="text-align: justify;">அப்படியானால் நேரடியாக கடவுளிடம் கேட்கலாம் என்று நினைத்து அன்றுவரை எங்கள் வீட்டில் வழக்கமாக வணங்கப்படும் கடவுள்களின் புகைப்படங்கள் நிரம்பி இருந்த ஒரு சிறிய பூசை அறையில் காலை மாலை இரவு என்று எல்லா வேலைகளிலும் மனமுருகி வேண்டிக்கொண்டேன்.</p><p style="text-align: justify;">பள்ளிக்கு செல்லும்போது வழியில் தென்படும் அனைத்து சாமி கோயில்கள், முன் நின்று அம்மாவிற்காக வேண்டிக்கொள்வேன். கடவுள், தெய்வம் என்று யாரெல்லாம் எந்தெந்த பெயர்கள் சொல்கிறார்களோ அந்தந்த தெய்வங்களை அவர்களின் உருவம் என்னவென்றுகூட தெரியாத அந்த சிறு பிராயத்தில் வேண்டிக்கொண்டேன்.</p><p style="text-align: justify;">இதில் எந்த மதங்களும் விதிவிலக்கல்ல, எந்த மதம் எந்த சாமி என்று பாராமல், கோடானு கோடி தெய்வங்களை வணங்கினேன் , வேண்டிக்கொண்டேன். </p><p style="text-align: justify;">உபவாசம் இருப்பது ஒருபொழுது இருப்பது, நோன்பு இருப்பது, கற்பூரம் ஏற்றுவது, ஊதுபத்தி ஏற்றுவது, மெழுகுவர்த்தி ஏற்றுவது, இன்னும் யாரெல்லாம் என்னவெல்லாம் சொன்னார்களோ அவை அனைத்தையும் செய்து மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தேன். அம்மாவை இந்த தெய்வங்கள் கண்டிப்பாக காப்பாற்றிவிடும் , சுகத்துடன் அம்மா வீடு வந்துவிடுவார்கள் என்ற அசைக்கமுடியாத முழு நம்பிக்கையில்.</p><p style="text-align: justify;">ஆஸ்பத்திரியில் இருக்கும் அம்மாவை பார்த்து அவர்களிடத்தில் வழியிலிருந்த கோவிலிலிருந்து கொண்டு சென்ற விபூதியை அவர் பக்கத்தில் வைத்துவிட்டு, பள்ளிக்கூடம் சென்ற என்னை சுமார் காலை பதினோரு மணிக்கு என் மாமா வந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.</p><p style="text-align: justify;">ஏன் இப்போது, இன்னும் மத்திய உணவுவேளைகூட வரவில்லையே? பரவாயில்லை, வா வீட்டுக்குபோகலாம்.</p><p style="text-align: justify;">அம்மாவை சாயந்திரம் பார்க்கவேண்டும் என்றேன். சரி பார்க்கலாம் வா என அழைத்து செல்ல எங்கள் தெருவெங்கும் ஒரே பரபரப்பு, ஆள் நமாட்டம் கூடி இருந்தது, வீடு நெருங்க நெருங்க ஆட்களின் வருகை எங்கள் வீட்டை நோக்கி இருப்பதை கவனித்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை, ஏறெடுத்து என் மாமாவை பார்க்க கண் கலங்கி இருந்த அவர் என் தலையை தடவி, அம்மா நம்மை எல்லாம் விட்டுட்டு போய்ட்டாங்க என்றதைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.</p><p style="text-align: justify;">என்ன சொல்கிறார்?</p><p style="text-align: justify;">வேகமாக ஓடி வீட்டிற்குள் நுழைந்த எனக்கு அம்மாவை ஏன் இங்கே வெளியில் பெஞ்ச் மீது கிடத்தி இருக்கின்றார்கள்? </p><p style="text-align: justify;">அருகில் சென்று பார்க்க, அசைவின்றி படுத்திருந்த அம்மாவின் நெற்றியில் நான் காலையில் கொண்டு சென்று அவரின் படுக்கை அருகில் வைத்துவிட்டுப்போன திரு நீறு மட்டும் மற்றபடி கண் மூடிய நிலையில் அம்மா.</p><p style="text-align: justify;">உற்றார் உறவினர் என்னை கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.</p><p style="text-align: justify;">அழுகை சத்தத்திற்கிடையில் இந்த சின்ன வயதிலேயே அப்பா அம்மா இல்லாத அனாதையாகிவிட்டாயே.... அந்த கடவுளுக்கு கண் இல்லையா?</p><p style="text-align: justify;"> சடங்குகள், வீடு, தெரு, சுடுகாடு.......எல்லாம் முடிந்தது. </p><p style="text-align: justify;">வீட்டிற்கு அழைத்துவரப்பட்டேன், நடு வீட்டில் எரிந்துகொண்டிருந்த விளக்கு அதனருகில் அம்மாவின் போட்டோ. </p><p style="text-align: justify;">என் தாத்தா என்னிடம் , அம்மாவின் போட்டோவை வணங்கி விட்டு பூசை அறையில் இருந்த கடவுளர்களின் போட்டோக்களுக்கு சாம்பிராணி தூபம் காட்டி வணங்க சொன்னார். </p><p style="text-align: justify;">பெருக்கெடுத்த துக்கம் பிரவாகம் எடுக்க, அடக்கி வைத்திருந்த சோகம் பிரளயமாக மாற, விரக்கத்தியின் உச்சம் விளிம்பை தாண்ட, அங்கிருந்த எல்லோர் முன்னிலையிலும் சத்தமாக, <b>"முடியாது"</b> என்று கூறியதோடல்லாமல், அங்கிருந்த அனைத்து சாமிகளின் புகைப்படங்களையும் தாறுமாறாக பிடுங்கி எடுத்து தரையில்போட்டு உடைத்தேன்.</p><p style="text-align: justify;">தடுக்க வந்தவர்களிடமும் மூர்க்கமாக நடந்துகொண்டேன்.</p><p style="text-align: justify;">சாமி படங்களை அப்படியெல்லாம் செய்யக்கூடாது.</p><p style="text-align: justify;">எது சாமி, எல்லா சாமிகளிடமும் எல்லா தெய்வங்களிடமும் முழுமனதுடன் வேண்டினேன் என் அம்மாவிற்கு உடம்பு சரியாகி நல்லபடியாக வீடு திரும்பவேண்டும் என்று நான் வேண்டியது எந்த சாமிக்கும் கேட்கவில்லை, அப்படியென்றால் என் வேண்டுதலை கேட்பதற்கு சாமிகள் என்ற பேரில் யாருமே இல்லை. </p><p style="text-align: justify;">தெய்வங்கள் சாமிகள் எல்லாம் பொய். என கூறி வெளியில் சென்று அம்மாவின் படம் அருகே அமர்ந்துகொண்டேன் கண்ணீருடன்.</p><p style="text-align: justify;">அன்றுமுதல் இன்றுவரை தெய்வங்கள் சாமிகள் யாரும் இல்லை என்று நான் திடமாக நம்புகிறேன். </p><p style="text-align: justify;">நம்புபவர்களை நான் ஒன்றும் சொல்லவில்லை இது என் நம்பிக்கை என்று சொன்னார்.</p><p style="text-align: justify;">அவரது பிரதான வாதம், <b>"தெய்வங்கள் என்று யாரேனும் இருந்திருந்தால், அவர்களுக்கு காதுகள் இருந்திருந்தால் எனது வேண்டுதளுக்கு செவி சாய்த்து என் வேண்டுதலை நிறைவேற்றி இருக்கவேண்டுமே. அப்படி நடக்காத பட்சத்தில் என் குரலை யாரும் கேட்கவில்லை என்றால் என் குரலை கேட்க யாரும் இல்லை எனவே சாமி தெய்வம் என்று சொல்லப்படும் யாரும் இந்த உலகில் இல்லை"</b> என்பதே.</p><p style="text-align: justify;">அவரது உணர்வுபூர்வமான இந்த பேச்சுகளின்போது எங்களில் யாரும் எதுவும் பேசவில்லை; ஏனென்றால் எதையும் கேட்க்கும் நிலையில் அவர் இல்லை, ஆண்டு முழுவதும் எங்கள் எல்லோர் மனதிலும் இனம் புரியாத சோக இழை.</p><p style="text-align: justify;">மனமும் சிந்தனையும் பக்குவமடையாத பதிமூன்று வயதில் பல விடயங்களை புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கும் எனவே அவரது பேச்சு ஞாயமானதாக இருந்திருக்கலாம்.</p><p style="text-align: justify;">ஆனால் இன்றளவும் அவரது இறைமறுப்பு கொள்கையில் உறுதிப்பிடிப்புடன் இருப்பது அவரது ஆழ்மனதில் பதிந்துவிட்ட அம்மாவின் அன்பும் பாசம் ஒருபுறம் , முழுமனதுடன் நம்பியவர்கள் அம்மாவை கைவிட்டுவிட்டனர் எனும் அவர்களின் நம்பகமற்ற செயலும் அதனால் ஏற்பட்ட ஆதங்கமும் , பெருத்த ஏமாற்றம் ஒருபுறம் என அவர் உறுதியாக இருக்கிறார்.</p><p style="text-align: justify;">நண்பர்களே, இது ஒரு சர்ச்சைக்குரியதும் அதே சமயத்தில் உணர்வு பூர்வமானதும் தனி மனித நம்பிக்கை சார்ந்ததுமாக இருந்தாலும் என் நண்பரின் இந்த கேள்விக்கு யாரால் பதில் கூற முடியும்? </p><p style="text-align: justify;"><b>பி.கு:</b> இந்தப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்லது எவர் நம்பிக்கையையும் எவரது கொள்கை கோட்பாடுகளையும் புடம்போடும் நோக்கத்திலும் அல்லது இவர்கள் இப்படித்தான் என அவர்களது தனிமனித நம்பிக்கையை வடம்பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து வீதிஉலா செய்விப்பதுமான நோக்கத்திலும் அல்ல என்பதை மிகுந்த தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p style="text-align: justify;">நன்றி,</p><p style="text-align: justify;"> வணக்கம்,</p><p style="text-align: justify;"> மீண்டும் ச(சி)ந்திப்போம் </p><p style="text-align: justify;">கோ. </p><p><br /></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-69233328690973427982023-11-13T06:03:00.000-08:002023-11-14T01:07:15.905-08:00பாரத ரத்தினங்கள்!!!<p style="text-align: center;"><u>மின்னும் வைரங்கள்!</u></p><p> நண்பர்களே,</p><p><span style="text-align: justify;">குழலும் இனிதுதான், யாழும் இனிதுதான் அதனினும் இனிது மழலைகளின் சொல்லோசை என்பதாக வள்ளுவன் வரையறுத்திருக்கிறான்.<span></span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">குழந்தைகள்மீது அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்த நம் சுதந்தர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்ததினமான நவம்பர் 14 ஆம் நாளை இந்தியாவில், நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றோம் என்பது உலகறிந்த செய்தி.</p><p style="text-align: justify;">ஒவ்வொரு குழந்தைக்கும் வருடத்தில் ஒவ்வொரு நாள் பிறந்த நாளாக அமையும்.</p><p style="text-align: justify;">ஆனால் நாட்டில் எத்தனை பேர் இந்த குழந்தைகள் தினவிழாவிற்கென்று , பிரத்தியேகமாக நம் வீட்டு குழந்தைகளுக்கென்று விழா எடுக்கின்றோம்?</p><p style="text-align: justify;">அவர்களுக்கு புத்தாடை, சிறப்பு உணவு, அல்லது வெளியில் அழைத்து சென்று கண்களுக்கும் மனதிற்கும் இதம் தரும் , சுகமான நினைவுகளை கொடுக்கக்கூடிய சுற்றுலா தளங்களுக்கு அழைத்து சென்று மகிழ்விக்கின்றோம் என்பது கேள்வி குறிதான்.</p><p style="text-align: justify;">இது ஏதோ அரசு கொண்டாடும் ஒரு விழா அல்லது பள்ளிகள் கொண்டாடும் ஒருவிழா என்றில்லாமல், குழந்தைகள் இருக்கும் அனைத்து வீட்டிலும் இந்த இனிய நாளை குழந்தைகளை மையப்படுத்தி கொண்டாடி மகிழவேண்டிய ஒரு நாள் என்பதே என் தாழ்மையான கருத்து.</p><p style="text-align: justify;">பிறந்த நாள் கொண்டாடப்படும் குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு வருடம் ஒருமுறை கேக் வெட்டி விழா எடுக்கின்றோம். </p><p style="text-align: justify;">ஆனால் இதுபோன்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தை இன்றுவரை தங்கள் வாழ்நாளில் அனுபவித்திருக்காத குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் இன்று ஒருநாள் அவர்களை தேடி பிடித்து அவர்களை மகிழ்விக்க நாம் ஏதேனும் செய்யவேண்டாமா?</p><p style="text-align: justify;">குழந்தைகள் இருப்பவர்கள் மட்டும்தான் கொண்டாட வேண்டுமா?</p><p style="text-align: justify;">குழந்தைகள் இல்லாதவர்கள், தமக்கு பெற்றோரே இல்லாமல் தனியார் மற்றும் அரசு காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளை மகிழ்வித்து அவர்களோடு இந்த நன் நாளை கொண்டாடலாம்.</p><p style="text-align: justify;">மேலும் இன்றைய தினம் மட்டுமின்றி நம் வாழ்வின் எந்த நாளிலும் சாலைகளில் வறுமையின் நிமித்தம் கையேந்தி யாசித்துக்கொண்டிருக்கும் உண்மையான வரிய நிலையில் இருக்கும் குழந்தைகளிடத்தில் அன்பாயும் கரிசனையுடனும் நடந்து கொள்வதோடு அவர்களுக்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்வது மிகச்சிறந்தது.</p><p style="text-align: justify;">அப்படி எல்லா நாளிலும் செய்வதற்கான சந்தர்ப்பம் அமையாதவர்கள் குறைந்த பட்சம் இந்த குழந்தைகள் தினத்தன்றேனும் , குழந்தை தொழிலாளர்களாக இருப்பவர்களிடத்திலேயும், தெருக்களில் சாலைகளில் யாசித்துக்கொண்டிருப்பவர்களிடத்திலேயும், பெற்றோரோடு சேர்ந்து சாலை ஓரங்களிலும், பாலங்கள் அடியிலேயும், மரத்தின் அடியிலேயும் ,நடை பாதைகளிலும் தங்கி வசிக்கும் சிறுவர் சிறுமியரிடத்தில் அன்பாகவும் ஆதரவாக பேசியும் நம்மால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை மகிழ்விக்க பழக வேண்டும். </p><p style="text-align: justify;">இந்த தினம் மக்களிடத்தில் - சமூகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு,வறுமை ஒழிப்பு குழந்தைகள் கல்வி, சத்துணவு, மருத்துவம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அவர்களுக்கான சுகாதாரம், நோய் எதிர்ப்பு போன்றவற்றை முக்கியப்படுத்தி, முன்நிறுத்தி செயலாற்றவும் , நிறைவேற்றவும் அதன் அவசியத்தை நினைவுபடுத்தவுமே கொண்டாடப்படுகிறது என்பது பெயரளவில், ஏட்டளவில், அரசு பதிவேட்டில் மட்டும் இல்லாமல், அனைத்து சக இந்திய குடிமக்களின் உள்ளத்திலும் ஊடுறுவவேண்டும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உளமார உதவிட வேண்டும். </p><p style="text-align: justify;">இன்றைய குழந்தைகள் மின்னும் வைரங்களாக உலகை வழி நட த்திச்செல்லும் நாளைய ரத்தினங்களாக, துருவ நட்சத்திரங்களாக மாற்றம் பெறவேண்டுமாயின் தனிப்பட்ட விதத்தில் நாமும் கூட்டாக நம் சமூகமும் அரசு அதிகாரம் மிக்க ஆளுமைகளும்தான் அவர்களை பட்டைதீட்டும் பொறுப்பு மிகுந்தவர்களாக, பாரபட்சம் இன்றி ஏழ்மை பிணியும் அறியாமை பிணியும் முற்றிலும் தீரும்வரை தொடர்ந்து பணியாற்றவேண்டும் என்பதும் என் தாழ்மையான கருத்து.</p><p style="text-align: justify;">இந்த மின்னப்போகும் வைரங்களை பட்டைத்தீட்டும் பொறுப்பும் கடமையும் , ஓரளவிற்கு வளர்ந்து பக்குவப்பட்டதாக கருதும் நம் ஒவ்வொருவரிடமும் தான் இருக்கிறது என்பது கூடுதல் சிந்தனை.</p><p style="text-align: justify;">சரி, குழந்தைகள் என்பவர்கள் யார், எந்த வயதினர்?</p><p style="text-align: justify;">வயதின் அடிப்படையில் , பதின் பருவம் அடையும் வரையிலுள்ளவர்கள் மட்டுமா? </p><p style="text-align: justify;">இல்லை எத்தனை வயதானாலும் , கள்ளம் கபடமின்றி, வெள்ளந்திரி மனதுடன் இருக்கும் , தன்னிச்சையாக சிந்தித்து தமது தேவைகளை தாமே பூர்த்திசெய்துகொள்ள முடியாமலும் தமது எண்ணங்களை தேவைகளை சரியாக எடுத்தியம்பும் மனநிலையம் பக்குவமும் இல்லாத எவருமே குழந்தை கள்தான்.</p><p style="text-align: justify;">அதற்கும் மேலாகா, இறை நம்பிக்கை உள்ளவர்கள் சொல்வதுபோல், இறைவன் படைப்பில் நாம் எல்லோரும் குழந்தைகளே.</p><p style="text-align: justify;">எனவே அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைவுள்ளம் கொண்ட அனைவருக்கும் இந்த இனிய திருநாளின் வாழ்த்துக்களை தெரிவித்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.</p><p style="text-align: justify;">நன்றி,</p><p style="text-align: justify;">வணக்கம்,</p><p style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம் </p><p style="text-align: justify;">கோ.</p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-34410317312807064282023-11-09T16:30:00.030-08:002023-11-09T16:30:00.139-08:00யாருக்கெல்லாம்...<p style="text-align: center;"><span style="text-align: start;"><b><u>தலை தீபாவளி?</u></b></span></p><p style="text-align: justify;"><span style="color: #242424;"><span style="background-color: white; font-size: 14px;">நண்பர்களே,</span></span></p><p style="text-align: justify;"><span style="color: #242424;"><span style="background-color: white; font-size: 14px;">இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் வர இருக்கும் தீபாவளி ஒரு சிலருக்கு சிறப்பு தீபாவளியாக அமையும் எனபதில் ஐயமில்லை.<span></span></span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;"><span style="color: #242424;"><span style="background-color: white; font-size: 14px;">கடந்த ஆண்டு தீபாவளி முடிந்ததற்கு பிறகும் இந்த ஆண்டு தீபாவளிக்கும் இடையிலான கால கட்டத்தில் திருமணமான புதும</span></span><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">ண</span><span style="color: #242424;"><span style="background-color: white; font-size: 14px;"> தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை கொண்டாடுவதுபோல், திருமணத்தில் இணைக்கப்பட்ட மணமக்களின் பெற்றோருக்கும்கூட இது தலை தீபாவளிதான்.</span></span></p><p style="text-align: justify;"><span style="color: #242424;"><span style="background-color: white; font-size: 14px;">திருமண வயது வந்த பெண்ணைப் பெற்றவர்களும் , படிப்பு முடித்து நல்ல வேலையில் அமர்ந்த மகனை பெற்றவர்களும் பல ஆண்டுகளாக ஏறக் குறைய அனைத்து பொருத்தங்களும் அமையப்பெற்ற நல்ல வரன்களையும் நல்ல பெண்களையும் கண்தடுத்து இணைத்துவைப்பது ஒரு சவாலான சாதனையே.</span></span></p><p style="text-align: justify;"><span style="color: #242424;"><span style="background-color: white; font-size: 14px;">அப்படி இருவீட்டாரின் எதிர்பார்ப்புகள், நடைமுறை சம்பிரதாயங்கள் போன்றவற்றில் உடன்பாடு ஏற்பட்டு சுப முகூர்த்த சுபதினத்தில், பெரியோர், உறவினர், நண்பர்கள் புடை சூழ திருமணம் நடத்தி முடித்து, சமையல் காரர்கள், பந்தல் காரர்கள், திருமண நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்த ஒப்பந்தக்காரர்கள் என எல்லோருக்கும் பணம் பட்டுவாடா செய்து பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்த மணமகள் வீட்டருக்கும், மகன் சம்சாரியாக தன் மனைவியுடன் வீடு வந்த மகிழ்ச்சியில் மகனை பெற்றவர்களும் அடையும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது.</span></span></p><p style="text-align: justify;"><span style="color: #242424;"><span style="background-color: white; font-size: 14px;">அவ்வகையில் மணமக்களுக்கு மட்டுமின்றி அவர்தம் பெற்றோருக்கும் இந்த தீபாவளி ஒரு சில நெருடல்கள், கடன் சுமை போன்றவற்றை தவிர்த்து பார்க்கையில் மனதிற்கு சுகம் சேர்க்கும் இனிய தலை தீபாவளிதான்.</span></span></p><p style="text-align: justify;"><span style="color: #242424;"><span style="background-color: white; font-size: 14px;">அதேபோல, இந்த ஆண்டு புதிதாய் பட்டம் பெற்றவர்கள், மேற்படிப்பில் சேர்ந்தவர்கள், தொழில் தொடங்கியவர்கள், வேலையில் சேர்ந்தவர்கள் , புதியதாய் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தவர்கள், புதிதாய் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், புதிதாய் வாகனம் வாங்கியவர்கள், புதிதாய் வீடு கட்டியவர்கள் , சொந்தமாய் வீடு வாங்கியவர்கள் நீண்ட நாள் எதிர்நோக்கியிருந்த புண்ணிய ஸ்தலங்களை சுற்றிபார்த்தவர்கள், நீண்ட வருடங்களுக்குப்பின் மனதிற்கினிய நண்பர்கள் உறவினர்களை சந்தித்தவர்கள், இழுபறியில் இருந்த நீண்ட நாள் வழக்குகளில் தமக்கு சாதகமான தீர்ப்பு பெற்றவர்கள், மனதிற்கு அமைதியையும் இன்பத்தையும் கொடுக்கக்கூடிய தர்ம காரியம் செய்தவர்கள் என எத்தனையோ நேர்மறை நிகழ்வுகள் தம் வாழ்வில் இந்த ஆண்டு நடந்ததை எண்ணி மகிழ்பவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு ஒரு சிறந்த தலைதீபாவளியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. </span></span></p><p style="text-align: justify;"><span style="color: #242424;"><span style="background-color: white; font-size: 14px;">மேலும் இந்தாண்டு தாயானவர்கள் , தாய்மை அடையும் பேறுகாலம் நோக்கி காத்திருப்பவர்கள் , குழந்தைகளின் வரவினால் தாத்தா பாட்டி ஆனவர்கள் எல்லோரு க்கும் இந்த தீபாவளி தலை தீபாவளிதான்.</span></span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">அதேபோல, பேராபத்திலிருந்து மீண்டவர்கள், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் இக்கட்டான சூழ்நிலை விலகி மனதிலும் உடலிலும் வாழ்விலும் தெளிவும் நிம்மதியும் அடைந்தவர்களுக்குக்கூட இந்த தீபாவளி தலை தீபாவளிதான் என்றாலும் அது ஏற்புடையதுதான்.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">இப்படி நெஞ்சிக்கினிய நினைவுகளை பதித்துச்செல்ல காத்திருக்கும் இந்த தீபாவளி, சம்பந்தப்பட்ட எல்லோருக்கும், </span><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">நம் இஸ்ரோ உட்பட,</span><span style="background-color: white; color: #242424; font-size: 14px;"> இனிய தலைதீபாவளி என்றால் அது மிகை அல்ல, </span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">அவ்வகையில் இந்த தீபாவளி எனக்கும்தான் தலை தீபாவளி என்றால் அதுவும் மிகை அல்ல.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">அது எப்படி எந்த வகையில் என்பதை குறித்த விளக்கமான பதிவை அடுத்த தீபாவளிக்குமுன் பதிவிடுகிறேன்.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">அதுவரை நண்பர்களே, பாதுகாப்பான வகையிலும் சமூக அக்கறையுடனும், குடும்ப வரவுசெலவுகளை மனதில் கொண்டும் , முடிந்தவரை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் கொடுக்கும் வகையில் </span><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">, பட்டாசு, வான வேடிக்கை</span><span style="background-color: white; color: #242424; font-size: 14px;"> ,புத்தாடை , சிறப்பு உணவு , இனிப்பு, பலகாரங்களை நம் உறவுகள் நண்பர்கள் சொந்தங்களோடு மட்டுமின்றி நமக்கு திருப்பி கொடுக்க திராணியற்ற எளியவர்களோடும் பகிர்ந்தும் பகிர்ந்துண்டும் இந்த இனிய தீபாவளியை இன்பமுடன் மகிழ்ச்சியாக கொண்டாட என் நெஞ்சம் நிறைந்த, </span><b style="color: #242424; font-size: 14px;">"தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்"</b><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #242424; font-size: 14px;"><br /></span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #242424; font-size: 14px;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh5_swoEfrKzGsjAfrSPP-htIB-DqpAYV0A3ro6QJu9d3ZMcG-_7OxT2mGJjq8AId-VX3f4xwqfbt4BizkCX9SoQrVF3o5wpVopg5_ncXaVblF7cU9-mpK35NmFRhqzCCQehBJDStGqskomN8ucvbB4zeqJdtLAUGOuLzo0aRd10Q5jEb8IJkS0XWYu1n7f" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="168" data-original-width="300" height="179" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh5_swoEfrKzGsjAfrSPP-htIB-DqpAYV0A3ro6QJu9d3ZMcG-_7OxT2mGJjq8AId-VX3f4xwqfbt4BizkCX9SoQrVF3o5wpVopg5_ncXaVblF7cU9-mpK35NmFRhqzCCQehBJDStGqskomN8ucvbB4zeqJdtLAUGOuLzo0aRd10Q5jEb8IJkS0XWYu1n7f" width="320" /></a></div><br /><br /><p></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">நன்றி. </span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">வணக்கம், </span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #242424; font-size: 14px;">மீண்டும் ச(சி)ந்திப்போம்.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #242424; font-size: 14px;"> கோ </span></p><p style="text-align: start;"><br /></p><div><span face="Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif" style="color: #333333;"><span style="background-color: white; font-size: 17.3333px; font-weight: 400;"></span></span></div>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-69512758620099964262023-11-09T06:04:00.005-08:002023-11-09T08:28:32.460-08:00கருப்பு - சாம்பல் - வெளுப்பு !<p style="text-align: center;"><u><b>எல்லாமே சிறப்</b></u><b><span style="text-align: justify;">பு</span><u> </u></b> !!</p><p style="text-align: justify;">நண்பர்களே,</p><p style="text-align: justify;">அடடா... இது என்ன முன்னந்தலையில் ஒரு ஏழு எட்டு முடிகள் வெளிறிய சாம்பல் நிறத்தில், யாராவது பார்த்தல் என்ன நினைப்பார்கள்?<span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">கண்ணாடியில் இன்றுகாலை முகம் பார்த்து தலைசீவிய போதுகூட தெரியவில்லையே.</p><p style="text-align: justify;">இப்போது செல்பேசியில் எடுத்த செல்பி படத்தை விரித்துப்பார்க்கும்போது இப்படி தெரிகிறதே.</p><p style="text-align: justify;">ஒருவேளை அழுக்காக இருக்குமோ?</p><p style="text-align: justify;">அப்படி இருக்க வாய்ப்பில்லையே.</p><p style="text-align: justify;">இன்று காலையில்கூட, சுத்தமான செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணையில் சிறிது நேரம் தலைமுடியை ஊரவைத்து பின்னர் கிராமத்தில் இருந்து நண்பர் அனுப்பிவைத்த சீகைக்காய் தூள் தேய்த்து நன்றாக கழுவி சுத்தப்படுத்தி குளித்தேனே, நோ.. நோ... நோ.... அழுக்காக இருப்பதற்கு அறவே வாய்ப்பில்லை.</p><p style="text-align: justify;"> ஒருவேளை வயதாகிவிட்டதென்பதை விவரிக்கும் விலாச பிரதிபலிப்போ?</p><p style="text-align: justify;">இருக்காது, நமக்கு அப்படி என்ன வயதாகிவிட்டிருக்கும்?</p><p style="text-align: justify;">இப்போதுதான் பால்குடி மறந்து, பள்ளி முடித்து, கல்லூரி முடித்து, வேலையில் சேர்ந்து, திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் பெற்று அவர்களுக்கும் திருமணங்கள் செய்துவைத்து அவர்களது வயிற்று பேரப்பிள்ளைகள் இருவரின் பட்டமளிப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவர்களோடு சேர்ந்து சினிமா, ஓட்டல், பீச், பார்க் என ஒய்யாரமாய் வலம் வரும் எனக்கு எப்படி வயதாகிவிட்டிருக்கும் இந்த வெள்ளை முடிகள் விவரம் சொல்ல?</p><p style="text-align: justify;">ஒருவேளை, ஊட்டச்சத்து குறைபாடாக இருக்குமோ?</p><p style="text-align: justify;">அதற்கும் வாய்ப்பில்லையென்றே நினைக்கின்றேன்.</p><p style="text-align: justify;">நான் தான் தினமும் பால் தயிர் மோர் பருப்பு பச்சை காய்கறிகள் அரிசி சோறு , கம்பஞ்சோறு , கேழ்வரகு போன்ற சத்தான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேனே?</p><p style="text-align: justify;">கடிப்பதற்கு முடியாததால் எல்லாவற்றையும் குழைய குழைய வேகவைத்தும் சில நேரங்களில் மத்துப்போட்டு கடைந்தும் அல்லவா சாப்பிடுகிறேன்; எனவே ஊட்டச்சத்து குறைவானதால் இந்த நரை திரைவிலக்கி காட்டுவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை.</p><p style="text-align: justify;">ஒருவேளை உடல்கூறு சாஸ்திரம் கூறும் வளர் சிதை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றமாக இருக்குமோ? இன்னும் வளரவே இல்லை அதற்குள் சிதைவு எங்கனம் சாத்தியம்?</p><p style="text-align: justify;">அல்லது இப்படி இருக்குமோ?</p><p style="text-align: justify;">இப்போதெல்லாம் நானே ராஜா நானே மந்திரி என்று என் மந்திரி மனைவி மறைந்து பல காலமானபோதும் இன்னமும் என் படுக்கை அரை மேசையில் புன்னகை மாறாமல் என்னை கவனித்துக்கொண்டிருக்கும் அவள் நினைவு அவ்வப்போது தலை தூக்கும்போதெல்லாம் கலங்கும் என் கண்களின் சோகக் கீற்று கரை தாண்டி தலைக்கேறி என் முடியில் முடி சூட்டிக்கொண்டதோ? </p><p style="text-align: justify;">அப்படியும் இருக்காது சோகத்திற்கேது இடம் என்னிடம்? (please அந்த கைக்குட்டையை கொஞ்சம் எடுத்து கொடுங்கள்.)</p><p style="text-align: justify;">அவள் மகிழ் நினைவு என்னோடு ஐக்கியபட்டுபோனதால் என் முடி பட்டுப்போகவும் வெள்ளை நிறம் அதை தொட்டுப்போகவும் கண்டிப்பாக வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பில்லை.</p><p style="text-align: justify;">அப்படி இருக்க இப்போது தென்படும் அந்த சில சாம்பல் கலந்த வெள்ளை நிற முடிகளின் தோற்றம் எதனால்.?</p><p style="text-align: justify;">நினைவுகளின் பயணத்தை யாரோ வெளியிலிருந்து கதவு தட்டும் சத்தம் இடை நிறுத்த , யார் என்று பார்த்தேன்.</p><p style="text-align: justify;">ஓ... வாங்க, வாங்க ... ஆமாம் பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளை அடிக்கணும்னு நான்தான் சொல்லி இருந்தேன், கொஞ்சம் சீக்கிரம் முடித்துக்கொடுங்கள். சரி போய் ஏற்பாடு செய்யுங்கள்.</p><p style="text-align: justify;">மீண்டும் வந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து வீட்டிற்கு வெள்ளை அடிப்பதை பற்றி யோசிக்கையில்தான் நினைவிற்கு வந்தது:</p><p style="text-align: justify;"> நேற்று என் பேரனிடம் சொல்லி என் தலைக்கு கருப்பு <b>டை</b> அடிக்க சொன்னதும் , அவன் கவனக்குறைவினாலும் தொலைக்காட்சிப்பெட்டியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்த இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கட் ஆட்டத்தின் ஒளிபரப்பில் கவனம் செலுத்தியதாலும் என் தலையின் முன் பகுதியில் இருக்கும் இந்த சில முடிகளின்மேல் சரியாக <b>"கரி</b>"பூசாமல் விட்டதும்.</p><p style="text-align: justify;">மற்றபடி எனக்கு ஒன்றும் வயசாகவில்லை, சரிதானே.</p><p style="text-align: justify;">என்று அவரை சந்திக்க சென்ற என்முன் அவரது முன் தலைமுடியின் முற்றுப்பெறாத முகப்பூச்சுப்பற்றி முணுமுணுப்பாய் சொல்லியவர் என் முன்னாள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஸ்ரீனிவாசனார்.</p><p style="text-align: justify;">ஆமாம், பலதரப்பட்ட ரசாயன கலவைகள் சேர்த்து தயாரிக்கப்படும் கருப்பு பூச்சுக்கள் முடி நலனுக்கும் உடல் நலத்திற்கும் நல்லதா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் , உங்கள் ஆலோசனைகள் யாருக்காவது உதவியாக அமையலாம். </p><p style="text-align: justify;"><b>பி.கு:</b> வாழ்க்கை சுழற்சியில் கருப்பென்ன , வெளுப்பென்ன, மாயமென்ன காயமென்ன, இதயத்தில் இளமை உணர்வு குடியிருக்கும்வரை எந்த நிறம் நம் தலைமுடியில் குடியிருந்தாலும் எல்லாம் சிறப்பே - எல்லோரும் இளைஞரே இளஞ்சியே எங்கள் பேராசிரியரைப்போல.</p><p style="text-align: justify;">நன்றி,</p><p style="text-align: justify;">வணக்கம்.</p><p style="text-align: justify;">மீண்டும் ச (சி )ந்திப்போம்.</p><p style="text-align: justify;">கோ.</p><p style="text-align: justify;"><br /></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23003642063406655842023-11-07T07:30:00.008-08:002023-11-08T00:35:58.376-08:0024 மணி நேரத்தில்....<p style="text-align: center;"><span style="text-align: justify;"><u><b>மாற்றம்! - ஏற்றம்!!.</b></u></span></p><p>நண்பர்களே,</p><p style="text-align: justify;">24 மணி நேரம் என்பது முழுமையாக பகல் இரவு என்று இணைந்து பூமியில் ஒரு நாளை குறிக்கிறது என்பது உலகறிந்த உண்மை.<span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">நம் எல்லோரும் அறிந்தவண்ணம், அடுத்த நொடி உலகில் , நம் வாழ்வில், நம்மை சார்ந்தவர்கள் வாழ்வில் என்ன நடக்கும் என்று அறுதி இட்டு உறுதியாக யாராலும் எவராலும் கணிக்க முடியாது என்பதும் நமக்கு நன்றாக தெரியும்.</p><p style="text-align: justify;">வரலாறுகளிலும், திரைப்படங்களிலும், நாடகங்களிலும், கதைகளிலும் புத்தகங்களிலும், நாவல்களிலும் ஒரே இரவில் பல சாம்ராஜ்யங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதையும், வாழ்க்கை எனும் ஏணியின் நிழல்கூட படாதவண்ணம் வாழ்ந்தவன்(ர்) ஒரே இரவில் எத்தனை ஏணி வைத்தாலும் எட்டமுடியாத உயரத்திற்கு உயர்ந்ததும், அதே போல குடுசை வாழ்வு கோபுர வாழ்வானதும், ரயிலிலும் , பேருந்து நிலையங்களிலும் சாலைகளிலும் யாசித்துக்கொண்டிருந்தவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் புகழின் வெளிச்சம் வீசப்பட்டவர்களாக பிரபலமாக மாறுவதையும் பார்த்திருப்போம்.</p><p style="text-align: justify;">கண்ணிமைக்கும் நேரத்திலேயே சூழல்கள் மாறும்போது ஒரே நாளில் உலகில் உள்ள எத்தனையோ பேர்களுக்கு என்னவென்று கூற இயலாவிட்டாலும் எத்தனையோ விதமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பது கணிக்கக்கூடியதே.</p><p style="text-align: justify;">அவ்வகையில், கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும் ஒரு மாற்றம் ஏற்பட்டு உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து , அந்த மகிழ்ச்சியின் நிறைவை - மகிழ்ச்சிக்கு காரணமான உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டி இந்த பதிவை எழுத உந்தி தள்ளியது. </p><p style="text-align: justify;">என் இனிய நண்பரும் கல்லூரி தோழருமான திரு விசு அவர்களால் ஊக்கப்படுத்தப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டுமுதல், நேரமும் சந்தர்ப்பமும் வாய்க்கும்போதெல்லாம், அவ்வப்போது இந்த வலை தளத்தில் சிலபதிவுகளை எழுதிவருகிறேன் என்பது உங்கள் யாவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.</p><p style="text-align: justify;">உங்களின் பேராதரவும் அன்பும் ஊக்கப்படுத்துதலும் , உற்சாகமூட்டலும் இதுகாறும் என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கின்றது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.. எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிதானே.</p><p style="text-align: justify;">உலகளாவிய வாசகர்கள் எமது பதிவுகளை வாசிக்கின்றனர் என்பதை அவ்வப்போது அறிந்து மகிழ்ந்து மேலும் எமது பதிவுகளை பக்குவப்படுத்திக்கொள்ள விழைவதுண்டு.</p><p style="text-align: justify;">தொடர்ந்து பின்னூட்டம் அளித்து நிறைகுறைகளை சுட்டி காட்டியும், பிழைகளை பக்குவமாக எடுத்தியம்பியும் வருகின்றவர்களோடு, பின்னூட்டம் அளிக்க நேரமில்லாததாலும் அதற்கான சந்தர்ப்பம் அமையாததால் பதிவுகளை வாசித்து வருபவர்களுக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பாக இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்.</p><p style="text-align: justify;">பதிவை வாசிப்பவர்கள் எல்லோரும் கருத்திடட முடியாது என்பதால், வருகிற பின்னூட்டங்கள் எமது பதிவை வாசிக்கும் அனைத்து வாசகர் சார்பாக ஒருசிலர் அளிப்பதாகவே எண்ணி மகிழ்கிறேன்.</p><p style="text-align: justify;">ஏற்கனவே சொன்னதுபோல பதிவுகளை வாசித்துவரும் உலகளாவிய வாசகர்களுள் எமது பதிவுகளை இதுவரை எத்தனை பேர்கள் கடந்த <b>7</b> நாட்களில் , கடந்த <b>30</b> நாட்களில் கடந்த <b>ஓராண்டில்</b> வாசித்திருக்கின்றார்கள் என சில நேரங்களில் புள்ளியல் விவரங்களை பார்ப்பதுண்டு.</p><p style="text-align: justify;">ஓரளவிற்கு மனதிற்கு இதம்தரும் எண்ணிக்கையில் வாசித்திருப்பதாக தகவல் அறிந்து மகிழ்ந்ததுண்டு.</p><p style="text-align: justify;">எமது பதிவுகளை இன்றளவும் இந்தியா,கனடா, பிரித்தானியா, ஸ்விட்சர்லாந்து , அமெரிக்கஐக்கிய நாடுகள், ரஷியா, சிங்கப்பூர்,பிரான்ஸ்,சுவீடன் , ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, மலேசியா, இத்தாலி , உக்ரைன் , ஸ்ரீலங்கா,ஆஸ்திரேலியா, பகரின் ,தென் ஆப்பிரிக்கா, ருமேனியா , பெல்ஜியம், மேலும் பல நாடுகளில் இருந்து பெருமளவில் வாசிக்கின்றனர் என்றபோதிலும், இதுவரை , இத்தனை ஆண்டுகளில் கடந்த 24 மணி நேரத்தில் எமது பதிவுகளை வாசித்தவர்கள் எண்ணிக்கைபோல புள்ளிவிவரங்கள் புலப்படுத்தி என்றுமே கண்டதில்லை. </p><p style="text-align: justify;">அதாவது ஒரே நாளில் ,<b> 24 மணி நேரத்தில்</b>, பல தலைப்புகளில் எழுதிய சுமார் 20 பதிவுகளை 390 பேர்கள் வாசித்திருக்கிறார்கள் என்ற புள்ளியல் செய்தி அறிந்து உள்ளபடியே உள்ளம் பூரித்துப்போனேன் - புளங்காகிதம் அடைந்தேன், புதுப்பொலிவு முகத்திலும் புத்துணர்வு அகத்திலும் ஒருசேர உணர்ந்தேன்.</p><p style="text-align: justify;">தமிழார்வமும், வாசிப்பின்பால் இருக்கும் நேசிப்பும் மிகுந்திருப்பதால், வாழும் தேசங்கள், நேர வித்தியாசங்கள், சீதோஷண சூழல்கள், வேலை நேரங்கள், வேலையின் தன்மைகள் குடும்ப பொறுப்புகள், ஓய்வு நேரங்கள் போன்றவற்றின் சவால்களையும் தாண்டி இவ்வடியேனின் - எளியோனின் பதிவுகளை வாசித்துவரும் அன்பிற்கினிய அனைத்து வாசகர்களோடு இன்றைய நாளின் என் இதய மகிழ்வை பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. </p><p style="text-align: justify;">இதுபோல் பதிவுகள் எழுதுவதும் பதிவுகளை வாசிப்பதும் என்போன்ற வெளி நாட்டில் வாழும் தமிழ் நேச வாசகர்களும் பதிவர்களும் தமிழோடு கொண்டுள்ள ஸ்பரிசம் நம் தாய் தமிழ்நாட்டோடும் நாம் விட்டுவந்துள்ள நம் குடும்பம், நண்பர்கள், மற்றும் தமிழ் சொந்தங்களோடும் நிலையான - தொடர்ச்சியான நட்போடும் உறவோடும் இருப்பதான மானசீக உணர்வை ஏற்படுத்துவது எள்முனையளவேனும் மிகையன்றி உண்மையே.</p><p style="text-align: justify;">உலகின் எந்த நாட்டில் வாழ்ந்துவந்தாலும் மகிழ்வுடனும் சிறப்புடனும் பாதுகாப்புடனும் வாழ்க என வாழ்த்தியம் , தொடர் ஊக்கத்திற்கும் ஆதரவுக்கும் நன்றி கூறியும் வணங்கி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.</p><p style="text-align: justify;">நன்றி,</p><p style="text-align: justify;">வணக்கம்.</p><p style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம்,</p><p style="text-align: justify;">கோ.</p><p style="text-align: justify;"><br /></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-39743636599048012452023-11-04T08:18:00.001-07:002023-11-04T08:18:57.162-07:00கடல் பயணம்!!<p style="text-align: center;"><span style="color: #222222;"><span style="background-color: white; font-size: 15.4px;"><b><u>ரயிலேறி.....</u></b></span></span></p><p style="text-align: justify;"><span style="color: #222222;"><span style="background-color: white; font-size: 15.4px;">நண்பர்களே,</span></span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">பயணங்கள் என்று சொல்லும்போது, அதற்காக நாம் பயன்படுத்தும் வாகனங்கள் பலவகைப்படும். <span></span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">வாகனமே இல்லாமலும் பயணப்படலாம் கால் நடையாக.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">வாகனங்களில் , இருசக்கர வாகனம்,மாட்டு வண்டி, குதிரைவண்டி, மகிழுந்து, பேருந்து, டிராக்டர், தொடரி எனப்படும் ரயில் வண்டி, வான ஊர்தி , தோணி, படகு, கப்பல் போன்ற வாகனங்கள் நம் நினைவிற்கு வரும்.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">இவற்றிற்கான பயணப் பாதைகளும் அந்தந்த வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப, நிலம் நீர் ஆகாயம் எனும் வரையறைகளுக்குள் ஏதேனும் ஒன்றில்தான் அமையும் என்பதும் நாம் அறிந்ததே.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">அவ்வகையில் , தரையில் ஓடும் வாகனங்கள் மூலம் தரையிலும் ஆகாயத்தில் ஓடும் வாகனங்கள் மூலம் ஆகாயத்திலும் , நீரில் ஓடும் வாகனங்கள் மூலம் நீரில் மட்டுமே பயணிக்க முடியும் என்பதும் நடைமுறை சாத்தியங்கள்.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">அப்படி சாலை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் ரயில் மார்க்கமாகவும் விமானம் மார்க்கமாகவும் பல பயணங்கள் மேற்கொண்டிருந்திருந்தாலும் இந்த பதிவில் குறிப்பிடப்போகும் கடற் பயணம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பயணமாக அமைந்திருந்தது.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">எமது முந்தைய பதிவுகளான,</span><a href="https://koilpillaiyin.blogspot.com/2023/10/blog-post.html">காதல் தேசத்தில்</a><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;"> மற்றும் </span><a href=" https://www.blogger.com/blog/post/edit/8101082149516019834/644636156440966433" style="font-size: 15.4px;">பொக்கிஷ பேரழகே</a><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;"> போன்ற பதிவுகளில் குறிப்பிட்டிருந்ததுபோல் அந்த <b>பிரஞ்சு</b> பயணம் எனக்கு பலவகைகளில் சிறப்பான பயணமாக அமைந்திருந்தது, அதில் இரண்டு உங்களுக்கு தெரியும் இது அடுத்தது.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;"></span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">எனக்கு நினைவு தெரிந்து முதன்முதலாக பத்தாம் வகுப்பு படிக்கும் போது மேற் கொண்ட முதல் படகு பயணம் கன்னியா குமரி கரையிலிருந்து விவேகானந்தர் பாறை வரை சென்று வந்தது.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">பின்னர் கேரளாவில் எர்ணாகுளதிலிருந்து கொச்சி வரை என நினைக்கின்றேன்.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">அதை தொடர்ந்து, ஒக்கேனக்கல் பரிசல் பயணம்,கொடைக்கானல், </span><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">கோவா,</span><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">பாண்டிச்சேரி , போன்ற உள் நாட்டிலும் , இங்கிலாந்து, ஸ்காட்லாந்த்து, ஸ்விட்சர்லாந்து, அமேரிக்கா, எகிப்த்து, சிங்கப்பூர் , துருக்கி, ஜார்ஜியா போன்ற வெளி நாடுகளிலும் ஏரிகள் , கடல்கள் போன்றவற்றின் மீது பயணித்திருந்தாலும் இந்த பதிவில் வரும் கடற் பயணம் இவை எல்லாவற்றிலுமிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்ததற்கு காரணம்.....</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; color: #222222; font-size: 15.4px;">மேற்சொன்ன அனைத்து பயணங்களும் அந்ததந்த ஊர்களின் நீர் பரப்பிற்குள்ளாகவே நடைபெற்றவை. ஆனால் இந்த பயணம் ஒரு நாடு விட்டு வேறு நாட்டிற்கு செல்லும்படியான கடற்பயணம் என்பது மட்டுமல்ல.... அதையும் தாண்டி....</span></p><p style="text-align: justify;">இந்த பயணம் கடல் பயணமானாலும் அதற்கான வாகனம், படகோ , ferri யோ , கப்பலோ அல்ல.</p><p style="text-align: justify;">மாறாக ரயில்.. ஆம். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தேசங்களை இணைக்கும் கடல் மார்க்கமான- அதாவது கடலுக்கடியிலுள்ள மார்க்கமாக Euro Star எனும் தனியார் நிறுவனம் மற்றும் UK அரசு இணைந்து நடத்தும் ஆழ்கடல் சுரங்கப்பாதை ரயில் சேவை அது.</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhDJ0dTvaFY-VdDrTSb5GN45dOFYLfxKfoknds7pgO8HHFsPsJ9NUX1OR7ZJSgVY85hleuzYMinF-CNc2rMOZCDlzfpaDHYfaXkSENiG0zCv3C6xHbiKVh8FA0J8QG4hePx1txqHQoACAJPlR-C-4MpyDVBDXOE89gNBdIlMqMkuX4exEJZZMXeYmu2xwLD" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="134" data-original-width="376" height="114" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhDJ0dTvaFY-VdDrTSb5GN45dOFYLfxKfoknds7pgO8HHFsPsJ9NUX1OR7ZJSgVY85hleuzYMinF-CNc2rMOZCDlzfpaDHYfaXkSENiG0zCv3C6xHbiKVh8FA0J8QG4hePx1txqHQoACAJPlR-C-4MpyDVBDXOE89gNBdIlMqMkuX4exEJZZMXeYmu2xwLD" width="320" /></a></div><br /><br /><p></p><p style="text-align: justify;">உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை ரயில் பயணம் இது. </p><p style="text-align: justify;">சுமார் 31.5 மைல்களுக்கு ஆங்கில கால்வாய் என அழைக்கப்படும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 246 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் பாதையில் இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் சென்றடைய சுமார்இரண்டு மணி 16 நிமிடங்கள் ஆகின்றது.</p><p style="text-align: justify;">இந்த ஆழ்கடல் சுரங்கபாதையின் நீளத்தை அறிந்துகொள்ள 169 ஈபிள் கோபுரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக நீள வடிவில் படுக்க வைத்தாற்போல் அடுக்கினால் எவ்வளவு நீளம் வருமோ அத்தனை நீளம் என்றறியப்படுகிறது.</p><p style="text-align: justify;">இதில் ஆட்கள் மட்டுமின்றி சிறிய ரக வாகனங்களும் ஏற்றி செல்லப்படுகின்றன.</p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhsTwkoXnmaScL5MFATCjoTkqccj_7gezo_JWlqQJUcHI_O4Iu5J_ksCRltj_eM9g3xutoWCX4hitR7Ngq39ZH-uLtBe0CwjiNJGY8YPI0peXpg_wr5L0hkSvgMu8q800LeWMabYGaN3hlTmPmEF3PdKhK3N_EbqdIPiUd6LQZkEm_RmD-8tLUCB1sB4RDX" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="159" data-original-width="318" height="160" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhsTwkoXnmaScL5MFATCjoTkqccj_7gezo_JWlqQJUcHI_O4Iu5J_ksCRltj_eM9g3xutoWCX4hitR7Ngq39ZH-uLtBe0CwjiNJGY8YPI0peXpg_wr5L0hkSvgMu8q800LeWMabYGaN3hlTmPmEF3PdKhK3N_EbqdIPiUd6LQZkEm_RmD-8tLUCB1sB4RDX" width="320" /></a></div><br /><br /><p></p><p style="text-align: justify;">இப்படியாக வருடம் முழுவதும் சுமார் 350 ரயில்கள் இயங்குவதாக அறிந்தபோது தைரியமாகவும் வியப்பாக இருந்தது. அதேசமயத்தில் சில நேரங்களில் ஆழ்கடல் ரயில் பயணத்தின்போது ரயில் பழுதாவதும்(பிரேக்டௌன்) உண்டென்று அறிந்தபோது கொஞ்சம் அச்ச மாகவும் திகிலாகவும் இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ? அதே ரயிலில் மீண்டும் திரும்பி வரும்போதும் கலகலப்பான அதே சமயத்தில் கலவையான உணர்வுடன் பயணித்த அனுபவம் மறக்க இயலாது.</p><p style="text-align: justify;">இப்படி வாழ்வில் முதன்முறையாக கடலடியில் ஒரு ரயில் பயணத்தை செய்தது இந்த முறை எமது பிரான்ஸ் பயணத்தின் மற்றுமொரு கூடுதல் சிறப்பு.</p><p style="text-align: justify;"><span style="color: #222222; font-size: 15.4px;">நன்றி,</span></p><p style="text-align: justify;"><span style="color: #222222; font-size: 15.4px;">மீண்டும் ச(சி)ந்திப்போம் </span></p><p style="text-align: justify;"><span style="color: #222222;"><span style="background-color: white; font-size: 15.4px;">கோ.</span></span></p><p style="text-align: justify;"><br /></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-64934291749792834462023-10-27T08:32:00.002-07:002023-10-27T08:32:56.451-07:00மீண்டும்! மீண்டும்!!<p style="text-align: center;"><u>காணத்தூண்டும் !!!</u></p><p style="text-align: justify;">நண்பர்களே,</p><p style="text-align: justify;">உள் மாநிலத்திற்குள்ளாகவே ஒருசில இடங்களுக்கு மறுமுறை அல்லது மீண்டும் சிலமுறை போகும்படியான சூழல் ஏற்படுவது அபூர்வம் தான்.</p><p style="text-align: justify;"><span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">ஒருவேளை தாய் வீடு, மாமியார்வீடு(!!) வேலை நிமித்தமான தலைமை அலுவலகம் , அல்லது பிள்ளைகளின் பள்ளி - கல்லூரி - தங்கும் விடுதி அல்லது அவர்களது வேலை இடம், அல்லது உறவினர்களின் வீட்டு சுப , துக்க நிகழ்வு போன்றவற்றிற்கு வேண்டுமானால் நம் வாழ்வில் ஒன்றிற்கும் மேற்பட்ட முறைகள் செல்லவேண்டி இருந்திருக்கும்.</p><p style="text-align: justify;">அதேபோல வெளி மாநிலங்களுள் சிலவற்றிற்குகூட ஒன்றிற்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் செல்லவேண்டி இருந்திருக்கலாம்..</p><p style="text-align: justify;">அவ்வகையில் வெளி நாடுகளுக்கு அதிலும் குறிப்பாக தொடர்ந்து அதே நாட்டிற்கு அடிக்கடி இல்லையேனும் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள், பேரக்குழந்தைகளை பார்க்க செல்லும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு கிடைத்திருக்கும். </p><p style="text-align: justify;">எப்படி இருந்தாலும் பொதுவாக சொல்லப்போனால் , வியாபார நோக்கம் தவிர்த்து , இதுபோன்று அடிக்கடி ஒரே இடத்திற்கு- ஒரே மாநிலத்திற்கு - ஒரே நாட்டிற்கு செல்வதும் ஒரே ஆண்டில் பலமுறை செல்வதும் மிகவும் அபூர்வமே. </p><p style="text-align: justify;">அபூர்வமே தவிர நடக்கக்கூடாதது ஒன்றும் இல்லை.</p><p style="text-align: justify;">அவ்வகையில் கடந்த மார்ச் மாதம் 2023 ல் சென்றிருந்த ஒரு வெளிநாட்டிற்கு மீண்டும் கடந்த செப்டெம்பர் மாதமும் செல்லும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது.</p><p style="text-align: justify;">இந்த முறை அந்த நாட்டில் சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு மேலும் ஒரு நாட்டிற்கும் சென்று அங்கும் சில நாட்கள் தங்கி சுற்றி பார்த்துவிட்டு வரும் வாய்ப்பையும் உருவாக்கி கொண்டேன்., அதை பற்றி பிறகு சொல்கிறேன்.</p><p style="text-align: justify;">மார்ச் மாதமும் கடந்த மாதமும் சென்றிருந்த அந்த நாடு வில்லங்கமான பல நாடுகளால் சூழப்பட்டிருக்கும் நாடுதான்.</p><p style="text-align: justify;">அவற்றுள் ஒன்று , தற்போது, விபரீதமான, பதட்டமான , மக்களின் உடமைகளுக்கும் உன்னதமான உயிருக்கும் எந்த உத்தரவாதமும் உள் நாட்டு மக்களுக்கே ஊர்ஜிதமில்லா சூழல் நிலவும் உலகின் இருபெரும் வல்லரசுகளாக திகழும் நாடுகளுள் ஒன்று.</p><p style="text-align: justify;">ஒருபக்கம், கருங்கடல், ஒருபக்கம் அர்மேனியா, ஒருபக்கம், அசர்பைஜான் , ஒரு பக்கம் துருக்கி மற்றோரு பக்கம் வல்லரசு ரஷ்யா.</p><p style="text-align: justify;">மேலே சொல்லப்பட்ட இத்தனை செய்திக்குறிப்புகளை வைத்து நான் எந்த நாட்டிற்கு இந்த ஒரே வருடத்தில் இரண்டு முறை பயணித்தேன் என்பதை துல்லியமாக யூகித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.</p><p style="text-align: justify;">ஆம் , அந்த நாட்டின் பெயர் <b>" ஜார்ஜியா".</b></p><p style="text-align: justify;">கிழக்கு ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான இந்த ஜார்ஜியா, ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கு இடையிலான ஒரு நிலப்பரப்பில் அமைந்திருந்தாலும் அது முழுக்க முழுக்க கிழக்கு ஐரோப்பிய நாடாகவே கருதப்படுகிறது.</p><p style="text-align: justify;">எனினும் அந்த நாட்டின் பணம் , ஈரோ அல்ல மாறாக "<b>லாரி"(Lari)</b> என்றழைக்கப்பட்டிருகிறது.</p><p style="text-align: justify;">ஒரு லாரிக்கு சுமார் 31 இந்திய ரூபாய்கள்.</p><p style="text-align: justify;">"ஜார்ஜியன்" மொழி பேசும் சுமார் 4 மில்லியன் மக்களுள் சிலர் ஓரளவிற்கு ஆங்கிலமும் பேசுகின்றனர்.</p><p style="text-align: justify;">உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பயில மாணவர்கள் இங்கு வருவது தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலிய, கனடா, இங்கிலாந்து போன்ற நாட்டு மாணவர்கள் அதிகம். காரணம் இங்கே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கல்விக்கட்டணம் அவரவர் தேசங்களின் கல்விக்கட்டணத்தைவிட மிக குறைவு என்பதே.</p><p style="text-align: justify;">எல்லா பல்கலை கழகங்களிலும் ஆங்கில வழி போதனைதான்.</p><p style="text-align: justify;">இந்த நாட்டின் தலைநகர் திப்லிசி (Tiblisi). அழகான நகரம் என்று சொல்வதுகூட நூறில் ஒருபங்காகத்தான் இருக்கும் நேரில் சென்று பார்க்கும்போது வியப்பால் வாய் பிளக்கும். பலதரப்பட்ட பிரம்மாண்டம்மான கட்டிடங்கள், வண்ண மயமான வீதிகள், இரவு பகல் எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஒரு துடிப்பான நகரம் என்றால் மிகையாகாது.</p><p style="text-align: justify;">கடை வீதிகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் என சுருசுருப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அழகிய நகரம் தான் இந்த Tiblisi நகரம்.</p><p style="text-align: justify;">தொடர்ந்தோடும் ஜீவநதி , ஆறுகள், பசுமை போர்த்திய அதே சமயத்தில் பனி படர்ந்து காணப்படும் மலைத்தொடர்கள், திராட்ச்சைத்தோட்டங்கள் என ஒட்டுமொத்த நாடே இயற்கை சூழ்ந்து காணப்படுகின்றது.</p><p style="text-align: justify;">பதப்படுத்திய திராட்சை பழரசம் - Wine ன் பிறப்பிடமாக இந்த ஜார்ஜியா கருதப்படுகிறது.</p><p style="text-align: justify;">பல சுதந்தர போராட்டங்களுக்கு பின் ஒன்றுபட்ட சோவித் யூனியனில் இருந்து 1991 ல் பிரிந்து தனி சுதந்தர நாடாக தன்னை பிரகடனப்படுத்தி அமைதியான, மக்களாட்சி தத்துவார்த்தமான அடிப்படையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு அழகான நாடாக விளங்கிவரும் இந்த நாடு சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் ஏற்ற நாடாக உலகம் பார்க்கிறது.</p><p style="text-align: justify;">இத்தகைய நாட்டில் சுமார் 3 வாரங்கள் சுற்றித்திரிந்து பார்த்த - பெற்ற அனுபவ பதிவுகள் இன்னும் சிலகாலம் என் நெஞ்சில் பசுமையாய் நிலைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.</p><p style="text-align: justify;">அவற்றுள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.</p><p style="text-align: justify;"><a href="https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgzGtxdQCPxzFdCJwVrPrMkJbhdnF">https://mail.google.com/mail/u/0?ui=2&ik=de76f9cf46&attid=0.1&permmsgid=msg-f:1779007087667743183&th=18b04d85495689cf&view=att&disp=safe</a></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg-FXQnXL51QW2u8-mREfUU8BCDUP-AMS4TuieRJDRFWkSq2uchvwz_2nmZGrtHZUB8uLZh61gkSLHlU8l1oBuEqZ_WoEEvr_GKuzLLKLdS_t8_M-v4-mNOswpOaRHoHwlEyvdvvW-bo5XfCsAtQFzT7IrvKH2_GAP3ysMQuruaET3g619OGnC-OHanvnEq" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="183" data-original-width="275" height="213" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg-FXQnXL51QW2u8-mREfUU8BCDUP-AMS4TuieRJDRFWkSq2uchvwz_2nmZGrtHZUB8uLZh61gkSLHlU8l1oBuEqZ_WoEEvr_GKuzLLKLdS_t8_M-v4-mNOswpOaRHoHwlEyvdvvW-bo5XfCsAtQFzT7IrvKH2_GAP3ysMQuruaET3g619OGnC-OHanvnEq" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjSEwte0Wgd7FDv1pbYTxYgjfA0jS6B9J8e2NlCMJtkmWGuxIu7s2cKoTzWBklcb9xRFRkmBVb39_mtT5jvwHygByraROIO-84aIY3NIg-pB9kEis0lUQoHZ5GFymTZ3uS7g4Qje057Ye5131ksy9zk2do_3B8fIPJQASipMGwPUE_aUMHcNvhA1APowD-f" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="183" data-original-width="275" height="213" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjSEwte0Wgd7FDv1pbYTxYgjfA0jS6B9J8e2NlCMJtkmWGuxIu7s2cKoTzWBklcb9xRFRkmBVb39_mtT5jvwHygByraROIO-84aIY3NIg-pB9kEis0lUQoHZ5GFymTZ3uS7g4Qje057Ye5131ksy9zk2do_3B8fIPJQASipMGwPUE_aUMHcNvhA1APowD-f" width="320" /></a></div><br /><div style="text-align: justify;">மேலே உள்ள சிலை "ஜார்ஜியாவின் அன்னை" என்றழைக்கப்டுகிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தலைநகர் டிபிலிஸியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் சோலோலகி (Sololaki ) என்ற மலையின் உச்சியில் , தலைநகர் திப்லிசி உருவான 1500 ஆவது ஆண்டை சிறப்பாக நினைவுகூரும் வகையில் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த சிலை முதலில் மரத்தாலும் பின்னர் சீதோஷண நிலைகளை மனதில்கொண்டு 1963 ஆம் ஆண்டு தற்காலிகமாக அனுமினியத்தால் வேயப்பட்டும் அதற்கு பின்னர் 1997 ஆம் ஆண்டு அந்த பழைய சிலை நீக்கப்பட்டு முழுக்க முழுக்க அலுமினியத்தால் செய்யப்பட்டு நிரந்தரமாக நிர் மானிக்கப்பட்டிருக்கும் இந்த சிலை நாட்டின் ஒரு முக்கிய அம்சம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நாட்டின் காவல் தெய்வமாக போற்றப்படும் இந்த அழகிய அன்னையின் சிலை தனது இடது கையில், நட்பு நாடிவரும் எந்த நாட்டினரையும் அன்புடன் உபசரித்து பரிமாற திராட்சை பழ ரசம் நிரம்பிய கோப்பையும் , பகை நாடி வரும் எதிரிகளை வெட்டி வீழ்த்த வலது கையில் வீர வாளும் இருக்கும்படி வடிவமைத்திருப்பது மற்றுமொரு சிறப்பு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இவற்றோடு, மற்றுமொரு மலையின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பழமையான நறிகலா (Narikala ) கோட்டை அமைந்திருக்கும் இடத்திலிருந்து ஒட்டுமொத்த டிபிலிஸியின் அழகையும் ஜார்ஜியாவின் மற்றுமொரு பிரதான ஆறான மீட்கவாரி(Mitkvari) ஆற்றின் அழகையும் ஒருசேர காணக்கூடிய வகையில் அமைந்திருக்கும் இந்த கோட்டையின் வடிவமைப்பும் அதன் பழைமையும் வியப்பின் மேலோங்கள் - பிரம்மாண்டத்தின் பிரதிபலிப்பு. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEijyZwpvncKmwa4gfLNssMBz2bx82m7QZjBNa_1hZoGhSiW1qi75fZVi3VRv9Q7RRoRxjrgV857ysVjfjIPcIUnA3y5v-IJAQssB1C1N0ATtxcVrsn3tF0OanWrJFj2LmJGtbd2gT0alrCNIirOVBn-hgo9isaZM1YWSUNucFrOFuI9sQZZmHeHqjubs_gX" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="114" data-original-width="204" height="179" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEijyZwpvncKmwa4gfLNssMBz2bx82m7QZjBNa_1hZoGhSiW1qi75fZVi3VRv9Q7RRoRxjrgV857ysVjfjIPcIUnA3y5v-IJAQssB1C1N0ATtxcVrsn3tF0OanWrJFj2LmJGtbd2gT0alrCNIirOVBn-hgo9isaZM1YWSUNucFrOFuI9sQZZmHeHqjubs_gX" width="320" /></a></div><br /><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மேலும் , கூறா (Kura) ஆற்றின் மேலே, வில் வடிவில் கண்ணாடி மற்றும் இரும்பினால் கட்டப்பட்டு இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அருமையாக காட்சி அளிக்கும் சமாதான பாலம்(Peace bridge), </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjFhYJMo_Mjaxb_Ed09lMudu869790lcZncD8L0wNbl6LgIuo5Ir-zXc76QhBoPNZ4rh5oCmlnJmdwF6k-MWgze4c5fvOdZeuopqJ2EwS-WJJl9Oceff2kZPpQVh81jMa_qOJeHIq6eTChUTSA7BbK1pE-TgLH1SBJgRUjL7sXQ00J3tQLIZg52Lqf9LU8d" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="114" data-original-width="204" height="179" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjFhYJMo_Mjaxb_Ed09lMudu869790lcZncD8L0wNbl6LgIuo5Ir-zXc76QhBoPNZ4rh5oCmlnJmdwF6k-MWgze4c5fvOdZeuopqJ2EwS-WJJl9Oceff2kZPpQVh81jMa_qOJeHIq6eTChUTSA7BbK1pE-TgLH1SBJgRUjL7sXQ00J3tQLIZg52Lqf9LU8d" width="320" /></a></div><br /><span style="text-align: justify;"> </span></div></div><br /></div><div style="text-align: justify;">மற்றுமொரு நகரின் உச்சியில் கட்டப்பட்டு இன்றளவும் வழிபாட்டு தலமாக விளங்கும் புனித திரித்துவ பேராலயம்,.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhpIwxhihcC12XfxOl10jVBmj-9yBVmvahIuktxCQLhdNjbGiqri-io7J_P4Q1XJ5WX4NDcQLrassIvrE6TsfiQ5tHLYVH-4psceueOxmHKN3BSOKO6sL18rrlKtRkx_d68b7buSPB02eQKo2AOHDZCayCBY-k6hImQBiMyVuwVGnCpw0EuAQWOwbwexjOb" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="114" data-original-width="204" height="179" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhpIwxhihcC12XfxOl10jVBmj-9yBVmvahIuktxCQLhdNjbGiqri-io7J_P4Q1XJ5WX4NDcQLrassIvrE6TsfiQ5tHLYVH-4psceueOxmHKN3BSOKO6sL18rrlKtRkx_d68b7buSPB02eQKo2AOHDZCayCBY-k6hImQBiMyVuwVGnCpw0EuAQWOwbwexjOb" width="320" /></a></div><br /><br /></div><div style="text-align: justify;">அதேபோன்ற எல்லோராலும் மிகவும் நேசிக்கப்படுகின்ற நகரின் மற்றுமொரு மைல்கல்லான திப்லிசி Funicular. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">Funicular என்பது சருக்கலான அல்லது செங்குத்தான மலை பாதையில் கேபிள் கார் போன்று கேபிள் ரயில் பெட்டிகள் கொண்ட ஒரு பயண அமைப்பு. 1905 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்த மலை ரயில் பயணம் நம்மை மலைமேலுள்ள அழகிய சுற்றுலா ஸ்தலத்திற்கு கொண்டு சென்று திரும்ப அழைத்து வரும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjZwv3zFhUVQNq0Mt4klh_sojPq2wuuIVebAL5HdE-C1TzATWmz50MbaBsDlO62PQbs38PfaPyl4FgRt_mFHXcGFY-pa2H2ns6oSwC5RhgIHrKoTWtCK253gBEh4Tc4a3vVBmmkq-MsJ8t89C-tcUQXmwGKvrQ3ReORXJXlI5CdKvCwXg3iEFSfiitSuBMt" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="95" data-original-width="118" height="240" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjZwv3zFhUVQNq0Mt4klh_sojPq2wuuIVebAL5HdE-C1TzATWmz50MbaBsDlO62PQbs38PfaPyl4FgRt_mFHXcGFY-pa2H2ns6oSwC5RhgIHrKoTWtCK253gBEh4Tc4a3vVBmmkq-MsJ8t89C-tcUQXmwGKvrQ3ReORXJXlI5CdKvCwXg3iEFSfiitSuBMt" width="298" /></a></div><br /> </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நண்பர்களே,</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மூன்று வாரங்களுக்கு மேலாக சுற்றி திரிந்து பார்த்த கேட்ட அனுபவ நினைவுகளையும், <b>மீண்டும் மீண்டும் </b>மற்றுமொருமுறையேனும் நேரில் <b>காணத்</b> <b> தூண்டும்</b> பேரழகை தன்னகத்தே கொண்டுள்ள இந்த அழகிய சிறிய நாட்டின் வியப்பூட்டும் மேலும் சில விடயங்களை நேரம் வாய்க்கும்போதெல்லாம் பதிவேற்றி பகிர்ந்துகொள்ள முயல்கிறேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதுவரை நன்றி வணக்கம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மீண்டும் ச)சி)ந்திப்போம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கோ. </div></div><p style="text-align: justify;"> </p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-6446361564409664332023-10-18T05:36:00.004-07:002023-10-18T07:49:41.914-07:00 பொக்கிஷப்பேரழகே! <p style="text-align: center;"><span style="text-align: justify;"><u>உன் புன்னகை என்ன விலை?</u></span></p><p class="MsoNormal" style="text-align: justify;">நண்பர்களே,</p><p class="MsoNormal" style="text-align: justify;">இந்த பதிவிற்கு முன் வெளியிட்ட <a href="https://koilpillaiyin.blogspot.com/2023/10/blog-post.html">காதல் தேசத்தில் ...</a> சொன்னதுபோல், இந்தமுறை எனது பிரான்ஸ் பயணம் பலவகையில் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருந்தது. அவற்றுள் அடுத்த சிறப்பு:<span></span></p><a name='more'></a><p></p><p class="MsoNormal" style="text-align: justify;">பல ஆண்டுகளாக அறிந்திருந்தும், அதன் சிறப்புகளை புளங்காகிதத்துடன் படி த்தறிந்திருந்தாலும் ஒருமுறையேனும் அதை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்குமா என்று பள்ளி கல்லூரி நாட்களில் மட்டுமின்றி சமீபத்திய நாட்களிலும் நினைத்துக்கூட பார்த்ததில்லை.</p><p class="MsoNormal" style="text-align: justify;">பலமுறை இந்த தேசத்திற்கு வந்துபோய் இருந்தாலும் நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை என்று சொல்வதைவிட, அதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரவில்லை என்பதைவிட கண்கூடி வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.</p><p class="MsoNormal" style="text-align: justify;">இந்தமுறை நமக்கு வேறு முக்கிய வேலைகள் இல்லை என்பதாலும் இன்னும் ஓரிரு நாட்கள் இங்கேதானே இருக்கப்போகிறோம் என்பதாலும் சரி இந்தத்தடவை கண்டிப்பாக பார்த்துவிடவேண்டும் என்றெண்ணி, தங்கி இருந்த வீட்டிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த குறிப்பிட்ட இடம் வந்துவிட்டேன்.</p><p class="MsoNormal" style="text-align: justify;">இதேபோல் தங்களின் வாழ்க்கை லட்சிய பட்டியலில் முதன்மை முன்னுரிமை பெற்றிருக்கும் சில விடயங்களில் இதுவும் ஒன்று என்றெண்ணி இருந்த உலகத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் வரிசையில் நின்றிருந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள் , ஒரு நாளைக்கு சுமார் 45,000 பேர்கள் இங்கே வருவதாக தகவல்கள் சொல்கின்றன.</p><p class="MsoNormal" style="text-align: justify;">அங்கே பணிபுரியும் நண்பரின் உறவினர்மூலம் முன்பதிவு செய்யப்பட்ட அனுமதி சீட்டுடன் சென்றிருந்த நமக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் நேரம் தவிர்க்கப்பட்டது.</p><p class="MsoNormal" style="text-align: justify;">சாரை சாரையாக செல்லும் பெருங்கூட்டத்தோடு நகர்ந்து - ஊர்ந்து , பிரான்ஸ் நகரின் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள உலகத்தின் மிகப்பெரிய அருங்காட்சியகமான <b>"<span face="arial, sans-serif" style="background-color: white; color: #4d5156; font-size: 14px; text-align: left;">Louvre Museum" </span></b> உள்ளே சென்றேன்.</p><p class="MsoNormal" style="text-align: justify;">அளவை பொறுத்தமட்டில் உலகிலுள்ள அத்தனை அருகாட்ச்சியாகங்களுள் மிகப்பெரிய அருங்காட்சி அகமாக <span style="background-color: white;">(<span face=""Google Sans", arial, sans-serif" style="color: #040c28; font-size: 16px; text-align: left;">the largest museum on Earth) </span></span>கருதப்படுகிறது.</p><p class="MsoNormal" style="text-align: justify;">403 பிரமாண்ட அறைகள் கொண்ட இந்த அருங்காட்சியகத்தின் தாழ்வாரம் என்று சொல்லப்படும் CORRIDOR மட்டுமே சுமார் 8.5 மைல்கள்.</p><p class="MsoNormal" style="text-align: justify;">விலைமதிக்க முடியாத சுமார் 35,000 கலை பொக்கிஷங்களை உள்ளடக்கிய 652300 சதுர அடி பரப்பளவுள்ள நான்கடுக்கு கொண்ட மிக பிரமாண்ட கட்டிடம் அது.</p><p class="MsoNormal" style="text-align: justify;"><br /></p><p class="MsoNormal" style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhqbxXbbFpLuWPAjSOukZbTPdU9pfkDSrJJq2INEMNXcUgUNmGGInWAcQGPeEk02JJcOmsAx-VX2P76A97JSEw9VPu26BB8QHhk-qKO6hijfp9E6Ed5EOdt5vcPBypvpLbOowC1bisP3E7yojXbA8_I5eXOUvAkyP88GsqjAEf-LG18pGc4pkX3fIbZ987o" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="183" data-original-width="275" height="213" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhqbxXbbFpLuWPAjSOukZbTPdU9pfkDSrJJq2INEMNXcUgUNmGGInWAcQGPeEk02JJcOmsAx-VX2P76A97JSEw9VPu26BB8QHhk-qKO6hijfp9E6Ed5EOdt5vcPBypvpLbOowC1bisP3E7yojXbA8_I5eXOUvAkyP88GsqjAEf-LG18pGc4pkX3fIbZ987o" width="320" /></a></div><br /><br /><p></p><p class="MsoNormal" style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjWdo7YalFVIVou5q9ZVkrHv2hYxYEveR5xGpRyyoR0AOwmmbGC4r1sUeqSlvZlcvWeZicj21A_JscGPDSQvgDIixkXCXkQuJlT-LVyqVgTTKzGS4lh-IjQWypzuY523uWav4azgMHxAH0bt2Pw2l6gvn5ln4-XFwPXOkceW0BhwYxEgfU4otjiGcyYNlK-" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="550" data-original-width="1200" height="147" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjWdo7YalFVIVou5q9ZVkrHv2hYxYEveR5xGpRyyoR0AOwmmbGC4r1sUeqSlvZlcvWeZicj21A_JscGPDSQvgDIixkXCXkQuJlT-LVyqVgTTKzGS4lh-IjQWypzuY523uWav4azgMHxAH0bt2Pw2l6gvn5ln4-XFwPXOkceW0BhwYxEgfU4otjiGcyYNlK-" width="320" /></a></div><br /><br /><p></p><p class="MsoNormal" style="text-align: justify;">எதை பார்ப்பது எதை விடுவது? ஒவ்வொன்றின் சிறப்புகளை வாசித்துக்கொண்டும் அங்கே கூடுதல் காசுகொடுத்து வாங்கப்பட்ட பல மொழிகளில் விளக்கம் சொல்லு கருவியின் துணையுடனும் அறிந்துகொண்டு அடுத்த பொக்கிஷத்தை பார்க்க நகரவே குறைந்த பட்சம் 5 நிமிடங்களாவது ஆகும்.அப்படி பார்த்தால் அங்குள்ள அத்தனையையையும் பார்த்து முடிக்க பல நாட்கள் ஆகும் என்பதால் , பல அறிய கலைப்பொருட்களை குறித்து அறிய முழுமையாக முடியாமலேயே அடுத்தடுத்து நகரவேண்டி இருந்தது.</p><p class="MsoNormal" style="text-align: justify;">ஒரு நாளில் எவராலும் இதை முழுமையாக ஒவ்வொன்றாக பார்த்து முடிப்பது அரிதிலும் அரிது ஏனென்றால் இது அளவிலும் வைக்கப்பட்டிருக்கும் பொருட் க் களின் எண்ணிக்கையிலும் பெரிதினும் பெரிது.</p><p class="MsoNormal" style="text-align: justify;">வரலாற்று காலங்களுக்கு முன்பிருந்து 19ஆம் நூறாண்டுவரையிலான பல அரி ய படைப்புகள் ஏகப்பட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் எமது இலக்கம் இவை அல்ல வேறொன்று.</p><p class="MsoNormal" style="text-align: justify;">அது என்ன?</p><p class="MsoNormal" style="text-align: justify;">இன்றுவரை எவராலும் அறுதி இட்டு உறுதியாக - துல்லியமாக சொல்ல இயலாதவண்ணம் ஒரு மந்திரப்புன்னகையும் எந்த பக்கம் திரும்பினாலும் நம்மையே ஊடுருவி பார்க்கும் காந்த விழிகளாலும் சோகமா, மகிழ்ச்சியா, கோபமா, கிண்டலா, ஏளனமா, ஏக்கமா, ஏமாற்றமா, அல்லது நிதானமா, தன்னடக்கமா, மன நிறைவின் பிரதிபலிப்பா என்று பலகாலம் பலராலும் வாக்குவாதம் செய்யும் அளவிற்கு பல்வேறு பாவனைகளை தன்னகத்தே கொண்டுள்ள அந்த ஓவியத்திலுள்ள நபரின் உணர்ச்சியை எவராலும் சொல்ல முடியாத அந்த அழகிய முகத்தில், இறுதியாக, பிரதிபலிப்பது <b>மகிழ்சி</b>யே என ஏக மனதாக ஓவிய துறையில் பாண்டித்யமும் நுண் அறிவும் கொண்ட ஜாம்பவான்களால் ஏக மனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் இந்த கருத்து மாறுபட கூடும்.</p><p class="MsoNormal" style="text-align: justify;">இத்தனை சிறப்பு வாந்த அந்த ஓவியம் வெறும் 30க்கு 21 இன்ச் அளவுகொண்ட பாதி அளவிலான ஒரு பெண்ணின் ஓவியம்.</p><p class="MsoNormal" style="text-align: justify;">ஆம் அது கிபி 1503 முதல் 1519 வரை சுமார் 16 ஆண்டுகளாக உலகின் அன்றைய மட்டுமல்ல இன்றைக்கும் தலைசிறந்த ஓவியராக புகழின் உச்சாணி கொம்பில் சற்றும் சரிவோ சறுக்கலோ இன்றி புகழோடு விளங்கும் <b>லியோனார்டூ டாவின்ச்சி</b>யின் பல உன்னத படிப்புகளில் மாஸ்டர் பீஸ் என அழைக்க படுவதும் இன்றளவும் அதற்கொரு விலையை அதன் மதிப்பை எந்த நாட்டு கரன்சியிலும் கணக்கிட்டு தீர்க்கமுடியாத விலைபதிப்பற்ற கைவண்ணமாகிய, <b>மோனாலிசா</b> ஓவியம்தான்.</p><p class="MsoNormal" style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgV_GNJK8HEL5OqpI9lu_r4Xj2_BYfK_AbCaDsytQdFenaRFEx77-N5qVwmMJ-zC8KVHKLUI6Og8oIM3k-blFEzDuz9-oSGjo0lGB7CqEMIhIaaskNiko7rH6xHHPojvUOmXCmmHjA3O5ktiy-lWfCpI4glkmD20cKBntj8EdNI6gAOVOCNZjOxCafjeRsm" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="160" data-original-width="285" height="180" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgV_GNJK8HEL5OqpI9lu_r4Xj2_BYfK_AbCaDsytQdFenaRFEx77-N5qVwmMJ-zC8KVHKLUI6Og8oIM3k-blFEzDuz9-oSGjo0lGB7CqEMIhIaaskNiko7rH6xHHPojvUOmXCmmHjA3O5ktiy-lWfCpI4glkmD20cKBntj8EdNI6gAOVOCNZjOxCafjeRsm" width="320" /></a></div><br /><br /><p></p><p class="MsoNormal" style="text-align: justify;">எத்தனையோ நுணுக்கங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் அந்த ப துமையின் ஓவியத்யதின் மற்றுமொரு சிறப்பு செல்வ செழிப்பான குடும்ப பின்னணியில் வாழ்ந்தவராயினும் ஒரு குன்றுமணி அளவில் கூட எந்த பொ ன்னகையையும், மாணிக்க, மரகத, வைர, வைடூரிய , கோமேதக... அணிகலன்கள் ஏதும் அணியாமல் எத்தனை கோடி பொன்னாபரணமும் கொடுக்கக்கூடாத அளவான புன்னகையும் மோனாலிசாவின் தலையில் அணிந் திருக்கும் கண்ணுக்கு சட்டென புலப்படாத மெல்லிய முக்காடும்தான்.</p><p class="MsoNormal" style="text-align: justify;">இதோ இங்கே, அதோ அங்கே என பரபரத்தும் பரவச நிலையிலும் அலைந்து கொண்டிருக்கும் பெருங்கூட்டத்தினரிடையே, அந்த அழகு ஓவியம் வைக்கப்பட்டிருக்கும் அந்த அருங்காட்சி அகத்திலே மிக பெரிய அறைக்குள்ளாக சென்றதும் அதோ அதுதான் என தூரத்தில் ஒரு ஓவியத்ததை அடையாளம் கண்டுகொண்டேன், உடனே நெருங்கிச்சென்று பார்க்க முடியாதளவிற்கு மக்களின் பெருவெள்ளம்.</p><p class="MsoNormal" style="text-align: justify;">இருந்தாலும் இதற்காகத்தானே இத்தனை நாட்கள் ஏங்கி இருந்தோம் ,கொஞ்சம் நிதானமாக செல்வோம் என்றெண்ணி மெதுவாக மெதுவாக முன்னேறி இப்போது எனக்கும் அந்த அழகிற்கும் இடையில் அந்த தடுப்பு கைப்பிடியைத்தவிர, ஓரிரு அதிகாரிகளைத்தவிர யாரும் இல்லாத அருகில் சென்று பல கோணங்களை அதன் அழகை - சிறப்பை, சிரிப்பை, கண்களை முகத்தை பல பத்து நிமிடங்கள் அங்கேயே நின்று ரசித்தபோது என் உள்ளம் கொண்ட உவகையும் ஆனந்தமும் எனக்குக்கூட சரியாக தெரியமா என்று எனக்கு தெரியாது ஆனால் அங்கே என்னையே பார்த்துக்கொண்டிருந்த மோனாலீசானாவை தவிர வேறு யாராலும் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. (வாய்ப்பில்லை ராஜா- கோ )</p><p class="MsoNormal" style="text-align: justify;">அப்படியே பல கோணங்களில் அந்த ஓவியத்தை படம் பிடித்துக்கொண்டும் செல்ஃபி எடுத்துக்கொண்டும் பரவச நிலையில் இருந்தவர்கள் பல நூறுபேர்கள். </p><p class="MsoNormal" style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj74ASfamJ3fv4yQj7r0ema42Atp2zBaHbcqk9ozZL4z8Nyks3YpxkFhjtqwRbgovsEjRHCbMv2rtub7q42m7xKfGW63RMhE0pAt7TN5QylSbC8k2ggyjxz0UO_c8cIZFSJhVH0RB4PyxhRdApZDFqOcZa_7uXx5d31WMUx0N-F7g8pjQk9dDKe8aAWqOtT" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="261" data-original-width="193" height="240" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj74ASfamJ3fv4yQj7r0ema42Atp2zBaHbcqk9ozZL4z8Nyks3YpxkFhjtqwRbgovsEjRHCbMv2rtub7q42m7xKfGW63RMhE0pAt7TN5QylSbC8k2ggyjxz0UO_c8cIZFSJhVH0RB4PyxhRdApZDFqOcZa_7uXx5d31WMUx0N-F7g8pjQk9dDKe8aAWqOtT" width="177" /></a></div><br /><br /><p></p><p class="MsoNormal" style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjjr--MlpywxZ4KqVHj1ZEO6KxDPHn7sEIHIXWNShphAzWNGWKiYHDLu8Rmv6_5RFkWrYl5S9nJHq4yRfDKuLabifSSnRMMGQ6Kazj-zgBET_UGHFyJok_5nwQfxnJqvmlbPUnnBsRAoaydNqjBOemlm0u0RpYgUCpo5Xw--CH_22sfSuHCsaK6x1CAnSpN" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="194" data-original-width="259" height="240" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjjr--MlpywxZ4KqVHj1ZEO6KxDPHn7sEIHIXWNShphAzWNGWKiYHDLu8Rmv6_5RFkWrYl5S9nJHq4yRfDKuLabifSSnRMMGQ6Kazj-zgBET_UGHFyJok_5nwQfxnJqvmlbPUnnBsRAoaydNqjBOemlm0u0RpYgUCpo5Xw--CH_22sfSuHCsaK6x1CAnSpN" width="320" /></a></div><br /><br /><p></p><p class="MsoNormal" style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhOOA6rgkjqdWx4u2ZZKqYwo1c_aTmMzbgFiyGg3Kr2qaN4kVlXMkxN_wNMiLA_cHWmpSS1fuywUtLI72IRMoDPQRoDHFjcIyX14GyWikp_q0JFc4u1LU3UI5C0HTKMu2rYYATgphbkFRiMVRBpgnfpNJFshPugmhjmcw7erOCLae79sGa8MD9oPn1HxURK" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="186" data-original-width="271" height="220" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhOOA6rgkjqdWx4u2ZZKqYwo1c_aTmMzbgFiyGg3Kr2qaN4kVlXMkxN_wNMiLA_cHWmpSS1fuywUtLI72IRMoDPQRoDHFjcIyX14GyWikp_q0JFc4u1LU3UI5C0HTKMu2rYYATgphbkFRiMVRBpgnfpNJFshPugmhjmcw7erOCLae79sGa8MD9oPn1HxURK" width="320" /></a></div><br /><div style="text-align: justify;">நூறாண்டுகளுக்கு(1911) முன் அதே அருங்காட்சிசியகத்தில் பணி புரிந்த ஒரு தொழிலாளியால் திருடப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட பிறகே அதன் மகத்துவத்தையும் மகிமையையும் அறிந்துகொண்டது இந்த உலகம். </div><div style="text-align: justify;"><br /></div><div><div style="text-align: justify;">1962 களிலேயே அதன் மதிப்பு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருந்த இந்த ஓவியத்தின் இன்றைய மதிப்பை சொல்லவும் வேண்டுமோ? </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">15 ஏப்ரல் 1452 ஆம் இத்தாலியில் பிறந்து மாபெரும் ஓவியனாக பல அரசர்களின் - தனவந்தர்கள் விருப்பத்திற்கேற்ப நாட்டின் பல்வேறு சிறப்பு கட்டிடங்களில் தமது கைவண்ணத்தை படைத்து மே மாதம் 2 ஆம் நாள் 1519 ல் தாம் மரணித்தவரையில் அவர் வரைந்த ஓவியங்கள் மொத்தமாக 20 மட்டுமே என்பது வியப்புகுரியதாக இருந்தாலும் , ஓவ்வொரு ஓவியத்திற்கு அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை , துல்லியமான அணுகுமுறை , ஆராய்ச்சி,பொறுப்புணர்ச்சி , அர்ப்பணிப்பு நன்குணரப்படுகிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இவரின் படைப்புகளில் அதி உன்னதமானதாக போற்றப்படும் மற்றுமொரு படைப்பு, உலக புகழ்வாய்ந்த " கடைசி ராப்போஜனம்" என்றழைக்கப்படும் "THE LAST SUPPER". இத்தாலி நாட்டின் புகழ்மிக்க நகரங்களுள் தனித்துவம் வாய்ந்த பெருநகரமான மிலானில் , SANTA MARIA என்றழைக்கப்படும் தேவாலயமும் அதனூடே மைந்திருக்கும் கான்வென்ட் கட்டிடத்தின் ஒரு பக்க சுவற்றில் வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியமும்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நேரில் சென்று பார்க்கும் பாக்கியம் கிடைக்கப்பட்ட இந்த <b>THE LAST SUPPER</b> ஓவியம் குறித்தும் மற்றும் <b>லியோனார்டூ டாவின்ச்சி</b> தமது ஓவிய பயிற்சி பெற்ற<b> பிளாரன்ஸ் </b> நகரின் அழகியலை - அனுபவத்தையும் குறித்தும் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எ<b>ழு</b>த்துரைக்க முயல்கிறேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இப்படி ஓவிய உலகின் ஜாம்பவானாக இன்றளவும் போற்றப்படும் மா மனிதரின் படைப்புகளை நேரில் சென்று பார்த்த அனுபவத்தின் நிறைவான மகிழ்ச்சியுடன் சுமார் 5 மணி நேரம் கழித்து அருங்காட்சியகத்திவிட்டு வெளியில் வந்தாலும் கண்ட காட்சிகளும் அதன் மன நிறைவும் என் அகத்தைவிட்டு ஒருபோதும் வெளியேறிவிடாவண்ணம் நினைவு பதிவேட்டில் வண்ணம் கொண்டு தீட்டி வைத்திருக்கின்றேன். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தனி மனித படைப்புகளில் விலைமதிக்க முடியாத படைப்புகளின் பட்டியலில் முன் வரிசையில் வைத்து பார்க்க வேண்டிய படிப்புகளில் இது ஒரு உன்னத படைப்பாகத்தான் இந்த பதுமையின் ஓவியத்தை இந்த உலகின் பல கண்கள் பார்க்கின்றன..</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இந்த கலைக்கூட கருவூலத்தில் பிரமிப்புடன் சுற்றிக்கொண்டிருந்த அதே சமயத்தில் தனிமனித கலை ஆர்வம் - விருப்பத்திற்கிணங்கள், பலருடைய உழைப்பால், உருவாக்கப்பட்ட நம்ம ஊர் தாஜ் மகாலும் தஞ்சை பெருவுடையார் கோவிலும், வியக்கவைக்கும் கோவில் சிற்பங்களும், 1906 வரை நம்மிடையே வாழ்ந்துவந்த ராஜா ரவிவர்மாவின் சகுந்தலா, ஹம்சா தமயந்தி, தமயந்தி, விஷ்வாமித்ரர், திலோத்தமை,கிருஷ்ணா லீலை போன்றவை எந்த விதத்திலும் எவருக்கும் எவற்றிற்கும் நிகரில்லை என்னும் கர்வமும் எனக்குள் அவ்வப்போது தலை தூக்கியதும் உண்மையே.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh4tnBKs_7U19PgAFoqKt-H_Iu1Jt8GVSCbdzGxaCHYMMFGbEIUvmk76NEScXDAWH_tKE3Izgyb3RFdXNU2HEbxeLAVus3z6OtgKyvFelcZB4RsjC8dUrXRxpaTgcQ9QRPk7PkFcHZ96CXAsYEbrXP0gS8MXf7qHKXwlIKoojH-fgqD0nXxQBJlsy-iHR1K" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="168" data-original-width="300" height="179" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh4tnBKs_7U19PgAFoqKt-H_Iu1Jt8GVSCbdzGxaCHYMMFGbEIUvmk76NEScXDAWH_tKE3Izgyb3RFdXNU2HEbxeLAVus3z6OtgKyvFelcZB4RsjC8dUrXRxpaTgcQ9QRPk7PkFcHZ96CXAsYEbrXP0gS8MXf7qHKXwlIKoojH-fgqD0nXxQBJlsy-iHR1K" width="320" /></a></div><br />விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் மோனாலிசா ஓவியத்தின் சிறப்பை அதன் வரலாற்றை தேடிப்பிடித்து வாசித்து மகிழவும். </div><p class="MsoNormal" style="text-align: justify;">நன்றி.</p><p class="MsoNormal" style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம்.</p><p class="MsoNormal" style="text-align: justify;">கோ.</p><p class="MsoNormal" style="text-align: justify;"><br /></p></div>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-69616494849002150202023-10-16T07:24:00.002-07:002023-10-16T09:02:33.422-07:00காதல் தேசத்தில் ... <p style="text-align: justify;"><br /></p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: center;"><b><u>கல்யாணத்திருவிழா!!</u></b></p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;"><span style="background-color: white;">நண்பர்களே,</span></p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;"><span style="background-color: white;">கடந்த மே மாதம், மீண்டும் ஒருமுறை பிரான்ஸ் தேசம் செல்லவேண்டி இருந்தது.</span></p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;"><span style="background-color: white;">கடந்த 23 ஆண்டுகளில் பலமுறை இந்த காதல் தேசத்திற்கு சென்றிருந்தாலும் இந்த முறை சென்ற பயணம் பல விதங்களில் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருந்தது. <span></span></span></p><a name='more'></a><p></p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;"><span style="background-color: white;">அவற்றுள் முதன்மையானது... என் இனிய நண்பரின் மகளின் திருமணம். </span></p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;"><span style="background-color: white;">அப்படி ஒரு திருமண நிகழ்வை அதற்கு முன்வரை நான் கண்டதில்லை. நாவல்களிலும், திரைப்படங்களிலும் படித்தும் பார்த்தும் இருக்கலாம் ஆனால் நேரில் பார்த்த அனுபவம் இப்போதுதான்.</span></p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;"><span style="background-color: white;">காலையில் 10 மணிக்கு தேசிய சட்ட விதிகளுக்குட்பட்டு அரசு சார்பதிவு அலுவலகத்தில் சட்டப்படியும் அதை தொடர்ந்து அதே வளாகத்தில் சுமார் 30அடி தூரத்திலேயே அமைந்திருந்த பழமை வாய்ந்த அதே சமயத்தில் தொடர் உபயோகத்தில் உள்ள வழிபாட்டு திருத்தலமான தேவாலயத்தில் அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையிலான முறைமைகளோடு கூடிய திருமண பிரார்த்தனைகள் நடைபெற்றன.</span></p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;"><span style="background-color: white;">மணமக்கள் இருவரும் அதே நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் இருவரும் சொல்லவேண்டிய திருமண வாக்குறுதிகளை அந்த திருமணத்தை நடத்திவைத்த குருவானவர் தமிழில் சொல்ல சொல்ல இந்த மணமக்கள் தங்களுக்கு எப்படி வந்ததோ அந்த உச்சரிப்பில் வாக்குறுதிகளை இறைவனின் சந்நிதியில் கூடி இருந்த மக்களின் முன் கூறிய விதம் சபையோரின் மத்தியில் சலசலப்பில்லாத கலகலப்பை ஏற்படுத்தியது.</span></p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;"><span style="background-color: white;">சில வாக்கியங்களை நிறுத்தி நிதானமாக இடைவெளிவிட்டு குருவானவர் சொல்ல அதை கிரகித்துக்கொண்டு அப்படியே அவர்கள் சொன்ன விதம் மகிழ்ச்சிகரமாக இருந்தது. </span></p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">பின்னர் அவர்களின் வாக்குறுதிகளின் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிபெயர்ப்பினை அதே குருவானவர் சொல்லி இருவரின் வாக்குறுதிகளை சபை முன்னிலையிலும் இறைவனின் முன்னிலையிலும் உறுதி செய்து நம் தமிழ் முறைப்படி, தேங்காயில் சுற்றிவைக்கப்பட்டிருந்த மஞ்சள் பூசிய திருமாங்கல்ய நாணை மணமகனிடம் கொடுக்க அவர் அதை மணமகள் கழுத்தில் மூன்று முடிச்சுகள் போட்டு ஊரறிய உலகறிய இறைவனின் சந்நிதியில் திருமண பந்தத்தில் இணைத்துக்கொண்டார்.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">இன்றுமுதல் இருவரும், வாழ்விலும் தாழ்விலும் , சுகத்திலும் துக்கத்திலும், மரணம் நம்மை பிரிக்கும்வரை ஒருவரை ஒருவர் மதிக்கவும் அன்புசெலுத்தவும் ஒருவருக்கொருவர் ஒத்தாசைபுரியாவும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கவும் உடன்பட்ட இருவரும் கணவன் மனைவி என அறிவிக்கப்பட்டனர்.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">அதை தொடர்ந்து ஆலயத்திற்கு உள்ளே இருந்தவர்களும் இடம் இல்லாத காரணத்தால் ஆலய பிரகாரங்களின் வெளியிலே கூடி இருந்தவர்களும் எழுப்பிய மகிழ்சி ஆரவாரமும் விண்ணைப் பிளந்த கைத்தட்டல் ஓசையும் மங்கள வாத்திய முழக்கங்களும் ஓரளவிற்கு அடங்கி அடுத்த சம்பிரதாயங்களும், ஆலய பதிவேட்டில் இருவரின் கையொப்பங்களும் சாட்சி கையொப்பங்களும் இடுவதற்கு கொஞ்சம் நேரமானது.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">பின்னர், முகத்திரை(veil) விலக்கப்பட்ட தன் மனைவியின் கரம் பற்றி மாப்பிள்ளை ஆலயம் விட்டு வெளியில் வந்ததும் கூடி இருந்தவர்களின் மகிழ்சி ஆரவாரங்கள் , புகைப்பட கலைஞர்களின் சாகசங்கள்(!!), மணமக்களின் நண்பர்களின் கிண்டல்கள் ஆலய வளாகம் தாண்டி சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளையும் குதூகலிக்க செய்தது.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">அதை தொடர்ந்து சுமார் 10 மைல்கள் தொலைவில் அமைந்திருந்த விழா மண்டபம் , அது மண்டபம் அல்ல அது ஒரு மாளிகை - அரண்மனை.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">பல நூறு ஏக்கர் நிலங்களை தன்னகப்படுத்தி இருந்த ஒரு பெரிய வளாகத்தின் நடுவில் அமைந்திருந்த அந்த அரண்மனையின் ஒரு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட, குறைந்த பட்சம் ஒரு 200 மேசைகளின் மீது வைக்கப்பட்டிருந்த நொறுக்கு தீனிகள்(snacks), குளிர்பானங்களும் , குளிருக்கு இதமான பானங்களும் (அதையும் சேர்த்துதான்)வைக்கப்பட்டிருந்தன.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">மாப்பிள்ளையும் பெண்ணும் அந்த விழா மண்டபம் வந்து சேர்வதற்குள் விருந்தினருக்கான சிற்றுண்டிபோல அமைந்த அந்த உணவு பறிமாற்றலில், முக்கால் வாசி உணவுகள் ஐரோப்பிய வகை என்றாலும் நம்ம ஊரு ஐட்டங்களும் இல்லாமல் இல்லை.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">மண்டப முகப்பில் ஒரு அறிவிப்பு பலகை, அதில் வந்திருந்த விருந்தினர் உள்ளே எங்கே அமரவேண்டும் - அமர வேண்டிய மேசைகளின் எண்கள் போன்ற குறிப்புகள் அடங்கிய பிரத்தியேகமான முறையில் அச்சடிக்கப்பட்ட விவரங்கள்.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">விசாலமான விழா மண்டபத்தின் உட்புற அழகை என்னால் கண்டிப்பாக வர்ணிக்க முடியாது, பதிவின் முகப்பில் குறிப்பிட்டதுபோல நாவல்களிலும் திரைப்படங்களிலும் காட்டப்படுவதுபோன்று அது ஒரு கனவு மாளிகை, கண்கவர் ஓவியங்கள், அலங்கார விளக்குகள் வண்ணம் தீட்டப்பட்ட உயரமான உட்கூரைகள், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட மேசைகள் அதன் மீது வந்திருந்த விருந்தினர்களின் (பெயர்கள் யார் எந்த மேசையில் அமரவேண்டுமென்பதற்காக) நாற்காலிகள், மேசை விரிப்புகள் என அத்தனையும் கண்ணை கவர்ந்தாலும், அதில் முக்கியமாக என்னை கவர்ந்த ஒரு விடயம்:</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">அங்கே அமைக்கப்பட்டிருந்த தானியங்கி புகைப்பட கருவிதான்.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">யார்வேண்டுமானாலும் தங்களை புகைபடமெடுத்துக்கொள்ளலாம் அதை அப்படியே அச்சடித்தும் எடுத்துக்கொள்ளலாம்.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">புகைப்பட கருவியில் start எனும் இடத்தில் தொட்டுவிட்டு சுமார் மூன்று அடி தூரத்தில் நின்றுகொண்டு தங்களை படம் எடுத்துக்கொள்ளலாம். இதில் ஒருவராகவோ, இருவராகவோ, குழுவாகவோ நின்று படம் எடுத்துக்கள்லலாம். எடுத்த படத்தை தமது திரையில் நமக்கு காட்டும். பின்னர் print என்ற இடத்தை தொட்டவுடன் அருகிலுள்ள printer கருவி print எடுத்து கொடுத்துவிடும்.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">எடுத்த படம் நமக்கு திருப்தி இல்லை என்றால் print கட்டளை கொடுக்காமல் வேறொரு படமும் எடுத்துக்கொள்ளலாம், இப்படி ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை விதங்களிலும் எடுத்துக்கொள்ளும் புகைப்பட வசதி அமைந்திருந்தது எனக்கு புதுமையாக தோன்றியது.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">மணமக்கள் வந்தபிறகு, ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம், இடையிடையே, வெள்ளமென வழிந்தோடும் வண்ண விளக்கொளியில் - வெளி தோட்டத்தில் மணமகளின் சகோதரன் ஒழுங்கு செய்திருந்த 30 பேர்கள் கொண்ட அவரது நண்பர்கள் குழுவினர் பிரஞ்சு, ஆங்கிலம், தமிழ், ஹிந்தி பாடல்களுக்கு விதவிதமான ஆடை அலங்காரங்களுடன் சிறப்பாக நடனமாடி மணமக்களை மகிழ்ச்சிக்குளாக்கியதோடு விருந்தினரையும் இன்பவெள்ளத்தில் மூழ்கடித்தனர்.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">மழை தூர ஆரம்பத்தித்திருந்தாலும் சுமார் அரைமணிநேரம் தொடர்ந்து விண்ணில் பாய்ந்து வெடித்து சிதறி எல்லோர் உள்ளங்களிலும் மகிழ்சி பூத்தூவிய வாணவேடிக்கை ஒரு கூடுதல் சிறப்பு.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">அதை தொடர்ந்து சிறப்பு விருந்து. எத்தனை வகை என எண்ண மறந்துவிட்ட அந்த மெய்மறந்த சூழலில் நெய் மணக்கும் நம்மவூர் மட்டன் பிரியாணி , மற்றும் உள்ளூர் உணவுகள், கேக் வகைகள், இனிப்பு வகைகள், குளிர் மற்றும் சூடான பானங்கள், இன்னும் எத்தனை எத்தனையோ...</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">இதில் வந்திருந்த அனைத்து விருந்தினருக்கு தாம்பூல மஞ்சள் பைகள்.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">காலை சுமார் 10 மணிக்கு ஆரம்பித்த இந்த திருமண விழா அடுத்த நாள் காலை சுமார் 3.00 மணிக்கு முடிந்ததாக அறிந்தேன். இடையில் சுமார் 1 மணியளவில் நானும் மணமகளின் பெற்றோரும் வீடு திரும்பி இருந்தோம்.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">இந்த என் பயண காரணத்தின் கூடுதல் சிறப்பு, மணமகளின் தந்தையின் திருமணத்திற்கான அழைப்பிதழை தயாரித்ததில் இருந்து மங்கள நாண் , தாலி வாங்கியது, திருமணத்தின்போது அவருக்கு மாப்பிளை தோழனாக இருந்தது மட்டுமல்ல , மகள் பிறந்ததுமுதல் , மகளின் எல்லா நிலைகளில் மட்டுமல்லாமல், பெரியவளான சடங்கு போன்றவற்றிலும் நேரில் கலந்துகொண்டது மட்டுமின்றி தேவதைப்போல விளங்கும் அந்த மண மகளுக்கு பெயர் தேர்ந்தெடுத்து கொடுத்தவன் என்பதுதான்.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">திருமண வரவேற்பு நிகழ்வின் ஒரு அங்கமாக மணமகள் பேசும்போது, எனக்கு பெயர் சூட்டியதிலிருந்து இன்றுவரை என் நலனிலும் என் குடும்ப விசேடங்களிலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நேரில் வந்து பங்குபெற்று என்னை ஆசிர்வதிக்கும் ..... எங்கள் "தொன்தான்" (சித்தப்பா) அவர்களுக்கு ..... என்று ஆங்கிலத்திலும் , பிரஞ்சு மொழியிலும் கூறியபோது என் மேசையில் என்னோடு அமர்ந்திருந்த பெண்ணின் அப்பா- என் நண்பர் என்னை எல்லோர் முன்னிலையிலும் எழுந்து நிற்கும்படி கூற , கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் சங்கோஜம் நிறைய பணிவுடன் எழுந்து நிற்க நண்பரின் <b>வாரிசின்</b> அன்பான பேச்சினூடே அரங்கம் நிறைந்த கைத்தட்டல் எந்தன் ஆனந்தத்தை <b>பாரிஸின்</b> ஈபிள் உச்சியையும் தாண்டி பறக்க செய்தது.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">அடுத்த சிறப்புகள் எவையென அடுத்த பதிவுகளில்... எழுத முயல்கிறேன். </p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">நன்றி,</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம் </p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;">கோ.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;"><b>பி.கு</b> : பதிவு கொஞ்சம் நீளம்தான் , இடையில் நிறுத்தி தொடரும் போட விரும்பவில்லை வாசகர்க நண்பர்களின் நலன் கருதி.</p><p class="MsoNormal" style="color: #515151; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: normal; margin-bottom: 0cm; text-align: justify;"><br /></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-75971516082731202402023-09-04T16:30:00.006-07:002023-09-17T05:09:23.628-07:00ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! <p style="text-align: center;"><u>எல்லோருக்கும்</u>!</p><p style="text-align: justify;"><span style="background-color: white;">நண்பர்களே,</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white;">கற்று தருபவர்கள் எல்லோரும் ஆசிரியர்கள்தான் எனும் பொதுவான கருத்திங்கே புழக்கத்தில் உள்ளதை நாம் அறிவோம்.<span></span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;"><span style="background-color: white;">மேலோட்டமாக பார்க்கும்போது பிழை ஒன்றும் அதில் இருப்பதாக தெரியவில்லை.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white;">அதே சமயத்தில் எதை கற்று கொடுக்கின்றனர் அதனால இச்சமூகத்தில் என்ன மாற்றங்கள் விளையும் என்பதை பொறுத்தே, கற்பிப்பவரை ஆசிரியராக அங்கீகரித்து ஆராதனை செய்ய ஆலோசிக்கலாம்.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white;">அவ்வகையில்,</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white;">பள்ளிக்கூடத்து வகுப்பறையின் ஓரத்தில் பரப்பப்பட்டிருந்த மணல் பரப்பில் நமது பிஞ்சு விரல்களை பிடித்து " அ " எனும் அமுத சிகரத்தை</span><span style="background-color: white;"> எழுத பழக்கி அம்மா, ஆடு, இலை ,ஈகை , உரல், ஊஞ்சல் .. என உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து ஆயுத எழுத்து என்று ஒவ்வொன்றக கற்றுத்தந்து, பின்னர், கூட்டல்,கழித்தல், பெருக்கல் வகுத்தல் தொடர்ந்து, அறிவியல், வணிகம், விளையாட்டு, சங்கீதம், நாடகம் என நம் முதல் வகுப்பு ஆசிரியர் துவங்கி, விண்வெளி தாண்டி சீறி பறந்து விந்தைகள் புரியும் ராக்கெட்டுகளின் சூட்சும சூத்திரங்களை கற்றுக்கொடுத்த/ கொடுக்கின்ற போற்றுதலுக்குரிய அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நமது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களை பெரும் மகிழ்ச்சியோடும் அன்போடும் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்.</span></p><p style="text-align: justify;">அதேபோல நமக்கு பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் ஆரம்பமாகுமுன்னே நமக்கு நலம் கற்பித்து முறைப்படுத்தி முன்னிறுத்திய நமது பெற்றோர்களே நமது முதல் ஆசிரியர்கள் என்றால் அது மிகையல்ல.</p><p style="text-align: justify;">அந்த வகையில் அவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் பெருமிதத்துடன் பங்களிப்பது முறையாக இருக்குமென கருதுகிறேன்.</p><p style="text-align: justify;">இந்த நவீன யுகத்தில் கல்வி கூடங்கள் , பாடப்புத்தகங்களை கடந்து பல்வேறு வழிகளிலும் வகைகளிலும் நாம் அன்றடம் பல புதிய விடயங்களை கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம்.</p><p style="text-align: justify;">அவற்றை கற்பிக்கும் ஒவ்வொரு வாசலும், சாளரமும்(portal) ஆசிரியரே. அவ்வகையில் சில வேளைகளில் நமக்கு தெரியாத பலவற்றை மிக எளிதாக விளக்கி கற்றுத்தரும் மாணவரும் நம் பிள்ளைகளும் ஆசிரியரே என்பது என் கருத்து.</p><p style="text-align: justify;">இந்த நல்ல நாளிலே உலகமெங்கிலும் உள்ள அனைத்து பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு எமது பணிவுகலந்த வாழ்த்துதல்களை நன்றியோடு சமர்ப்பிக்கின்றேன்.</p><p style="text-align: justify;">நமது பதிவர்களுள் ஆசிரியர்களாக பள்ளி கல்லூரிகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் தொடர்ந்திந்த அறப்பணியில் தங்களை அர்ப்பணித்து அயராதுழைக்கும் எனதருமை ஆளுமைகளுக்கும் இந்த நேரத்தில் நமது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.</p><p style="text-align: justify;"><b>"குருவென இவ்வுலகில் உருவெடுத்து- அறியாமை </b></p><p style="text-align: justify;"><b>இருள் விலக்கும் ஒளிவிளக்கின் சுடர்கொடுத்து - ஞான </b></p><p style="text-align: justify;"><b>அருமருந்தாம் கல்விக் கண் தினம் திறக்கும் </b></p><p style="text-align: justify;"><b>பெருமாந்தர் மா மனித புனிதர் நீவீர் </b></p><p style="text-align: justify;"><b> பெரும்பேறும் சுக பெலனும் சுபீட்சமுடன்</b></p><p style="text-align: justify;"><b>நறுமலராய் நற்றேனாய் நல்லமுது அட்சயமாய் </b></p><p style="text-align: justify;"><b>மறுமலர்ச்சி மானுடத்தின் மனம் முகிழ </b></p><p style="text-align: justify;"><b>தரவேண்டும் உம தொளியை நம் இனம் மகிழ.</b></p><p style="text-align: justify;"><b>வாழ்க நீர் பல்லாண்டு !</b></p><p style="text-align: justify;"><b>வானும் மண்ணும் வாழும் வரை!!.</b></p><p style="text-align: justify;">நண்பர்களே,</p><p style="text-align: justify;">இந்த பதிவை என் பள்ளியில் , தக்கிலியில் நூல் நூற்று பின்னர் அந்த நூல்கொண்டு ஆடை நெய்ய கைத்தறியில் அமரவைத்து நேர்த்தியாய் பயிறுவித்த கைவேலை ஆசிரியர், <b>திரு.ஊரப்பன்</b> அவர்களுக்கு நன்றியுடன் அர்ப்பணிக்கிறேன்.</p><p style="text-align: justify;">நன்றி,</p><p style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம்.</p><p style="text-align: justify;">கோ.</p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"><span face="Nirmala UI, sans-serif"><span style="background-color: white;"></span></span></p><p style="text-align: justify;"><span face="Nirmala UI, sans-serif"><span style="background-color: white;"></span></span></p><p><span face=""Nirmala UI", sans-serif" style="background-color: white; text-align: justify;"></span></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-39315047332753794432023-08-30T06:54:00.003-07:002023-09-26T04:43:09.361-07:00 நிலா! நிலா!! ஓடிவா!!!<p> நண்பர்களே,</p><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;"><br /></span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">பல காலம் கழித்து மீண்டும் தங்கள் எல்லோரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி.<span><a name='more'></a></span></span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;"><br /></span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">புதுப்பிக்கும் உறவு இந்த முழு சந்திர தினத்தன்று அமைந்ததும் அது தொடர்பான தலைப்போடு உங்கள் அனைவரையும் சந்திப்பதும் உள்ளபடியே உள்ளம் உவகைக்கொள்ளும் ஒரு மனநிறைவான நாளாக கருதுகிறேன். </span></span></div><div><span style="font-size: small;"><br /></span></div><div><span style="font-size: small;">அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.</span></div><div><span style="font-size: small;"><br /></span></div><div><span style="font-size: small;">தொடருவோம் வாய்ப்புகள் வாய்க்கும்போதெல்லாம்.</span></div><p><b><br /></b></p><p><b><u>நில்லாமல் ஓடிவா !</u></b></p><div><span style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">"உலகோர் என்னை </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">இத்தனை நாட்களாக</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">ஏமாற்றிவந்துள்ளனர்</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">பரவாயில்லை அவர்கள்</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">உலகைச் சார்ந்தவர்கள் </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">அப்படித்தான் இருப்பார்கள் - அது</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">மாற்றமுடியாத இந்த </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">மண்ணின் மரபணு மாற்ற</span></span><span style="text-align: left;">ம்</span><span style="text-align: left;">.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;"><br /></span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">இந்த உலகின் சகவாசமோ </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">சுகவாசமோ ஏதும் வேண்டாம் என்று </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">ஆளரவம் பெரிதாய் ஏதுமின்றி </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">ஆகாயத்தில் வாழும் நீயுமா ?</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;"><br /></span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">பாதி முகத்தை மட்டுமே </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">பல காலம் காட்டி காட்டி உன்னை </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">முழு மதியென முகவரி சொல்லிவந்தாய்;</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">ஆதிமுதல் நேற்றுவரை நானும் </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">அப்படியே நம்பிவந்தேன்.</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;"><br /></span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">சமீபத்து சந்திர யான் </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">சிந்திய சமிக்ஞ்சை செய்தித் துளி </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">நீ அப்படி </span></span><span style="text-align: left;">அ</span><span style="font-size: small;"><span style="text-align: left;">ல்ல. </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">உன் முகத்தின் மறுபாதியை </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">எப்போதும் காட்டியதில்லை என </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">ஏகோபித்து சொல்லும்போது </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">ஏனோ கோபித்து</span></span><span style="text-align: left;">க்</span><span style="text-align: left;">கொண்டேன் </span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">இமைப்பொழுதில் </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">இடிந்து</span></span><span style="text-align: left;">ம்</span><span style="text-align: left;">போனேன் .</span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">ஏன் இப்படி செய்தாய்? </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">என் இதயத்தில் </span></span><span style="text-align: left;">ஈட்டி</span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;"> </span></span><span style="text-align: left;">ஏன் </span><span style="text-align: left;">எய்தாய்?.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;"><br /></span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">உண்மையை சொல் </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">அப்படியானால் நீ </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">முழுமதி இல்லையா ? -என்னால் </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">முழுமையாய் நம்ப முடியவில்லை.</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">வளர்வதாய் தேய்வதாய் </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">காட்டுவதெல்லாம் - உன் </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">பாதி முகத்தில் தானா?</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;"><br /></span></span></div><div style="text-align: justify;">மண்டியிட்டு கேட்கிறேன் </div><div style="text-align: justify;">ஒரே ஒருமுறை தயவாக </div><div style="text-align: justify;">எனக்கு மட்டும் உன் </div><div style="text-align: justify;">முழுமுகத்தையும் காட்டிவிடு </div><div style="text-align: justify;">கண்டிப்பாக சொல்கிறேன் </div><div style="text-align: justify;">பிறகுன்னை ஒருபோதும் </div><div style="text-align: justify;">சந்தேகிக்க மாட்டேன் - நேரில் </div><div style="text-align: justify;">சந்திக்க முயல்வதை </div><div style="text-align: justify;">விட்டுவிடவும் மாட்டேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எப்படியும் ஒருநாள் </div><div style="text-align: justify;">மேலே(??) செல்லும்போது </div><div style="text-align: justify;">உன்னைத் தாண்டித்தானே </div><div style="text-align: justify;">செல்லவேண்டும் </div><div style="text-align: justify;">அப்போது கண்டிப்பாக </div><div style="text-align: justify;">உன்னை நேரில் சந்திக்க </div><div style="text-align: justify;">விண்ணைத்தாண்டி வரும் </div><div style="text-align: justify;">சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும்?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதற்குமுன்....</div><div style="text-align: justify;">உன் முழு முகம் காட்ட </div><div style="text-align: justify;">வருவாயா -</div><div style="text-align: justify;">இந்த செய்தி கிடைத்ததும் </div><div style="text-align: justify;">நில்லாமல் ஓடி வருவாயா?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அல்லது சந்திரயான் மூலமேனும் </div><div style="text-align: justify;">உன் முழு புகைபடமொன்றை </div><div style="text-align: justify;">கொடுத்து அனுப்புவாயா?</div><div style="text-align: justify;">காத்திருக்கிறேன் </div><div style="text-align: justify;">களங்கமில்லா உன் </div><div style="text-align: justify;">முழுமுகத்தை களிப்புட<span style="text-align: left;">னே</span> </div><div style="text-align: justify;">கண்டு மகிழ.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ரஷியா, அமெரிக்கா,</div><div style="text-align: justify;">சைனா, ஜப்பான் என</div><div style="text-align: justify;">வல்லரசுகள் </div><div style="text-align: justify;">வரிசைகட்டி உன்னைக் </div><div style="text-align: justify;">கலங்கடித்தாலும் </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உன் மீது </div><div style="text-align: justify;">நல்<b>லரசு(</b>கோ) எனக்கிருக்கும் </div><div style="text-align: justify;">களங்கமில்லா அபிமானம் </div><div style="text-align: justify;">உனக்கிந்த செய்தி அனுப்ப </div><div style="text-align: justify;">உந்தி தள்ளுகிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இவன் என்ன </div><div style="text-align: justify;">என் மாமன் மகனா - இல்லை </div><div style="text-align: justify;">அத்தை மகனா?</div><div style="text-align: justify;">எந்த உரிமையில் </div><div style="text-align: justify;">இத்தனையும் ?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அல்லது </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நான் என்ன </div><div style="text-align: justify;">அரிசிக்குத்தும் </div><div style="text-align: justify;">அக்கா மகளா ? பல் </div><div style="text-align: justify;">வரிசைகாட்டி </div><div style="text-align: justify;">வழிந்துருக </div><div style="text-align: justify;">என தயவாக </div><div style="text-align: justify;">எண்ண வேண்டாம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">விட்ட குறை </div><div style="text-align: justify;">தொட்ட குறைபோல </div><div style="text-align: justify;">இந்த வட்ட நிலவொளி</div><div style="text-align: justify;">என் மீது பட்ட( து) </div><div style="text-align: justify;">குறையாக(குறைவாக) இருக்குமோ?</div><div style="text-align: justify;">முழுமையாய் பட்டால் </div><div style="text-align: justify;">நிறைவாக இனிக்குமோ ?</div><div style="text-align: justify;">யாரறிவாரோ?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எழுதியிருப்பது என்னவென்று </div><div style="text-align: justify;">புரியாவிட்டால் </div><div style="text-align: justify;">அங்கே, சிவ சக்தி மாநிலம் </div><div style="text-align: justify;">அப்துல்கலாம் மாவட்டம் </div><div style="text-align: justify;">வீர முத்துவேல் வட்டம் </div><div style="text-align: justify;">இரண்டாவது வார்டு </div><div style="text-align: justify;">மூன்றாவது குறுக்கு தெருவில் </div><div style="text-align: justify;">நான்காவது மாமர நிழலில் </div><div style="text-align: justify;">வடை சுட்டுக்கொண்டிருக்கும் </div><div style="text-align: justify;">நடை தளர்ந்த எங்கள்</div><div style="text-align: justify;">பாட்டியிடம் கேட்டுப்பார்</div><div style="text-align: justify;">நாசுக்காக என் மனதை </div><div style="text-align: justify;">நயமுடனே எடுத்துரைப்பார். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சொல்ல மறந்துவிட்டேன்: </div><div style="text-align: justify;">உன் ஒருபக்க முகத்தில்</div><div style="text-align: justify;">சில கருவட்டங்கள் - என் </div><div style="text-align: justify;">கண்ணில் படுகிறதே!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பாட்டி அருகே இருக்க </div><div style="text-align: justify;">வைத்தியம் கொள்ளாமல் இருப்பது </div><div style="text-align: justify;">நீ என்ன பைத்தியமோ என </div><div style="text-align: justify;">விந்தைகொள்ள செய்கிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உடனே அனுகு அவரை </div><div style="text-align: justify;">நான் சொன்னதாக சொல் </div><div style="text-align: justify;">தேன் புனுகு களிம்பிட</div><div style="text-align: justify;">உன் முகத்தில் புதுப்பொலிவு</div><div style="text-align: justify;">தளும்பிட!!"</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நன்றி!! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம் </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கோ.</div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;"><br /></span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span style="text-align: left;">நிலா கவிதை குறித்த தங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.</span></span></div><div style="text-align: justify;"><br /></div>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-31188961143732103772022-05-22T08:20:00.004-07:002022-05-25T02:43:36.316-07:00கிளாஸ்(ஸோட)கோ!!!<p style="text-align: center;"><u>கண்ணுக்கு குளிர்ச்சி !!</u></p><p style="text-align: justify;">நன்பர்களே,</p><p style="text-align: justify;">ஸ்காட்லாந்த்து குறித்த எமது முந்தைய பதிவுகளை வாசிக்க மறந்தவர்கள் கீழ் காணும் லிங்க்கை க்ளிக் செய்து வாசித்துவிட்டு தொடரவும்.</p><p style="text-align: justify;"><a href="https://koilpillaiyin.blogspot.com/2022/05/blog-post.html">தண்டவாளம் ஏறிய வண்டவாளம் ! (koilpillaiyin.blogspot.com)</a></p><p style="text-align: justify;"><a href="https://koilpillaiyin.blogspot.com/2022/05/blog-post_17.html"> ஏறி இறங்கி பார்த்தது. (koilpillaiyin.blogspot.com)</a></p><p style="text-align: justify;">அன்று மாலை தங்குமிடம் திரும்பி சற்று இளைப்பாறிவிட்டு , மீண்டும் வெளியில் செல்ல தயாரானேன்.<span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">தங்கி இருந்த ஓட்டல் நகர மையம் என்பதால் கடை தெருக்கள், மால்கள் ,வணிக வளாகங்கள், திரை அரங்குகள், கேளிக்கை விடுதிகள், சிற்றுண்டி சாலைகளுக்கு பஞ்சமே இல்லை.</p><p style="text-align: justify;">நள்ளிரவை தாண்டியும் பரபரப்பாகவும் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் நகரத்தை கால் நடையாகவே சுற்றி அடுத்த நாள் சுற்றுலா வாகனத்தில் செல்ல திட்டமிட்டிருந்ததால் அதற்கான புறப்பாடு நேரம் , புறப்படும் இடம் போன்றவற்றை , தகவல் சேவை மையத்திலிருந்து அறிந்துகொண்டு அதற்கான கையேடுகளை சேகரித்துக்கொண்டு, அப்படியே இரவு நேர நகரத்து ஜெக ஜோதிகளை ரசித்தவண்ணம், நேரத்தை கடத்தினேன்.</p><p style="text-align: justify;">இந்த நகரம் ஸ்காட்லாந்திலேயே அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் ஒட்டுமொத்த United Kingdom லேயே மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் விளங்குகின்றது.</p><p style="text-align: justify;">இங்கு வாழும் மக்களை (கொச்சை மொழியில்) க்ளாஸ்வேஜியன்(Glaswegian ) என்பதன் சுருக்கமாக வீஜீ(WEEGIE) என்று அழைக்கின்றனர். </p><p style="text-align: justify;">ஐரோப்பாவின் கலாச்சார நகரம் என்று அழைக்கபடும் இந்த நகரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நூலகம், ஒட்டு மொத்த ஐரோப்பாவிலேயே மிக பெரிய, மக்கள் பயன்பாட்டிலுள்ள, சுமார் 1.5 மில்லியன் புத்தகங்களை கொண்ட நூலகமாக கருதப்படுகிறது அதன் பெயர் மிச்சேல்(Mitchelle library) நூலகம்.</p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEheaP7-stUayjrCAsLrz1QgOkQ3KXKauTHT_VM90nNIloV4_W1YYCQez1M-YKbZwqeBLoLGKS9tO-IXJTyDTNyZeT6N_-nKQlJ6Cyv2taGBFoYgX2tRmjjrbSAyX2uRUDygeGI0mH33oKSLXIAdpsjhwg8q8eisSPzLnWY-TAbflCg4ihXv0FxcLhyaHw" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="179" data-original-width="282" height="203" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEheaP7-stUayjrCAsLrz1QgOkQ3KXKauTHT_VM90nNIloV4_W1YYCQez1M-YKbZwqeBLoLGKS9tO-IXJTyDTNyZeT6N_-nKQlJ6Cyv2taGBFoYgX2tRmjjrbSAyX2uRUDygeGI0mH33oKSLXIAdpsjhwg8q8eisSPzLnWY-TAbflCg4ihXv0FxcLhyaHw" width="320" /></a></div><br /><div style="text-align: center;">அரண்மனைபோல் காட்சி அளிக்கும் மிச்சேல் நூலகம்.</div><p></p><p style="text-align: justify;">அதே போல ஐரோப்பாவிலுள்ள மிக பழமையும் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக கருதப்படும் நூலகம், கிளாஸ்கோ பல்கலை கழக நூலகம், துவங்கப்பட்ட வருடம் கி. பி 1475, இப்போதிருக்கும் 12 மாடிகளைக்கொண்ட கட்டிட வடிவமைப்பு 1968 மற்றும் 1980, 1990 களில் திருத்தி கட்டப்பட்டவையாகும்.</p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjSiumRy6Aqa8yH7HqLdGc-8MieXMs8TDkTiQiV75K-v9Wo3v0xWvM-0H4KLlwYoWneTZm1q3DB4vNk9mFHsYY4wWhZ7Kw5Ia93TePo7A8AeF_hR05hBKGfg-BuJUK8vRRPVuDYJYaZdznHRb4haQ0dPNx65J6DAkE0orPP0S_FSWtUtpsAkdIFU4S_RQ" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="194" data-original-width="259" height="240" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjSiumRy6Aqa8yH7HqLdGc-8MieXMs8TDkTiQiV75K-v9Wo3v0xWvM-0H4KLlwYoWneTZm1q3DB4vNk9mFHsYY4wWhZ7Kw5Ia93TePo7A8AeF_hR05hBKGfg-BuJUK8vRRPVuDYJYaZdznHRb4haQ0dPNx65J6DAkE0orPP0S_FSWtUtpsAkdIFU4S_RQ" width="320" /></a></div><br /><div style="text-align: center;">12 தளங்களை கொண்ட பல்கலைக்கழக நூலகம்.</div><p></p><p style="text-align: justify;">இந்த நூலகம் மற்றும் இதன் கிளை நூலகங்களிலுள்ள அச்சு வடிவலுள்ள மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 50 ஆயிரம்.</p><p></p><p style="text-align: justify;">மேற்கூறிய இரண்டு நூலகங்களை அடுத்த நாள் காணும் பாக்கியம் பெற்றமை உள்ளபடியே ஒரு சிறப்பு வாய்ப்புதான்.</p><p style="text-align: justify;">மற்றும் இரவு நேரத்தில் வண்ண ஒளியூட்டப்பட்டிருக்கும் சாலைகள், கட்டிடங்கள், பாலங்கள், நீரோடைகள், சாலை ஓரத்து மரம் செடி கொடிகள், பூங்காக்கள், ரயில் வண்டி நிலையங்கள், உணவு விடுதிகள், இசை மற்றும் நாடக அரங்குகள் என பல்வேறு காட்சிப்பொருட்கள் நம் கண்ணுக்கு மட்டுமல்ல இதயத்திற்கும் இதம் சேர்க்கும் ஜெகஜோதி காட்சிகளை காண கண் இரண்டு போதாது.</p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjyM2H7A3si6WEHdlB2IDNHgpToD2ZfOvmk5tnCI454wVtUN3DsuK37l6SBw2vq5zuskbIMuI6G5RZQD39P5x3NWgXh8Kd1HHjH40cS-IxoYY6AZvOaY5f0Ok35o5_JSNutOoYOIO4fZ4laxRZk9HrgAwom6UpdtBvlz_tSBiNDr8DSPIzIGsF6e7RnQw" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="165" data-original-width="306" height="173" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjyM2H7A3si6WEHdlB2IDNHgpToD2ZfOvmk5tnCI454wVtUN3DsuK37l6SBw2vq5zuskbIMuI6G5RZQD39P5x3NWgXh8Kd1HHjH40cS-IxoYY6AZvOaY5f0Ok35o5_JSNutOoYOIO4fZ4laxRZk9HrgAwom6UpdtBvlz_tSBiNDr8DSPIzIGsF6e7RnQw" width="320" /></a></div><br /><br /><p></p><p style="text-align: justify;">இரவு நேரத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் இவ்வூரின் சிறப்பு. இசை , நடனம் , பல்வேறுபட்ட உணவு, பானங்கள் போன்றவை கிளாஸ்கோவின் மற்றுமொரு பெருஞ்சிறப்பு .</p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEizLK6jRQ6v_zJq3m9GLnbmZ3_neFxjY3_8D556gJa3SGaOscTfh2pQkTGt7wt0SC6S1UUlmbTznE1vPrNrzyxrR2f0ycJuatE8AxU3WNgBGpDZ56NRAw3giQVd0Z0sKjJ27i_lzHQcXtmk-dfkKgMtDjpzBea1gb6HfkpcCvrOzbpJ3FFtxLzOg5QLmQ" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="183" data-original-width="275" height="213" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEizLK6jRQ6v_zJq3m9GLnbmZ3_neFxjY3_8D556gJa3SGaOscTfh2pQkTGt7wt0SC6S1UUlmbTznE1vPrNrzyxrR2f0ycJuatE8AxU3WNgBGpDZ56NRAw3giQVd0Z0sKjJ27i_lzHQcXtmk-dfkKgMtDjpzBea1gb6HfkpcCvrOzbpJ3FFtxLzOg5QLmQ" width="320" /></a></div><br />இரவு தாண்டி மற்றும் விடிய விடிய நடைபெறும் இது போன்ற ஆட்டம் <span style="text-align: justify;">பா</span>ட்டங்கள் விருந்து வேடிக்கைகள், வண்ண விளக்குகள் பலதரப்பட்ட ஆடை அலங்காரங்களோடு கூடிய மக்களின் மகிழ்ச்சி நடமாட்டங்கள் , பார்க்கும் நமக்கும் மகிழ்வை உண்டுபண்ணுகிறது.<p></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiEhVIb3rFudQ7Stp9XhPPOO8RjBPfbkovZ8uUg3-0PcOgx8z7z6Ps_exTcXdwV1EMi4QYj4VuMrd_lWldM9U5mpA6jU2iciFJ3FurEEumRmgJKEXAKTNoRWIKRs23-LJbT8QxWM8esSoj6CN2bjqZ-iNDb6Najpl8hzGJ7m31ZI82-WoGVmzZM3DDV2Q" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="182" data-original-width="277" height="270" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiEhVIb3rFudQ7Stp9XhPPOO8RjBPfbkovZ8uUg3-0PcOgx8z7z6Ps_exTcXdwV1EMi4QYj4VuMrd_lWldM9U5mpA6jU2iciFJ3FurEEumRmgJKEXAKTNoRWIKRs23-LJbT8QxWM8esSoj6CN2bjqZ-iNDb6Najpl8hzGJ7m31ZI82-WoGVmzZM3DDV2Q=w548-h270" width="548" /></a></div><br /><div style="text-align: center;">நான் தங்கி இருந்த விடுதி அமைந்திருக்கும் சாலை - Buchanan Street </div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjvC7z9Nuis9k_YMkkNawr9HeNo2-n5KkTPr4VTbZw_Rvr9EasDHmNz_HtWCREpdEOQNpWurAbSwttkF6ansRmxZ6LdZtktFX0osTJxigy8tkKIrOckl2LmB-pzQslWnywF11ZcJ--EjHJuSD69rGly6_tzbDuTs0LPILzTHFmGop8aIynvsyAZeI_Lsw" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="177" data-original-width="284" height="371" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjvC7z9Nuis9k_YMkkNawr9HeNo2-n5KkTPr4VTbZw_Rvr9EasDHmNz_HtWCREpdEOQNpWurAbSwttkF6ansRmxZ6LdZtktFX0osTJxigy8tkKIrOckl2LmB-pzQslWnywF11ZcJ--EjHJuSD69rGly6_tzbDuTs0LPILzTHFmGop8aIynvsyAZeI_Lsw=w596-h371" width="596" /></a></div><br /><span style="text-align: justify;">கூலிங் க்ளாஸ் இல்லாமலேயே கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் காட்சிகள் மண்டிகிடந்தாலும், (பின்னிரவு நேரமானாலும்) கருப்பு கண்ணாடி அணிந்துகொள்வதில் ஒரு கூடுதல் சவுகரியம் இருக்கத்தான் செய்கின்றது.</span></div><p style="text-align: justify;">ஊரு பேரிலேயே சூசகமான அறிவுரை இருக்கின்றதே,<b>"கிளாஸ்(ஸோட) கோ"</b>.</p><p style="text-align: justify;">ஒன்று (கூல் ட்ரிங்க்ஸ்!!) அருந்தும் கிளாஸ் , ஸ்காட்லாந்துனா சும்மாவா? மற்றொன்று கூலிங் க்ளாஸ். </p><p style="text-align: justify;">எனக்கு அதிக சக்தியுடன் ஒளியை பீய்ச்சும் வண்ண விளக்குகளால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மட்டுமே கிளாஸ் தேவைப்பட்டது என்பது கூடுதல் தகவல். </p><p style="text-align: justify;"></p>புரிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள், புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டுதெரிந்துகொள்ளுங்கள்.<div><br />நன்றி,</div><div><br />மீண்டும் ச(சி)ந்திப்போம்</div><div> <br />கோ.<div class="separator" style="clear: both; text-align: center;"><span style="text-align: justify;"><br /></span></div><p></p><p style="text-align: justify;"><br /></p><p></p></div>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-60697785895644250382022-05-17T02:28:00.001-07:002022-05-18T03:43:06.697-07:00ஏறி இறங்கி பார்த்தது. <div style="text-align: justify;"><span face="Trebuchet MS, Trebuchet, Verdana, sans-serif" style="color: #666666;"><span style="background-color: white; font-size: 12px;"><p style="color: black; font-size: medium; text-align: center;"><u>இதயத்தில் இன்பம் சேர்த்தது</u>.</p><p style="color: black; font-size: medium;">நண்பர்களே, </p><p style="color: black; font-size: medium;">லண்டனில் இருந்து கிளாஸ்கோ வரை மேற்கொண்ட சொகுசு இரவு ரயில் பயணம் குறித்ததான எமது பதிவை பார்த்திருப்பீர்கள். பார்க்கதவர்கள் , பார்க்க விரும்பினால் <a href="https://koilpillaiyin.blogspot.com/2022/05/blog-post.html?sc=1652726706989#c550883336351580254" style="font-size: 12px;"> தண்டவாளம் ஏறிய வண்டவாளம் ! (koilpillaiyin.blogspot.com)</a> சென்று பார்த்துவிட்டு தொடரவும்.<span></span></p><a name='more'></a><p></p><p style="color: black; font-size: medium;">கிளாஸ்கோ சென்றடைந்த முதல் நாள், தங்கும் ஓட்டலில் கொஞ்சம் நேரம் மட்டுமே தங்கி பெட்டி படுக்கைகளை (படுக்கை அங்கேயே இருந்தது) வைத்துவிட்டு அங்கிருந்து கிளாஸ்கோ மத்திய ரயில் நிலைய Queen street ஸ்டேஷனில் இருந்து ஸ்காட்லாந்தின் தெற்கு பகுதியில் இருக்கும் ஒரு பிரசித்திபெற்ற ஏரியை காணவும் அதில் படகு சவாரி செய்யவும் ரயில் ஏறி புறப்பட்டேன்.</p><p style="color: black; font-size: medium;">அந்த ஏரி அமைந்திருக்கும் ஊரின் பெயர் Balloch, பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையும் சுகத்தையும் சேர்க்கும் ஒரு அழகிய சிறிய நீர் கிராமம் என்று சொல்லலாம்.</p><p style="color: black; font-size: medium;">ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட சின்ன சின்ன ஊர்களை கடந்து சுமார் ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு பாதை முடிந்து கடைசியாக அந்த ரயில் வந்து நின்ற இடம்தான் Balloch Central Station.</p><p style="color: black; font-size: medium;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEigxCxYpWmYdldOSujwlMVPf87M3_1vpyIPC8Qy_QYDfQy6-8MIM-nQdzKWTnsoYdra9znveNPZGqQdhS6v2ayueattOYYR7vnbnVU5d13jGU5ja03QkjInMUxuosnUVXlZKI6KC-AVZzM2HQA-8t_huaCv94u8zPMSlmjMYaI2vq861JCSc4g1-Oc2Hw" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="183" data-original-width="275" height="213" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEigxCxYpWmYdldOSujwlMVPf87M3_1vpyIPC8Qy_QYDfQy6-8MIM-nQdzKWTnsoYdra9znveNPZGqQdhS6v2ayueattOYYR7vnbnVU5d13jGU5ja03QkjInMUxuosnUVXlZKI6KC-AVZzM2HQA-8t_huaCv94u8zPMSlmjMYaI2vq861JCSc4g1-Oc2Hw" width="320" /></a></div><br />அங்கிருந்து இரண்டு நிமிடத்திற்கும் குறைவான நடை தூரத்தில் உல்லாச படகுகளின் அணி வகுப்புடன் நம்மை வரவேற்கும் அந்த அழகிய ஏரியின் பெயர் LOCH LOMOND அதாவது லோமண்ட் ஏரி. ஆங்கிலத்தில் LAKE என்பதைத்தான் ஸ்காட்லாந்து பாஷையில் LOCH என்கிறார்கள்.<p></p><p style="color: black; font-size: medium;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhE-JF4CaCIwqA8LDqvrq7vcKAx7Gop8kNwhpxJgfxf211YPZfGSbOdT_kGnVfbQCkTqk0d58tsXZ1ecEiq-agxoOnDr_-ocgj7C-sUEsDAQEDJ0jdEZ09-VBhGSZQVuoDRqYBwdfXymV3pBz1Pkg_F9jypzqFn_Mo4ZcuuOUndYW_WzXYqb3rh2zv5zg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="160" data-original-width="315" height="163" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhE-JF4CaCIwqA8LDqvrq7vcKAx7Gop8kNwhpxJgfxf211YPZfGSbOdT_kGnVfbQCkTqk0d58tsXZ1ecEiq-agxoOnDr_-ocgj7C-sUEsDAQEDJ0jdEZ09-VBhGSZQVuoDRqYBwdfXymV3pBz1Pkg_F9jypzqFn_Mo4ZcuuOUndYW_WzXYqb3rh2zv5zg" width="320" /></a></div><br />இதனை சுற்றி இருக்கும் HIGH LAND பகுதியில் சிகப்பு நிற மான்கள் நிறைந்து இருப்பதாலும் OAK மரங்களால் சூழப்பட்டு இருப்பதாலும் இந்த பகுதி முழுமையும் தேசிய பூங்கா பகுதியாகவும் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. <p></p><p style="color: black; font-size: medium;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg5Hp8NxtKoFbCfkRMnIFmTED3XbWPHJO3W1MPH2iuGlNj6iKJ94zFtt81rUGrhUMJWagB8lP5U3S8FwMc9RC7noH40sGuo9XXu9YF6Y_Ei-3udOsaA3zmhHBM5ZriCProXHHrMgG6gn_ael3HV2u4xdJ-dWhsxmrhrPe_0msatnfrq5saFLFKy1kl0Vw" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="667" data-original-width="1000" height="213" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg5Hp8NxtKoFbCfkRMnIFmTED3XbWPHJO3W1MPH2iuGlNj6iKJ94zFtt81rUGrhUMJWagB8lP5U3S8FwMc9RC7noH40sGuo9XXu9YF6Y_Ei-3udOsaA3zmhHBM5ZriCProXHHrMgG6gn_ael3HV2u4xdJ-dWhsxmrhrPe_0msatnfrq5saFLFKy1kl0Vw" width="320" /></a></div><br />ஏரியின் வடக்கு பக்கத்திலிருந்து உருவாகி ஓடிவரும் LEVEN எனும் ஆறும் தெற்கு பக்கத்தில் உருவாகி ஓடிவரும் (ஒட்டுமொத்த UK விலேயே ஒன்பதாவது நீளமான ஆறாக கருதப்படும்) CLYDE எனும் ஆறும் இந்த LOCH LOMOND ஏரியில் சங்கமிக்கும் காட்சி கண்கொள்ளா காட்சி.<p></p><p style="color: black; font-size: medium;"><br /></p><p style="color: black; font-size: medium;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjQQBzQlxrgCPwPawVMfh6sO125OgJt-8PVxsnoXmD-gY_9VWfFvCWIfLda9hDK1g-H3YiBSnw9RAXheE5PgS_MNNXag7FRu5sIwFY2u1A21UGc-e9ZyvqwbTXrc_sLxsaxV0pLNGOtuVidl3muVhvjZBY7Wzj9EKh5Ui4ZutNASfL8uacSB3bvvbLLKg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="183" data-original-width="275" height="213" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjQQBzQlxrgCPwPawVMfh6sO125OgJt-8PVxsnoXmD-gY_9VWfFvCWIfLda9hDK1g-H3YiBSnw9RAXheE5PgS_MNNXag7FRu5sIwFY2u1A21UGc-e9ZyvqwbTXrc_sLxsaxV0pLNGOtuVidl3muVhvjZBY7Wzj9EKh5Ui4ZutNASfL8uacSB3bvvbLLKg" width="320" /></a></div><p style="color: black; font-size: medium;">சுமார் 39 கிலோ மீட்டர் நீளமும் 71 சதுர கிலோ மீட்டர் பரப்பும் , 8 கிலோமீட்டர் அகலமும் கொண்ட அந்த LOCH LOMOND பிரமாண்டமான ஏரியில் படகு பயணம் பிரசித்தம்.</p><p style="color: black; font-size: medium;"><br /></p><p></p><p style="color: black; font-size: medium;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgO7_mZRocMLPSFE8j-jCtVpHUamr-TO9PDoPyO3vx4VzJ2t1QiiY-uY5DKugxA51VILWFYtCEo_MbSgGYl1RVlLTmK13lp8d2pOK7HEIaWh1y_rwaikS8QBjQGSQsl7l3B4Dzi7mK7QC6A8CpP4xhe5om_On9YhxdWJ2054hxGNOS3u0FquECotQ8UJQ" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="170" data-original-width="297" height="183" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgO7_mZRocMLPSFE8j-jCtVpHUamr-TO9PDoPyO3vx4VzJ2t1QiiY-uY5DKugxA51VILWFYtCEo_MbSgGYl1RVlLTmK13lp8d2pOK7HEIaWh1y_rwaikS8QBjQGSQsl7l3B4Dzi7mK7QC6A8CpP4xhe5om_On9YhxdWJ2054hxGNOS3u0FquECotQ8UJQ" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br />சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நிகழும் அந்த பயணத்தின் போது ஏரியின் இரு மருங்கிலும் விவரிக்கமுடியாத அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் / மேகங்கள் உரசும் மலைகளும் , அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடுகளும் ஆங்காங்கே தென்படும் அருவிகளும் சோலைகள் நடுவே கட்டப்பட்டு இன்றளவும் அதே கம்பீரத்துடன் பயன்பாட்டிலுள்ள பழங்காலத்து பிம்மாண்டமான மாளிகைகள், செல்வந்தர்களின் வீடுகள் நம் மனதை விட்டு நீங்க மறுக்கின்றன.<p></p><p style="color: black; font-size: medium;">ஒவ்வொரு இடத்திலும் வலது இடது புறங்களிலுள்ள இடங்களின் சிறப்பையும் வரலாற்று பின்னணியையும் பயணிகளுக்கு விளக்கியவாறே அந்த படகு பயணம் தொடர்கின்றது.</p><p style="color: black; font-size: medium;">அழகும் கவர்ச்சியும் வசீகரமும் இருக்குமிடத்தில் ஆபத்தும் இருக்கிமில்லையா? </p><p style="color: black; font-size: medium;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiEWMggmH0x21fsZlunicECmBDUEY2z4v5nufNdygWKCZXOlGHiN8L2CeZNTlx8uuEVcul-Y8WzTKDnxztWEm5uYv7dDRCN7J4HFIoVsBqac_Ynj5bqVrucNrFB8PdV_hqs14fRfVaYpDapHedqViIjwf0nImSU9FRGQoL5bEQF4ws0t_wAwmx4WC9fBw" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="168" data-original-width="300" height="179" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiEWMggmH0x21fsZlunicECmBDUEY2z4v5nufNdygWKCZXOlGHiN8L2CeZNTlx8uuEVcul-Y8WzTKDnxztWEm5uYv7dDRCN7J4HFIoVsBqac_Ynj5bqVrucNrFB8PdV_hqs14fRfVaYpDapHedqViIjwf0nImSU9FRGQoL5bEQF4ws0t_wAwmx4WC9fBw" width="320" /></a></div><br />அதுபோலவே, கலையான கிளைகொம்புகள் கொண்ட அழகிய சிகப்பு மான்கள் இருக்கும் அந்த தேசியப்பூங்காவாக பராமரிக்கப்பட்டுவரும் காட்டுப்பகுதியில் கட்டுக்கட்டான வண்ண கோலத்தை கொண்ட இதுவும் உண்டாம்.<p></p><p style="color: black; font-size: medium;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgrP9tO3QZwzGzbiSOGSnryXbgzo8e1qJ52L15yehFxb1BrexhErfGwMG5h_zvScKfVMeRjeOVwruCG4bNmIxwUK97cTr6QzRCzo-mKuO87jTWGsZyjPH6lF2-RLD6JtBIEE-Xb5DqKCBeKsBiw3qvioq4wjCyAYgeIvCDfHnBDVVrAPqk9By6lXJjDEQ" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="183" data-original-width="275" height="213" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgrP9tO3QZwzGzbiSOGSnryXbgzo8e1qJ52L15yehFxb1BrexhErfGwMG5h_zvScKfVMeRjeOVwruCG4bNmIxwUK97cTr6QzRCzo-mKuO87jTWGsZyjPH6lF2-RLD6JtBIEE-Xb5DqKCBeKsBiw3qvioq4wjCyAYgeIvCDfHnBDVVrAPqk9By6lXJjDEQ" width="320" /></a></div><p></p><p style="color: black; font-size: medium;">ஏரியை சுற்றியுள்ள மலைகாட்டு சரிவுகளில் பெரிதும் வளர்ந்துவிட்ட, வயதாகியும்போன, பெருங்காற்றுக்கு ஈடு கொடுத்து காலூன்றி நிற்க பல மின்றிப்போகும் நிலையிலுள்ள சுமார் 1,25,000டன் மரங்களை அறுவடை செய்யவும் அதனால் ஏற்பட இருக்கும் எதிர்மறையான இயற்கை பேரழிவுகளை தடுக்கவும் LANDSCAP ஐ ஒழுங்கு படுத்தவும் திட்டங்களும் பேச்சுவார்த்தையில் உள்ளனவாம்.</p><p style="color: black; font-size: medium;">என்னதான் உயரஉயர ஏறினாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு இறங்கித்தான் ஆகவேண்டும் , எனவே உல்லாச படகில் ஏறி LOCH LOMOND ஏரியை சுற்றிபார்த்தபிறகு தரை இறங்கி அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு, சில கடைகளையும் ஏறி இறங்கி ஞாபகார்த்த பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் அதே ரயிலில் ஏறி இருப்பிடம் வந்து சேர்ந்தேன். </p><p style="color: black; font-size: medium;">இந்த ரயில் பயணமும் படகு சவாரியும் மனதிற்கு இதமாகவே இருந்தது.</p><p style="color: black; font-size: medium;">நினைவில் மீதமிருக்கும் காட்சிப்பதிவுகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.</p><p style="color: black; font-size: medium;">நன்றி ,</p><p style="color: black; font-size: medium;">மீண்டும் ச(சி)ந்திப்போம்.</p><p style="color: black; font-size: medium;">கோ.</p><p style="color: black; font-size: medium;"> </p></span></span></div><div style="text-align: justify;"></div>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70593940608708749142022-05-15T09:19:00.003-07:002023-12-29T04:36:45.159-08:00 தண்டவாளம் ஏறிய வண்டவாளம் !<p style="text-align: center;"><u>மயில் பயணம்!</u></p><p style="text-align: justify;">நண்பர்களே, </p><p style="text-align: justify;">வண்டவாளம் என்ற பதத்தை பொதுவாக "யோகியதை" என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்துவார்கள். அந்த யோகியதை என்பது எப்போதும் எதிர்மறையான குணநலனை மட்டுமே குறிப்பதாக அமைந்துவிடுகிறது. அதை ஏன் நேர்மறையான குணநலனை குறிக்க பயன்படுத்தக்கூடாது?</p><p style="text-align: justify;">அப்படி தண்டவாளம் ஏறி பயணித்த பயணத்தின் நேர்மறையான "வண்டவாளம்" தான் இந்த பதிவு. <span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">ஏற்கனவே சில முறை சாலை மார்கமாக அயர்லாந்தை தவிர மற்ற எல்லா UK நாடுகளுக்கும் சென்றிருந்தாலும் கடந்த வாரம் மீண்டும் ஒருமுறை ஸ்காட்லாந்து சென்று வந்தது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவ பயணமாகவே அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.<span></span></p><p></p><p style="text-align: justify;">பயணத்தைக்குறித்து சொல்லும் முன், தெரிந்த விடயம் என்றாலும், மீண்டும் ஒரு நினைவு தூண்டல்:</p><p style="text-align: justify;">இங்கிலாந்து, கிரேட் பிரிட்டன், யுனைட்டட் கிங்டம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த வெள்ளையர் நாட்டின் தனித்துவ வேறுபாடுகள்:</p><p style="text-align: justify;">London ஐ தலை நகரமாக கொண்டு இயங்கும் தனி நாடு இங்கிலாந்து.</p><p style="text-align: justify;">Cardiff ஐ தலை நகரமாக கொண்டு இயங்கும் தனி நாடு Wales </p><p style="text-align: justify;">Edinburgh வை தலை நகரமாக கொண்டு இயங்கும் தனி நாடு ஸ்காட்லாந்து. </p><p style="text-align: justify;">Belfast ஐ தலை நகரமாக கொண்டு இயங்கும் ஒரு தனி நாடு வடக்கு அயர்லாந்து.</p><p style="text-align: justify;">இங்கிலாந்து + ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் கூட்டை Great பிரிட்டன் என்றும், </p><p style="text-align: justify;">இங்கிலாந்து + ஸ்காட்லாந்து + வேல்ஸ் + வடக்கு அயர்லாந்து யுனைட்டட் கிங்டம் என்று அழைக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;">இப்போது பயணத்தோடு பயணிப்போம்:</p><p style="text-align: justify;">பெரும்பாலும் நாடுவிட்டு நாடு சொல்வதாயின் விமானத்தில் மட்டுமே பயணித்து பழகி இருந்த எனக்கு, இந்தமுறை - Cross Country - தொடர்வண்டியில் இரவு நேரத்தில் பயணித்தால் எப்படி இருக்கும் என தோன்றியது.</p><p style="text-align: justify;">லண்டனில் இருந்து Glasgow செல்வதாயின் சுமார் 8 மணி நேரம் எடுக்கும் , இத்தனை மணிநேரம் இருக்கையில் அமர்ந்து செல்வது அத்தனை கடினம் இல்லை தான். தொலைதூர பயணத்தின்போது விமானத்திலும் பனிரெண்டு மணி நேரம் வரை அமர்ந்து சென்ற அனுபவம் இருக்கிறதுதான் இல்லை என்று சொல்வதற்கில்லை.</p><p style="text-align: justify;">எனினும் இரவு நேரத்தில் புறப்படும் தொடர்வண்டியில் கை கால்களை நீட்டி சுகமாக படுத்து சென்றால் எப்படி இருக்கும்?</p><p style="text-align: justify;">இரவு சரியாக 11:55 மணிக்கு புறப்படும் வண்டியாதலால் பயணத்தின்போது வெளியில் பார்த்து ரசிக்க இயற்கை காட்சிகள் ஒன்றும் கண்ணுக்கு தெரியாது என்பதாலும் , இந்த Sleeper தொடர்வண்டியில் செல்ல முடிவு செய்தேன்.</p><p style="text-align: justify;">படுத்துக்கொண்டு, உறங்கிக்கொண்டு செல்லும் வசதிகொண்ட அந்த தொடர்வண்டியின் சிறப்பை சொல்வதற்குமுன், அந்த வண்டியில் பயணிக்கும் சிறப்பு வகுப்பு பயணிகளுக்கென்று தொடர்வண்டி நிலையத்தில் அமைந்திருக்கும் பயணியர் தங்கும்(ஓய்வு) இடம் - 1st class Guest Lounge பற்றி சொல்லவேண்டும்.</p><p style="text-align: justify;">அந்த குறிப்பிட்ட ஸ்லீப்பர் வண்டியில் நான்கு வகையான (வசதி) - வகுப்புகள் உள்ளன.</p><p style="text-align: justify;">1. அமர்ந்து செல்லும் இருக்கை - வகுப்பு (SEATED) </p><p style="text-align: justify;">2. கிளாசிக் - வகுப்பு </p><p style="text-align: justify;">3. கிளப் வகுப்பு </p><p style="text-align: justify;">4. டபுள் வகுப்பு .</p><p style="text-align: justify;">இதில் கிளப் மற்றும் டபுள் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் இந்த தங்கும் அறைகள் அனுமதிக்கபடுகின்றன. </p><p style="text-align: justify;">ஏற்கனவே குறிப்பிட்டபடி OVERNIGHT TRAIN என்பதால், முன்கூட்டியே வந்தவர்கள் நடை மேடைகளிலோ அல்லது ரயில் நிலைய வளாகங்களில் காத்திருக்காமல் பாதுகாப்பான சொகுசான இடத்தில் தங்கி இருந்துவிட்டு ரயில் புறப்படும் அறிவிப்பு வந்தவுடன், எழுந்து ரயிலில் ஏறிக்கொள்ள வசதியாக இந்த தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">இந்த வசதி குறித்த தகவலை ஏற்கனவே அறிந்திருந்ததால் , என்னுடைய பயண சீட்டை காண்பித்துவிட்டு ரயில் நிலயத்திற்குள்ளேயே அமைந்திருக்கும் தங்குமிட கட்டிடத்திற்குள் நுழைந்தேன், அப்போது மணி சுமார் இரவு 10.00.</p><p style="text-align: justify;">இது என்ன பயணிகள் ஓய்வு கூடமா அல்லது ஐந்து நட்சத்திர விடுதியின் வரவேற்பறையா?</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj7y-G_UoTeVkTjEFll3E1cljRP5kqFBiBHS3ZGaO0lZ3WCJ9dK8MvoiOaX7dOdVErzfZDpfr51-TfsHT49PrEw8Bu1xj9RwjZRn3KU8YnIngYICxOWomRw0WzCfCPuH-XFkWcB8lonOXeGNQjIVQBWgrLw0fsqrqyNwDeQ8rOYfEqg4UF5FSYqtTQ5Bw" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="170" data-original-width="296" height="184" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj7y-G_UoTeVkTjEFll3E1cljRP5kqFBiBHS3ZGaO0lZ3WCJ9dK8MvoiOaX7dOdVErzfZDpfr51-TfsHT49PrEw8Bu1xj9RwjZRn3KU8YnIngYICxOWomRw0WzCfCPuH-XFkWcB8lonOXeGNQjIVQBWgrLw0fsqrqyNwDeQ8rOYfEqg4UF5FSYqtTQ5Bw" width="320" /></a></div><br /><br /><p></p><p style="text-align: justify;">மிடுக்கான சீருடை அணிந்த பணியாளர்கள், பவ்வியமாக வணங்கி வரவேற்று நம் விருப்பத்திற்கேற்ப இடங்களில் அமர வைத்தனர். </p><p style="text-align: justify;">குளிரூட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எந்த குளிர்பானத்தையும் எடுத்து பருகிக்கொள்ளலாம் சூடான பானம் வேண்டுவோருக்கு வித விதமான- அப்போதே வறுத்து அரைத்த காபி தூள் கொண்டு காபி மற்றும் டீ போன்றவற்றை தயாரித்து வழங்குகிறார்கள்.</p><p style="text-align: justify;">சிற்றுண்டிகளாக - நொறுக்குதீனிகளாக பலவிதமான freshly made cakes , பிஸ்கட்டுகள், உலர்ந்த பழங்கள், வறுத்த பாதம் பிஸ்தா, முந்திரி, போன்றவைகளும் , ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்றவைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.</p><p style="text-align: justify;">எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.</p><p style="text-align: justify;">சிறப்பாக பராமரிக்கப்பட்டிருக்கும் நவீன வசதிகள் கொண்ட குளியல் அறைகள், கழிவறைகள், heating/air condition சிஸ்டம், விளக்குகள் , இருக்கைகள் என அனைத்தும் பயண சீட்டின் விலையில் அடக்கம்.(ஆனால் அவர்கள் சொல்வது இது ஒரு courtesy - hospitality - விருந்தோம்பல் என்று).</p><p style="text-align: justify;">சரியாக இரவு பதினொறு மணிக்கு வண்டி புறப்பாடு குறித்த அறிவிப்பு பயணிகளுக்கு கேட்கும் வண்ணம் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;">அப்போது அங்கிருந்து ரயில் நிலையத்திற்குள் சென்று அவரவர் தங்களின் முன்பதிவிற்கேற்ப அந்தந்த compartment களில் ஏறிக்கொள்ளலாம், தடுமாற்றம் இருந்தால் உதவுவதற்கு ஆங்காங்கே நடத்துனர்கள்- (Stuarts) இருக்கின்றனர், பயணம் முழுவதும் அவர்களும் அதே வண்டியில் நம்மோடு பயணிக்கின்றனர்.</p><p style="text-align: justify;">எனது compartment கிளப் வகை என்பதால் அதை அடைய சுமார் 15 பெட்டிகளை கடக்க வேண்டி இருந்தது, மொத்தம் 21பெட்டிகள் என்ஜினை சேர்க்காமல்.</p><p style="text-align: justify;">எனது கம்ப்பார்ட்மென்டை அடைந்து எனக்கான அந்த தனி அறையை திறந்து பார்த்த எனக்கு மிகுந்த ஆச்சரியமும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது , முதன்முறை cross country - overnight sleeper train பயணமாயிற்றே இருக்காதா பின்னே. (அப்படியே என் நினைவுகள் சில வருடங்கள் பின்னோக்கி நகர்ந்தன- சென்னையில் இருந்து திருச்சிக்கு இரவு நேர ஸ்லீப்பர் ரயிலில் பயணித்த அனுபவம் நினைவிற்கு வந்தது- இந்த இடத்தில் "சொர்க்கமே என்றாலும்...." என்ற பாடலின் ரீங்காரத்தை சட்டென துண்டித்தேன் - No comparison).</p><p style="text-align: justify;">பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட electronic கார்ட் மூலம் கதவை திறந்து அறையில் நுழைந்ததும் இடது பக்கம் தூய்மையான மெத்தை, தலையணை, போர்வை. எதிரில் ஒரு வாஷ் பேசின் , டவல், hand wash . வலதுபக்கம் நவீன குளியல் மற்றும் கழிவறை இருந்தது.</p><p style="text-align: justify;">கூடவே complementary பொருட்களாக, ஒரு சோப்பு,முகம் துடைக்க ஒரு flannel, toothpaste , brush, razor, mineral water bottle போன்றவையும் வைக்கப்பட்டிருந்தன</p><p style="text-align: justify;">ஏற்கனவே பயணியர் தங்குமிடத்தில் freshen-up செய்திருந்தாலும் , மீண்டும் அந்த குளியல் அறை shower ல் ஒரு இதமான சூடு தண்ணீரில் ஒரு குளியல் போட்டுவிட்டு (காசு கொடுத்திருக்கோம்ல) கதவு, ஜன்னல் திரைகளை மூடிவிட்டு உறக்கம் வரும்வரை I-PADஇல் "தமிழக" செய்திகளை பார்த்துவிட்டு (WIFI இணைப்பு உண்டு) உறங்கப்போனேன்.</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjl3TdGU_4U8x1xCMKNcb4853lEfMB9hJJoufzZbXb-M9uBUVdBAYPQmBQ4Lak9qZ3JH1MmsVLt-8PEfTbJmIWbbAtDQnYWRQuZM1wYt-6O_kbZ-gMHyjTXjjupS8uPO8uajEH_nC-fCS5n3mZq2Z1nstGBkvsafEr00bB2fsWG9x6uXWKPitIweoDYrw" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="164" data-original-width="308" height="170" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjl3TdGU_4U8x1xCMKNcb4853lEfMB9hJJoufzZbXb-M9uBUVdBAYPQmBQ4Lak9qZ3JH1MmsVLt-8PEfTbJmIWbbAtDQnYWRQuZM1wYt-6O_kbZ-gMHyjTXjjupS8uPO8uajEH_nC-fCS5n3mZq2Z1nstGBkvsafEr00bB2fsWG9x6uXWKPitIweoDYrw" width="320" /></a></div><br /><br /><p></p><p style="text-align: justify;">அடுத்த 7 மணிநேரம் <b>"மயில் இறகு"</b> தொட்டிலில் உறங்குவதுபோன்று அமைதியான சுகமான உறக்கம். </p><p style="text-align: justify;">காலையில் 6:00 மணி சுமாருக்கு எழுந்து காபி குடிக்கலாம் என்று கிளப் CAFETERIA வுக்கு செல்லும் பாதி தூரத்தில் எதிரில் வந்த Stuart, காலை வணக்கம் சொல்லி ஏதேனும் உதவி வேண்டுமா என கேட்க்க, பரவாயில்லை, நான் காபி குடிக்கத்தான் போகிறேன் என்று சொன்னேன்.</p><p style="text-align: justify;">அவரோ, நானே கொண்டுவருகிறேன் என சொல்லிவிட்டு சுட சுட காபியும் கூடவே இரண்டு packet Scottish short bread பிஸ்கட்டும் கொண்டுவந்து கொடுத்தார்.</p><p style="text-align: justify;">அருந்திவிட்டு, மீண்டும் ஒரு குளியல் போட்டுவிட்டு, இன்னும் அரை மணி நேரத்தில் அடையப்போகும் Glasgow ரயில் நிலையத்தை எதிர்பார்த்து சன்னல் வழியில் விழிகளை பதியவைத்தேன்.</p><p style="text-align: justify;">நேற்று மாலை லண்டனில் என்னை வழி அனுப்பிய அந்த சூரியன் பிரகாச ஒளியுடன் என்னை வரவேற்க Glasgow வில் காய்ந்துகொண்டு.... இல்லை இல்லை காத்துக்கொண்டிருந்தது.</p><p style="text-align: justify;">நான் பயணித்த வண்டி நிறுவனத்தின் பெயர் Caledonian Sleeper Train. </p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjiusq2JeuQXDAkIc3pAFyEU96LtHcdGaeCfPjZjaCBmTobK8zcdp40Zq1v66RjsnO7BNw1k0N1xCt9mXMdq-ut-jfqktFW_dI2wRpijDjDfVkpl3RodSAlb1rqCz-gID8NtYs7yR5Zd1-VTYEMd5reCyJlQxdCFp9pxPpgo2mMYGaH8Tj6Dr75gjSudA" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="132" data-original-width="380" height="111" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjiusq2JeuQXDAkIc3pAFyEU96LtHcdGaeCfPjZjaCBmTobK8zcdp40Zq1v66RjsnO7BNw1k0N1xCt9mXMdq-ut-jfqktFW_dI2wRpijDjDfVkpl3RodSAlb1rqCz-gID8NtYs7yR5Zd1-VTYEMd5reCyJlQxdCFp9pxPpgo2mMYGaH8Tj6Dr75gjSudA" width="320" /></a></div><br /><br /><p></p><p style="text-align: justify;">இந்த ரயில் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்தின் Edinburgh, Glasgow, Inverness, Aberdeen மற்றும் Fort William போன்ற ஒரு சில குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே பயணபடுகிறது.</p><p style="text-align: justify;">எனவே மேற்சொன்ன அனைத்து ஊர்களுக்குமான பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படும். </p><p style="text-align: justify;">நான் சென்ற ரயில் Glasgow விற்கும் Edinburghக்கும் நேரடியாக செல்லும் வண்டி. </p><p style="text-align: justify;">லண்டனில் ஏறும்போது 21 பெட்டிகளாக இருந்த ரயிலில் Glasgowவில் இறங்கும்போது 15 பெட்டிகளை காணவில்லை; ரயிலில் கொள்ளை கேள்விப்பட்டிருக்கின்றோம் இங்கே ரயிலே கொள்ளைபோய்விட்டதோ? விசாரித்ததில் .....</p><p style="text-align: justify;">லண்டனில் இருந்து புறப்படும் இந்த 21 பெட்டிகளைக்கொண்ட ரயில் Carlisle என்ற ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டு, Edinburgh மற்றும் Glasgow செல்லும் பயணிகளின் பெட்டிகள் தனியாக பிரிக்கப்பட்டு வேறு வேறு பாதைகளில் பயணிக்கின்றன என்ற தகவல் கிடைத்தது.</p><p style="text-align: justify;">சும்மா ஒரு ஐடியாவிற்காக கீழே உள்ள You Tube லிங்கை விருப்பமும் அதற்கான நேரமும் இருந்தால் க்ளிக் செய்து விளம்பரங்களை தவிர்த்துவிட்டு பார்க்கவும், இது 2020 மார்ச் மாதம் யாரோ ஒரு யூ-டூபரால் எடுக்கப்பட்ட காணொளி. அதில் அவர் போடும் அனுபவ குறிப்புகள் அவரது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே.</p><p style="text-align: justify;"><a href="https://www.youtube.com/watch?v=khm7uQK4JfI">Caledonian Sleeper Club Room Review : Is it worth it? - YouTube</a></p><p style="text-align: justify;">மலைகள், பள்ளத்தாக்குகள், ஆற்று மேம்பாலங்கள், கடற்கரை ஒட்டிய பாதைகள், குகைகள் , வயல் வெளிகள், காட்டு பாதைகள் என்று எழில்கொஞ்சும் அந்த இயற்கை அழகு பொங்கி வழியும் வழித்தடங்களில் பயணித்து <b>Glasgow</b> நகரை அடைந்து , ஓட்டலில் உடமைகளை வைத்துவிட்டு பின்னர் எங்கெங்கு சென்றேன் என்னவெல்லாம் பார்த்தேன் , பிறகு அங்கிருந்து <b>Edinburgh</b> சென்றதையும் அங்கு பார்த்த இடங்களின் சிறப்புகளையும் நினைவு படுத்தி பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்; இப்போதே சொல்வதாயின் பதிவு லண்டன் to ஸ்காட்லாந்து இருப்புபாதைபோல நீண்டுகொண்டே போகுமே.</p><p style="text-align: justify;"><b>பிகு:</b> ஊர் பெயரின் spelling, Edinburgh என்றிருந்தாலும் உச்சரிக்கும்போது "எடின்Bரா" என்ற ஓசையில் தான் சொல்லவேண்டுமாம் (Ed - in -Bruh )</p><p style="text-align: justify;">நன்றி,</p><p style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம்.</p><p style="text-align: justify;">கோ. </p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"></p><p></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79026055119462251932022-04-26T04:30:00.001-07:002022-04-26T04:30:46.463-07:00அசட்டை !!<div style="text-align: center;"><u>ஸ்டைலு.. ஸ்டைலுதான்...</u></div><div style="text-align: justify;">நண்பர்களே,</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அரை மனிதர்களாக (ஆடை இல்லாது) வாழ்ந்துகொண்டிருந்த மனிதன் நாளடைவில் , காய் கனிகளை கிழங்குகளை மட்டுமே தாவரங்களில் இருந்து பறித்தெடுத்து உணவிற்காக பயன்படுத்தியவன் , அதன் இலைகளையும் தழைகளையும் மரத்தின் பட்டைகளையும் எடுத்து இனி நாம் அரை மனிதன் அல்ல என்று தனது அரையில் - இடுப்பில் கட்டிக்கொண்டு வாழ ஆரம்பித்தான்.<span><a name='more'></a></span></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முதலில் இடுப்பு பகுதியை மறைத்தவன் பின்னர் மார்பு பகுதியையும் மறைக்கலானான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நாகரீக வளர்ச்சியின் பரிணாம சுழற்சியில் காலாடை , மேலாடை என அணிய துவங்கியவன் , பின்னர், மேலாடையை உடல் முழுவதும் மறைக்கும்படியாகவும் , அணிய ஆரம்பித்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தான் வாழும் பூமி ப்பிரதேசத்தின் தட்ப வெட்ப சீதோஷண நிலைமைக்கேற்ப தனது ஆடையை பருத்தி, கம்பளி, பட்டு, தோல் போன்றவற்றால் வடிவமைத்து அணிய ஆரம்பித்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்படியே படி படியாக தேவை கருதி, மேலாடை , காலாடை உள்ளாடை போன்றவற்றை அணியத்துவங்கினான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதற்கடுத்து மேலாடைக்கு மேலே அணியும் உடைகளையும் தயாரித்து அணிய ஆரம்பித்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உடலை மறைக்க சிறிய அளவிலான இலை தழை மரபட்டைகளிலிருந்து இன்றய நவ நாகரீக ஆடை அலங்காரங்களின் விரிவாக்கம் சொல்லில் அடங்காது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதில் காலணிகள் துவங்கி, தலைப்பாகை, தொப்பி, கழுத்துப்பட்டை - (டை) , சாக்ஸ் வரை எத்தனையோ அடங்கும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆடை மீது ஆடை போடும்படியாக பனியன், சட்டை அதன்மீது waist கோட்டு அதன் மீது overcoat என்று அணிய ஆரம்பித்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இருக்கட்டும், தேவைக்கேற்ப, சீதோஷண சூழலுக்கேற்ப , சந்தற்பங்களுக்கேற்ப, நிகழ்ச்சிகளுக்கேற்ப எல்லாவற்றிக்கும் மேலாக வசதிகளுக்கேற்ப எதை வேண்டுமானாலும் எப்பொது வேண்டுமானாலும் அணிந்து கொள்வதில் தவறேதும் இல்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதில் கொளுத்தும் கத்திரி வெய்யிலில் த்ரீ பீஸ் சூட் அணிந்துகொள்பவர்களும் , தடிமனான கம்பளிபோன்ற துணியால் தைக்கப்பட்ட தலை மூடி(hood)யோடு கூடிய மேலாடை அணிபவர்களும் உண்டு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சட்டையில் ஒரே ஒரு பட்டன் அறுந்துவிட்டிருந்தாலும் அதனை சரி செய்து எல்லா பட்டன்களும் இருக்கும்படி பார்த்து அந்த சட்டையை அணிவதுதான் வழக்கம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எனினும் தற்காலத்தில் நான் காணும் சிலறது ஆடை அலங்காரம் என்னுள் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உள்ளே ஒரு பனியனோ அல்லது ஒரு T-shirt போன்ற ஒன்றை அணிந்ததற்கு மேல், எல்லா பட்டன்களும் சரியாக இருந்தும் ஒரு பட்டனைகூட போடாமல் அப்படியே ஒரு சட்டையை போட்டுகொண்டு எல்லா இடங்களுக்கும் செல்பவர்களை பார்த்தால் எனக்கு ஏன் என்று புரியவில்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கல்லூரிகள், திருமண வீடு, உறவினர் வீடு, நண்பர்கள் சந்திப்பு,கோவிலுக்கு செல்லுவது, திருவிழாக்களுக்கு செல்லுதல், மேடைகளில் ஏறி பரிசு வழங்குதல், அல்லது பரிசு பெறுதல் சில வேளைகளில் துக்க வீடுகளுக்கு செல்லும்போதுகூட இப்படி சட்டை பொத்தான்களை முழுவதுமாக கழற்றிய நிலையில் செல்பவர்களை பார்க்கும்போது சட்டையின் அவசியத்தை அவர்கள் சட்டை செய்யாமல் அசட்டை செய்கிறார்களோ என்று தோன்றுகின்றது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உள்ளே இருக்கும் அந்த ஆடையே போதுமானதாக, உடலை மறைக்கக்கூடியதாக , பாதுகாப்பானதாக, நாகரீகமாக இருக்கும்போது அதற்கு மேலே சட்டை ஒன்று போட்டிருக்கின்றார்கள். அதையும் சரியாக எல்லா பட்டன்களையும் பொருத்தி சட்டையின் பிரதானமான நோக்கத்தை புறக்கணித்து- புறம்தள்ளி இப்படி அலங் கோலமாக அணிந்துகொள்வதுதான் இன்றைய வளர்ந்த நாகரீகமா என்று எனக்கு புரியவில்லை. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">புழுக்கமாக இருந்தால் சில வேளைகளில் ஓரிரு பட்டன்களை கழற்றி கொஞ்சம் காற்று வாங்கி ஆசுவாச படுத்திக்கொள்வது வழக்கம் அதில் தவறில்லை</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கோட் சூட் அணிபவர்கள் கோட்டிலுள்ள அந்த இரண்டு பட்டன்களில் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ கழற்றி விடுவது உட்காருவதற்கு வசதியாக இருக்கும் அல்லது நடப்பதற்கு வசதியாக இருக்கும். எனவே கோட் அணிபவர்களுக்கு விலக்கு உண்டு. ஆனால் சட்டை அணிவர்கள் எதற்காக ஒரு பட்டன் கூட போடாமல் அணிகிறார்கள்? பட்டன்கள் அதற்கான காஜா(ஓட்டை) க்கள் வைத்து தைக்கப்படுவதன் அர்த்தம் என்ன?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhHsvP_YLwmUtnnBSVKhs9xCzi-kcXnVKAw3cf168rTc4VoVcnsz5JxAHVwwC3rmyMbxs7exIRH93EUSams1YFgOTZDQdc3dhFAqhNv1udMxVp0kh5o86jStzUKHPWwN1P9C4R5vIlZxB3y5dkBSyQYTG_LfuLEp5WX0DR2ziZCHqU7Fk1HE7uBcR0rkw" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="275" data-original-width="183" height="240" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhHsvP_YLwmUtnnBSVKhs9xCzi-kcXnVKAw3cf168rTc4VoVcnsz5JxAHVwwC3rmyMbxs7exIRH93EUSams1YFgOTZDQdc3dhFAqhNv1udMxVp0kh5o86jStzUKHPWwN1P9C4R5vIlZxB3y5dkBSyQYTG_LfuLEp5WX0DR2ziZCHqU7Fk1HE7uBcR0rkw" width="160" /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /></a></div></div><div style="text-align: justify;">நாகரீகம் இப்படித்தான் பரிணாமம் அடைந்திருக்கின்றதா? </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கந்தையானாலும் கசக்கிக்கிட்டு எனும் மூத்த மொழிக்கேற்ப- கிழிந்த சட்டை, கிழிந்த கால் சட்டை அணிவது கூட பார்க்கமுடிகிறது பரவாயில்லை- அவை அவர்களின் ஏழ்மையின்(!!??) பிரதிபலிப்பு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சின்ன பசங்களுக்கு பெற்றோரே இப்படி அணிவித்து அழைத்து செல்வதை என்ன சொல்ல?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நான் ஏதோ ஆண்களைமட்டுமே சொல்வதாக நினைக்கவேண்டாம் இந்த நிலை பெண்களிடமும் இருப்பது வியப்பு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இளைஞர்கள், பள்ளி, கல்லூரி வயதினர் மட்டுமின்றி, சமூகத்தில் CELEBRITY என்று கருதப்படுபவர்களும் இப்படி அணிந்துகொண்டு பொது இடங்களுக்கு மேடைகளுக்கு, பேட்டி கொடுக்க அல்லது பேட்டி எடுக்க , நிகழ்ச்சி தொகுப்பாளராக வருவது எனெக்கென்னவோ ஏற்புடையதாக தெரியவில்லை. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உங்களுக்கு எப்படி? </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">யார் எப்படி டிரஸ் பன்னா நமக்கென்ன?.. என்று அப்படி அவர்களை சட்டை செய்யாமல் அசட்டை செய்துவிட்டு நம்ம பொழப்ப பார்ப்போம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>பி.கு:</b> ராணுவ கட்டுப்பாடுமிக்க பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியரின் கண்டிப்புமிக்க கட்டளையால், சட்டையின் ஒரே ஒரு பட்டன் கபடி விளையாடும்போது அறுந்துவிட்டதை, தைத்து போட்டுவரும்படி, பெற்றோருக்கு குறிப்பெழுதி, பள்ளியை விட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்ட அந்த நினைவு வடு இன்னும் என் மனதில் இருப்பதால் இத்தகு செயல்களும் நாகரீக சிதைவுகளும் என்னால் ஏற்கமுடியவில்லையோ?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நன்றி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மீண்டும் ச (சி)ந்திப்போம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கோ.</div><div></div><div></div>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-1285933273071827162022-04-23T09:33:00.002-07:002022-04-25T05:37:23.261-07:00சிங்க குகைக்குள்ளே .... <p style="text-align: center;"> <u>சிங்கிளாக!!!</u></p><p style="text-align: justify;"> நண்பர்களே,</p><p style="text-align: justify;">பல நாட்கள் பசியோடு உறுமிக்கொண்டே இருக்கும் சிங்கத்தின் குகைக்குள் ஒரு மனிதன் செல்வதாயின் அதற்கு பெருந்துணிச்சலும் அதீத மன தைரியமும் இருக்கவேண்டும். <span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">அப்படி சென்று , நக கீறல்கூட இல்லாமல் முழுமையாக திரும்பி வருவதென்பது மிக மிக அபூர்வமும் வியப்புமிக்க ஆச்சரியமுமான நிகழ்வே .</p><p style="text-align: justify;">இப்படி இருக்க, பார்க்கும் இடமெங்கம் சிங்கிளாக இல்லாமல் கூட்டம் கூட்டமாக குடி இருக்கும் சிங்க குகைக்குள் சென்று சிறு சேதாரமு மின்றி மீண்டு(ம்) வருவதென்பது ஆச்சரியத்தின் உச்சம்.</p><p style="text-align: justify;">பேராபத்தையும் , பெரும் சேதத்தையும் விளைவிக்கும் வீர தீர செயலை செய்யும்போது இப்படி சிங்க குகை விஜயத்தை உவமையாக சொல் வதுபோல்தான் , எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பதிவாக்க நானும் இந்த உவமையை எடுத்துக்கொண்டேன்.</p><p style="text-align: justify;">அப்படி என்ன நிகழ்வு?</p><p style="text-align: justify;">சென்ற மாத துவக்கத்தில் ஆப்ரிக்காவின் வடக்கு கடல் எல்லையில் இருந்து சுமார் 80 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் - அட்லாண்டிக் பெருங்கடலில் , ஸ்பெயின் தேசத்தின் ஆளுகைக்கும் அதன் கடல் எல்லைக்கும் உட்பட்ட Canary தீவுகளில் ஒரு தீவில் ஒரு வாரம் தங்கி இருந்தேன்.</p><p style="text-align: justify;">அந்த தீவு சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க கண்டங்களின் கடல்களுக்கடியில் ஏற்பட்ட டெக்டானிக்(Tectonic) தகடுகளின் பிளவின் காரணமாக உருவானதாக ஆராய்ச்சியாளர்களின் வரலாற்று குறிப்புகள் விளம்புகின்றன.</p><p style="text-align: justify;">மன ரம்மியமான கடற்கரை, காய்ந்தமாடு கம்பங்கொல்லையை பார்பதுபோன்று, குளிர் பிரதேசத்தில் வாழும் என்போன்றோருக்கு அந்த தீவின் இதமான - சூடான தட்பவெட்பம் மிகவும் இனிமையானதாக இருந்தது.</p><p style="text-align: justify;">நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த கடற்கரை சாலைகள், நடை பாதைகள், கடை தெருக்கள், பிரதான சாலைகள், அழகிய வடிவிலான கட்டிடங்கள், வீடுகள், அனைத்து கட்டிடங்களும் நாட்டின் ஒழுங்குபடியம் UNESCO வின் பாதுகாப்பு விதிகளின்படியும் வெள்ளை நிறமன்றி வேறு நிறமறியா வெள்ளை தீவாகவே மாற்றப்பட்டிருந்த நேர்த்தி.</p><p style="text-align: justify;">இதுபோன்ற சிறப்பு கொண்ட தீவின் ஒருபகுதி மிகவும் கவனமாகவும் - தீவிரமாகவும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டும் வருகிறது.</p><p style="text-align: justify;">அப்படி என்ன அந்த பகுதியின் சிறப்பு?</p><p style="text-align: justify;">ஏற்கனவே அந்த தீவு கடலடியில் ஏற்பட்ட பூகம்ப அதிர்வலைகளால் உருவாகி இருந்த நிலையில் 1730 க்கும் 1736 க்கும் இடையில் சிலிர்த்தெழுந்த சிங்கங்களென சீறிப்பாய்ந்த தொடர் எரிமலை வெடிப்புகளும் - சீற்றங்களும் அந்த பகுதி முழுமைக்கும் இப்படி ஒரு சிறப்பு கவன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. </p><p style="text-align: justify;">வெடித்து சிதறி - உருகி ஓடிய எரிமலை குழம்புகள் பாறைகளாக இறுகிய நிலையில் ஒட்டு மொத்த தீவையும் ஆக்கிரமித்திருப்பதால் கட்டிடங்களை தவிர சீரமைக்கப்பட்ட கட்டிட வளாகங்கங்களை தவிர ஏனைய நிலப்பரப்பு முற்றிலும் கருப்பு நிறத்தில் காட்சி அளிப்பது அந்த தீவின் கூடுதல் ஒரு சிறப்பு.</p><p style="text-align: justify;">தீவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் பாதுகாக்கப்பட்ட அந்த இடத்திற்கு " திமான்பயா தேசிய பூங்கா (<a href="https://en.wikipedia.org/wiki/Timanfaya_National_Park" style="background: none rgb(255, 255, 255); color: #faa700; font-family: sans-serif; font-size: 14px; outline-color: rgb(51, 102, 204);" title="">Timanfaya National Park</a><span face="sans-serif" style="background-color: white; color: #202122; font-size: 14px;">)</span>என்று பெயரிட்டிருக்கின்றனர்.</p><p style="text-align: justify;">சுமார் 51 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அந்த பகுதி முழுவதும் ஆறி இறுகிய எரிமலை குழம்புகளால் உருவான மண் மற்றும் பாறைகளால் மட்டுமே ஆனது; அங்கே ஒரே ஒருவகை புல்லை தவிர வேறு எதுவும் வளராது என்பதும் அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதும் அதன் கூடுதல் சிறப்பு.</p><p style="text-align: justify;">1993ஆம் ஆண்டு UNESCO வால் இந்த பகுதிமட்டுமன்றி ஒட்டுமொத்த தீவும் ஒரு உயிர்கோளம்(Biosphere) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">மேற்சொன்ன தேசிய பூங்காவில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் பல எரிமலைகள் இருக்கின்றன, அவற்றை பாதுகாப்புடன் பார்க்க பிரத்தியேகமான நேரங்களில் பொதுமக்களுக்கு கட்டணத்துடன் கூடிய அனுமதி வழங்கப்படுகிறது.</p><p style="text-align: justify;">புகைபடங்கள், திரைப்படங்கள், ஆவணபடங்கள், தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமே பார்த்திருந்த எரிமலையை நேரில் பார்க்கமட்டுமின்றி அதன்மீது ஏறி நிற்கும் ஒரு அபூர்வ சந்தர்ப்பம் (once in lifetime) எனக்கு ஏற்பட்டதை என்றும் மறக்க இயலாது.</p><p style="text-align: justify;">நகரத்தின் மையத்திலிருந்து மகிழுந்தில் சுமார் அரை மணிநேர பயணத்திற்கு பின் தேசிய பூங்காவின் நுழைவு வாயிலை அடைந்து நுழைவு கட்டணம் செலுத்திய பிறகு அங்கிருந்து இன்னுமொரு ஐந்து நிமிட பயண தூரத்தில் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டிருந்த பேருந்தில்(coach) ஏறி ஒரு திகிலான பயணம்.</p><p style="text-align: justify;">பேருந்தின் சக்கரங்களுக்கு மட்டுமே இடமிருக்கும் வகையிலான மிக ..மிக.. மிக குறுகலான, வளைந்து நெளிந்து, செங்குத்தாக மேல் நோக்கியும் . அதே சமயத்தில் சடாரென நீளும் பள்ளமான பாதைகளிலும் பயணிக்கும் ஒரு திகிலான பயணம். </p><p style="text-align: justify;">ஒட்டக பயணமும் இருக்கின்றது, அவற்றிற்கான பாதைகள் பேருந்து வழித்தடங்களை தவிர்த்து வேறு பாதைகள்.</p><p style="text-align: justify;">தார் சாலைகள்போல் அமைக்கப்பட்டிருந்த சாலைகளின் இருபுறமும் கிடு கிடு பள்ளங்கள். அந்த பேருந்து சாரதிகள் பிரத்தியேக பயிற்சி பெற்றவர்கள்; வேறு யாராலும் இத்தகைய சாகசம் நிறைந்த பணியை செய்ய முடியுமா என்பது சந்தேகமே. பயணிகளுக்கு வழி நெடுகிலும் ஆங்கிலத்திலும் ஸ்பெயின் மொழியிலும் விளக்கங்கள் சொல்லிக்கொண்டே வருகின்றனர்.</p><p style="text-align: justify;">சுமார் முக்கால் மணிநேர திகில் பயணத்திற்கு பிறகு, இன்றளவும் சீறிக்கொண்டு நெருப்பை கக்கிக்கொண்டிருக்கும் பல எரிமலைகளை மிக அருகிலிருந்து பார்வையிட அனுமதிக்கின்றனர்.</p><p style="text-align: justify;">சுமார் 200 முதல் 1120 டிகிரி Farenheit அளவிலான வெட்பமான நெருப்பை உமிழும் இடங்களை பிரத்தியேக பயிற்சிபெற்ற ஊழியர்கள் சுற்றுலா பயணிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டுகின்றனர்.</p><p style="text-align: justify;">ஒரு எரிமலை குகையின் வாயில் ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றிவிட்டு பாதுகாப்பான இடம் நோக்கி வேகமாக ஓடிவிடுகிறார்; ஒரு இரண்டு அல்லது மூன்று செகண்டுகளுக்குள் அந்த தண்ணீர் அதீத சூட்டோடு வானத்திற்கு எரிவாயுவுடன் இணைந்து பீச்சி அடிக்கப்படுகிறது. அதேபோல வேறொரு குழியில் காய்ந்த புல் பூண்டு சருகுகளை கையில் வைத்தருக்கும் ஒரு நீளமான கம்பி கொண்டு திணிக்க அது குபீரென பற்றி எரிகிறது.</p><p style="text-align: justify;">அதேபோல அங்கு இருக்கும் உணவு விடுதிக்குள் பாதுகாக்கப்படும் ஒரு எரிமலை கிணறு இருக்கின்றது. அதன்மேலே இரும்பினால் ஆன ஒரு க்ரில் போன்ற மூடி இருக்கின்றது அந்த க்ரிலின் மீது உணவு மற்றும் மாமிசங்களை வைத்து இயற்கையான எரிமலை சூட்டில் சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.</p><p style="text-align: justify;">அந்த பகுதியில் எங்குவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எரிமலை சீற்றம் அடையலாம் என்று அறிந்தபோது உள்ளபடியே "பில்டிங் ஸ்ட்ராங்கு ... பேஸ்மட்டம் வீக்கு" எனும் நிலைமைதான். பெரிய அளவிலான எரிமலை சீற்றங்கள் 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததாக ஆவண பதிவுகள் சொல்கின்றன.</p><p style="text-align: justify;">இப்படியாக சுமார் இரண்டு மணிநேரம் இயற்கையின் வினோத விந்தை பிரதேசத்தில் (ஒருபுறம் பார்த்தால் சீறும் கடல் மறுபுறம் பார்த்தால் சீறும் எரிமலை) இருந்துவிட்டு மீண்டும் திரும்பும் போது " பல நாட்கள் பசியோடு சீறிக்கொண்டிருக்கும் சிங்ககூட்டத்தை அதன் குகைக்குள்ளேயே சென்று சந்தித்துவிட்டு(மிதித்துவிட்டு) வீறு நடைபோட்டு வெற்றியோடு திரும்பியது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது.</p><p style="text-align: justify;">அந்த பூங்காவில்(??) உணவு , தேநீர், நினைவு பொருட்கள் கடை, wifi வசதி, வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் ஓய்வு அறைகளும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன.</p><p style="text-align: justify;">அந்த ஸ்பெயின் தீவின் பெயர் லான்சராட்டி (Lanzorate)</p><p style="text-align: justify;">தேசிய பூங்காவின் சில புகைப்பட காட்சிகள்.</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhUUT89GGvs2n3uq7T_8CRADtFdLQKIgYR3JAkuPwOHx4TFAHdP9mcltsPgODGVZhq6jBMq-kqUQIblzHhScfkreL16Up6T58uoahvVy2ypyOpGjdz0abCkc4RvEeifGH_AADeIKda_y-DOibGuwMjrgpb3RYimE_9dwdp66IaLWPAQGAVhsS5V0rlM3w" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="194" data-original-width="260" height="239" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhUUT89GGvs2n3uq7T_8CRADtFdLQKIgYR3JAkuPwOHx4TFAHdP9mcltsPgODGVZhq6jBMq-kqUQIblzHhScfkreL16Up6T58uoahvVy2ypyOpGjdz0abCkc4RvEeifGH_AADeIKda_y-DOibGuwMjrgpb3RYimE_9dwdp66IaLWPAQGAVhsS5V0rlM3w" width="320" /></a></div><br /><span style="text-align: justify;">திமான்பயா தேசிய பூங்கா உங்களை அன்போடு </span><span style="text-align: justify;">வரவேற்கிறது (ஸ்பானிஷ் மொழி தெரியாதவர்களுக்காக)</span></div><p></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjxl-o6HEZIYz-9c-DVnfRZwYXwreyDMQldBhhE4ssWMcLQ6MBz1PxSMsEKQTft1gd1XU740sTG5tHfdzXKJRmqvo9CjJ1-d90-yCb3EaWh6Q0DnYuJscBJQyeMujCE0AXfVA0w6U9sWxHFb3qnPQUZMJxIBig8N2tX-3mNDDqOSvufkWzM-tY915FNNA" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="1024" data-original-width="1536" height="213" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjxl-o6HEZIYz-9c-DVnfRZwYXwreyDMQldBhhE4ssWMcLQ6MBz1PxSMsEKQTft1gd1XU740sTG5tHfdzXKJRmqvo9CjJ1-d90-yCb3EaWh6Q0DnYuJscBJQyeMujCE0AXfVA0w6U9sWxHFb3qnPQUZMJxIBig8N2tX-3mNDDqOSvufkWzM-tY915FNNA" width="320" /></a></div><br /><div style="text-align: center;">பூமி குழியில் நீரூற்றிய சில நொடிகளில் வான் நோக்கி பாயும் வெந்நீர்/ எரி வாயு சீற்றம்.</div><p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgIAPuZpIjwrEPzHyhK-titcEU0TeQRbvR8qVtkwwWWLuftap3Y4Mjg25_obdUqYf__ZLplWRWVkgKUbZiOmkrKc0AGYUtNLSq_Hu1_m7j3Sw1o0QwPlyBwks5d9H15vclpRX4TKM-2hf1jUQZZY2VWbzG32XhFII8T82eOskbiGuQ1ApjWhO8VBRbDnA" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="175" data-original-width="287" height="195" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgIAPuZpIjwrEPzHyhK-titcEU0TeQRbvR8qVtkwwWWLuftap3Y4Mjg25_obdUqYf__ZLplWRWVkgKUbZiOmkrKc0AGYUtNLSq_Hu1_m7j3Sw1o0QwPlyBwks5d9H15vclpRX4TKM-2hf1jUQZZY2VWbzG32XhFII8T82eOskbiGuQ1ApjWhO8VBRbDnA" width="320" /></a></div><br /><div style="text-align: center;">உறங்கிக்கொண்டிருக்கும் பழுத்த(கொழுத்த) சிங்க குகை .</div><p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh41IEML04zhOe-gm0B5CITmkFxphVwGuxV5hyxJPlq-nJRM2KPpVuD1dM2G7TlS5plnMxSV3mv8G_tEjMQf0SuhGZfpzRiqYgQMdFTIhiswuZ01crDaw9WTlL8sIZ0gCQtfYkkrdU55CxoCF1nx7EO0t5TVk6k06defY7n0xcbCTYspfyoGSdD5GDLug" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="203" data-original-width="248" height="240" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh41IEML04zhOe-gm0B5CITmkFxphVwGuxV5hyxJPlq-nJRM2KPpVuD1dM2G7TlS5plnMxSV3mv8G_tEjMQf0SuhGZfpzRiqYgQMdFTIhiswuZ01crDaw9WTlL8sIZ0gCQtfYkkrdU55CxoCF1nx7EO0t5TVk6k06defY7n0xcbCTYspfyoGSdD5GDLug" width="293" /></a></div><br /><div style="text-align: center;">கனன்றுகொண்டிருக்கும் எரிமலையின் கண் சிமிட்டல்.</div><p></p><p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgS18ve-xvjLR4WZZBFOGdK7qt4ty6xO5Ahnwpdj08XRgvVi1SZ2fAn3PE9y6faz5hkA8T10-KJj13gwgsCuB4qLHF2ONKcxuML5XM0q91J6t5xPCO67I39LIaxXAzh6nFRc0gJWYrTQvrH-z0C8BZAw1U1ek_bq_FBAjMlS5iBEyoxTVr6RtUpjD1r0g" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="186" data-original-width="271" height="220" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgS18ve-xvjLR4WZZBFOGdK7qt4ty6xO5Ahnwpdj08XRgvVi1SZ2fAn3PE9y6faz5hkA8T10-KJj13gwgsCuB4qLHF2ONKcxuML5XM0q91J6t5xPCO67I39LIaxXAzh6nFRc0gJWYrTQvrH-z0C8BZAw1U1ek_bq_FBAjMlS5iBEyoxTVr6RtUpjD1r0g" width="320" /></a></div><br /><p></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="text-align: left;">கிடு கிடு பள்ளங்கள்மீது செங்குத்தாக போடப்பட்டிருக்கும் நெடுந்தொலைவு </span><span style="text-align: left;">பேருந்து பாதை </span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="text-align: left;"><br /></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgLaizf2AVMOIM7o-PCYlmB7lINvp5e1U1Zvqf-yiKXPiVnYdtblsaHi8wEmsFU51vgZgEeKNx9hUyouJC65_XMKCCYyGOnl_QKX5wykn42pOvVPxPsmNrsozmmF6_V69fmH2PzEX7HRRkKv0m3l6oRZFlkc4AADPSEUr3sa7iCP2tqj_ildvjlRDf9FA" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="183" data-original-width="276" height="212" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgLaizf2AVMOIM7o-PCYlmB7lINvp5e1U1Zvqf-yiKXPiVnYdtblsaHi8wEmsFU51vgZgEeKNx9hUyouJC65_XMKCCYyGOnl_QKX5wykn42pOvVPxPsmNrsozmmF6_V69fmH2PzEX7HRRkKv0m3l6oRZFlkc4AADPSEUr3sa7iCP2tqj_ildvjlRDf9FA" width="320" /></a></div><br />எரிமலை அடுப்பில் கறி சமையல். </div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">நன்றி.</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம் </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">கோ.</div></span></div><p></p><p><br /></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-22840650208119486242022-03-15T07:00:00.004-07:002022-03-17T05:18:53.266-07:00தில்லான மேகனாம்பாள்.<div></div><div style="text-align: center;"><u><b>"தில் தில் தில் மனதில்"</b></u> </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நண்பர்களே,</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தமிழக பாரம்பரிய கலைகளான நாதஸ்வரம் வாசிப்பையும் பரதநாட்டிய கலையையும் பெருமைப்படுத்தும் வகையில், நகைச்சுவையையும் அதனுள் ஒரு காதல் கதையையும் புகுத்தி , சிறப்பான நடிப்பு திறனையும் புடமிட்டு மெருகேற்றி 1968ல், திரு ஏ பி நாகராஜன் திரைக்கதை - இயக்கத்தில், திரு கே வி மகாதேவன் இசையமைப்பில் உருவாக்கப்பட்ட , தமிழ் திரை உலகவரலாற்று சுவடியில் ஆழமாக சுவடு பதித்த திரைப்படம், தில்லானா மோகனம்பாள் என்பது எல்லோரும் அறிந்தததே.</div><div style="text-align: justify;"><span><a name='more'></a></span></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இந்த பதிவின் தலைப்பை கவன சிதைவோடு பார்த்தவர்களுக்கு இந்தப்படம் நினைவிற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என்னை அறிந்த பலரும் அறிந்தவண்ணம் , திரைப்பட விமர்சனம் செய்யவது வேடிக்கைக்குக்கூட எனது வாடிக்கை அல்ல.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்படி இருக்க இந்த பதிவு எதை பற்றி? தலைப்பை மீண்டும் ஒருமுறை கவன சிதைவின்றி வாசித்துவிட்டு பதிவை தொடரவும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முக்கிய சாலையிலிருந்து சிறுது உள்வாங்கியவண்ணம் அமைந்திருக்கும் நகர பேருந்து நிறுத்தும் பிரதானமான பகுதியில் , மற்ற வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வேலை முடித்து மாலையில் வீடு திரும்புவதற்காக பேருந்தின் வரவிற்காக நிழற்கூடையின் கீழ் காத்திருந்தனர் பயணிகள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மாலைவேளைகளில் வரும் பேருந்துகள் வழக்கமாக அதிக கூட்டத்துடன்தான் வரும், எனினும் மக்கள் முந்தி அடித்து , முன்னிருப்பவர்களை முந்திக்கொண்டு யாரும் பேருந்தில் ஏறமாட்டார்கள், மாறாக வரிசையில் நின்று , பேருந்து ஓட்டுநர் கதவை சார்த்தும் வரை பொறுமையோடு இருந்துதான் ஏறுவார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என்று வந்தாலும் எல்லா பேருந்துகளும் ஒரே வழி தடத்தில் செல்லாது என்பதால் பயணிகள் நிற்கும் நிழற்கூடையருகே கூட்டம் அலைமோதும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒருமுறை கதவு சார்த்தப்பட்டால் பெரும்பான்மையான நேரங்களில், தாமதமாக வரும் பயணி கதவை தட்டினாலும் கதவை திறக்கவோ -பேருந்தை நிறுத்தவோ மாட்டார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அன்றும் அப்படியே எல்லோரும் பேருந்தில் ஏறியபிறகு கதவு சார்த்தப்பட்டு பேருந்து சாலைக்கு திருப்பப்படும் நேரத்தில் அரக்க பறக்க ஓடிவந்த நபர் கதவை வேகமாக தட்ட ஆரம்பித்துவிட்டார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஓட்டுனரின் கவனம் வண்டியை நேர்த்தியாக கவனமாக பிரதான சாலையில் செலுத்தும் நோக்கிலும் , ஒருமுறை சார்த்திவிட்டால் அநேகமாக மீண்டும் திறப்பதில்லை எனும் சம்பிரதாய வழக்கத்தாலும், ஏற்கனவே அந்த பேருந்தின் எல்லா இருக்கைகளும் முழுமையாக நிறப்பட்டிருந்ததாலும் அந்த பயணிக்கு பேருந்தில் ஏற வாய்ப்பு அளிக்கப்படவில்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிறுத்தத்தில் இருந்து சாலைக்கு வரும்போது வேகம் குறைவாகத்தான் இருக்கும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பயணி பேருந்தின் முன் வந்து கைகளை நீட்டி பேருந்து சாலைக்குள் பிரவேசிக்க விடாமல் தடுத்து நிறுத்தி வழி மறித்தார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">திடீரென நிறுத்தப்பட்ட பேருந்தின் குலுக்கலில்தான் சகபயணிகளுக்கு தெரியவந்தது என்ன நடக்கின்றது என்று.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் அந்த நபர் கதவை திறக்கச்சொல்லி பேருந்தை மறித்தபடி நின்று கொண்டிருந்தார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இந்த ஊரிலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நேரமாகிக்கொண்டே இருக்கின்றது; அதற்குள் வேறு சில பேருந்துகளும் அந்த நிறுத்தத்தை நோக்கி வந்தும் நிறுத்த இடமின்றி பிரதான சாலையிலேயே நிற்க வேண்டியதாகிவிட்டது. அதனால் முக்கிய சாலையில் பயணிக்கும் ஏனைய மகிழ்வுந்துகள், மற்ற பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு பயணிக்க வழி இன்றி ஸ்தம்பித்து நிற்க வேண்டிய சூழ் நிலை உருவானது, நல்ல வேளை ஆம்புலன்ஸ் ஏதும் அந்த நேரத்தில் வரவில்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இந்த நிலையில் சாலையின் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு 30 வயது மதிக்க தக்க பெண்மணி, சூழ்நிலையை உணர்ந்துகொண்டு, பேருந்தை வழி மறித்துக்கொண்டிருந்த நபரை துணிச்சலுடன் குண்டு கட்டாக தூக்கி சென்று பேருந்து நிறுத்த நிழற்கூடை அருகே கொண்டு விட்டு பேருந்து ஓட்டுநருக்கான பாதையை சரி செய்து கொடுத்தார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதனை கண்ட அந்த பேருந்து ஓட்டுநர்மட்டுமின்றி ஏனைய பயணிகளும் அந்த பெண்மணியின் "தில்லையும் துணிச்சலையும்" கை தட்டி பாராட்டினர், சாலை போக்குவரத்து சீரானது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் அங்கு வந்த நான் முழுவிவரமும் அறிந்து கொண்டேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் அந்த பெண்ணும் சம்பந்தப்பட்ட பயணியும் அங்கேயேதான் இருந்தனர். அப்போது அந்த பெண் சம்பந்தப்பட்டவரோடு கொஞ்சம் கடுமையான குரலில் அதே சமயத்தில் தைரியமாக பேசிக்கொண்டிருந்ததை கேட்க முடிந்தது.</div><div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என் பெயர் மேகன்(Meghan) நான் இந்த இடத்தில் பணிபுரிகிறேன் , இந்த நிகழ்ச்சி தொடர்பாக என்னிடம் வம்பு தும்பு வைத்துக்கொண்டால் உன்னை காவல் துறையில் ஒப்படைப்பேன், உன்னுடைய நடவடிக்கை அந்த பேருந்து கேமராவில் பதிவு ஆகி இருக்கும், மரியாதையாக அமைதியாக இருந்து அடுத்த பேருந்தில் ஏறி வீட்டுக்கு செல் என அனாயசமாக கூறிவிட்டு யாருடைய பாராட்டையும் பொருட்படுத்தாமல் தமது நடையை தொடர்ந்தார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அந்த <b>"தில்லான"</b> Meghaனாம்பாளை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின்நாளில் அந்த பெண்மணிக்கு பாராட்டு கடிதமும் மலர்கொத்தும், இனிப்பும் பேருந்து நிறுவனத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டதை செவி வழி வாயிலாக அறிந்தவர்கள் பலரிடம் பகிர்ந்து மகிழ்ந்தனர்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நன்றி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வணக்கம்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கோ.</div></div><div style="text-align: justify;"><br /></div><div><br /></div>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-29166913305077760952022-01-20T07:55:00.002-08:002022-01-20T07:55:47.002-08:00தாலிக்கு தங்கம்!!<p style="text-align: center;"><u>"பணத்துக்கு பங்கம்".</u></p><p style="text-align: justify;">நண்பர்களே,</p><p style="text-align: justify;">மணமகன் அல்லது மணமகள் இல்லாமல் கூட திருமணங்கள் நடந்தாலும் நடக்கலாம், ஆனால் தங்கம் இல்லாமல் எந்த திருமணத்தையும் நினைத்துப்பார்க்க முடியுமா என்றால் சந்தேகமே.<span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">எத்தனை வறுமையான பின்னணி உள்ளவர்களும் வாழ்வில் ஒரு சம நிலைக்கு வரவேண்டும் எனும் உயரிய நோக்கோடு, அரசாங்கம் கொண்டுவந்து ஆங்காங்கே செயல் படுத்தி வரும் பல திட்டங்களை நாம் அவ்வப்போது அறிய முடிகிறது.</p><p style="text-align: justify;">அவ்வகையில் ஏழை எளிய மக்களின் திருமணத்திற்காக புடவை சட்டை வேட்டி சீர் வரிசைகளையும் கொடுத்து அவர்களது வாழ்வில் குடும்ப வாழ்வின் துவக்கம் ஒளிமயமானதாக அமையவும் அவர்களது மணவாழ்வில் மகிழ்சி என்றும் தங்க வேண்டும் என்பதற்காகவும் தங்க தாலியும் வழங்கும் ஒரு ஒப்பற்ற திட்டத்திற்கு,<b>"தாலிக்கு தங்கம்"</b> எனும் பெயருடன் ஒரு சிறப்பு திட்டம் இருப்பதை நாம் அறிவோம்.(இன்னும் இருக்கின்றதா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்).</p><p style="text-align: justify;">தங்கம் எத்தனை விலை உயர்ந்த உலோகம் என்பதை உலகறியும்; ஒரு குன்றுமணி அளவு தங்கம் என்றாலும் அதன் விலை அத்தனை அதிகம். எனவே தான் கடைகளில் எடை போட்டு வாங்கும் காய்கறிகளைக்கூட என்னப்பா தங்கம்போல எடைபோடுகிறாய் கொஞ்சம் சேர்த்து போட்டுக்கொடு என்று சொல்வதை கேட்டிருப்போம்.</p><p style="text-align: justify;">அதேபோல வேறு எந்த பொருளை வாங்கும்போதும் அதன் விலை அதிகமாயிருந்தால் தங்கம்போல விலை வைத்து விற்கிறார்கள் என சொல்ல கேட்டிருப்போம்.</p><p style="text-align: justify;">அதேபோலதான் சென்ற வரம் ஒரு உணவு விடுதிக்கு நண்பர்களாய் சென்றிருந்தோம். </p><p style="text-align: justify;">இன்றைக்கு என்ன ஸ்பெஷல்? </p><p style="text-align: justify;">பல பண்டங்களின் பெயரை அடுக்கிக்கொண்டே கடைசியில் ஒரு "ஐட்டத்தின்"(அதாவது ஒரு உணவின்) பெயரை சொன்னதும் சரி அதையே வாங்கிக்கொள்ளலாம் என நினைத்து ஆர்டர் கொடுத்துவிட்டோம்.</p><p style="text-align: justify;">பதினைந்து நிமிடங்களில் கொண்டு வந்து மேசைமீது வைக்கபட்டது.</p><p style="text-align: justify;">பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.</p><p style="text-align: justify;">அளவு?</p><p style="text-align: justify;">ஒரு பெரிய வட்டவடிவிலான எவர் சில்வர் தட்டு.</p><p style="text-align: justify;">அதில்,</p><p style="text-align: justify;">சுமார் 30 கிராம் எடை உள்ள மஞ்சள் கலர் தண்ணீரில் வேகவைத்த புலவு என்று பெயர்வைக்கப்பட்ட சாதம் ஒரு உள்ளங்கை அளவிலான சிறிய தட்டில்.</p><p style="text-align: justify;">அதிக பட்சம் 25-40 மில்லி (லிட்டர்) நிறை கொண்ட சிறிதும் பெரிதுமான எவர் சில்வர் கிண்ணங்கள் மூன்று</p><p style="text-align: justify;">ஒன்றில் தயிரும் வெங்காயமும் போட்ட ரைத்தா.</p><p style="text-align: justify;">அடுத்த கப்பில் பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் போட்ட ஒரு குருமா.(அதில் ஒரு துண்டு உருளை கிழங்கு மூன்று துண்டு பீன்ஸ் எட்டு பச்சை பட்டாணி, நான்கு சிறிய துண்டு கேரட்).</p><p style="text-align: justify;">அடுத்த கப்பில் ஒரு சிறிய துண்டு கோழி கறியுடன் கூடிய கிரேவி.</p><p style="text-align: justify;">தட்டின் மீதமுள்ள காலி இடங்களின் ஒரு பகுதியில் ஒரு Naan-bread.</p><p style="text-align: justify;">சுமார் மூன்று அங்குல நீளம் கொண்ட நெருப்பில் வாட்டிய கோழி துண்டு இரண்டு.</p><p style="text-align: justify;">சிறிய வடிவிலான ஆட்டிறைச்சி துண்டுகள் இரண்டு ( இந்த துண்டுகளின் அளவை துல்லியமாக சொல்லவேண்டுமாயின், ஒரு எட்டு வயசு பையன் ஒவ்வொரு துண்டையும் அப்படியே வாயில் போட்டு எந்த உபாதையுமின்று மெல்லாமலேயே விழுங்கிவிடலாம்)</p><p style="text-align: justify;">அடுத்து ஒரு சிறிய ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டினால் என்ன அளவு இருக்குமோ அந்த அளவிலான ஒரு சிகப்பு நிற மெருகேற்றிய(செயற்கை நிறம் தான்) தந்தூரி அடுப்பில் சுடப்பட்ட கோழி துண்டு.. </p><p style="text-align: justify;">மற்றும் நீள வாக்கில் வெட்டப்பட்ட சிறிய அளவு எண்ணையில் பொறிக்கப்பட்ட வெங்காய சீவல்களும் இருந்தன.</p><p style="text-align: justify;">இத்தனையும் அந்த பெரிய தட்டின் மூன்றில் ஒரு பதிக்குள்ளேயே அடங்கிவிட்டது.</p><p style="text-align: justify;">முதலில் பார்க்கும்போது இது ஒருவேளை starter ஆக இருக்குமோ என நினைக்க தோன்றியது.</p><p style="text-align: justify;">ஒரு வழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு பில் கொண்டுவர சொன்னோம்.</p><p style="text-align: justify;">பில் amount ஐ பார்த்தவுடன் கொஞ்சம் தலை சுற்றியது. ஒரு சாப்பாடு £21.99 அதாவது நம்ம ஊர் கணக்குப்படி ஒரு சாப்பாடு இரண்டாயிரத்து இரு நூறு ரூபாய் மூன்று பேருக்கு £66.00.</p><p style="text-align: justify;">(விலை நிலவரம்:பத்து கிலோ பாசுமதி அரிசி £12.00 ஒரு முழு கோழி £3.00, காய் கறிகள் ஒரு கிலோ £6.00, Extra வெர்ஜின் ஆலிவ் ஆயில் 1 லிட்டர் £4.00-6.00) </p><p style="text-align: justify;">என்னப்பா தங்கம் விலை கொடுக்கவேண்டி இருக்கின்றதே என சலித்துக்கொண்டே ஒரு வேளை கம்பியூட்டர் பிழையாக இருக்குமோ? </p><p style="text-align: justify;">அப்படி என்ன இந்த உணவில் அப்படி ஒரு சிறப்பு என bill-ஐ உற்றுப்பார்க்கும்போதுதான் "சர்வர்" சொன்னது நினைவிற்கு வந்தது அந்த உணவின் பெயர்,<b> "தாலி".</b> </p><p style="text-align: justify;">நன்றி,</p><p style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம்.</p><p style="text-align: justify;">கோ.</p><p style="text-align: justify;"><br /></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-60272882572454129672021-12-31T04:00:00.005-08:002021-12-31T04:00:00.202-08:00பூச்செண்டு கொண்டுவா!!<p style="text-align: center;"><u><b>புன்னகை மொண்டு வா .</b></u></p><p style="text-align: center;">"நலம் கூட்டி வளம் செழிக்க </p><p style="text-align: center;">வரவேண்டும் இப்புத்தாண்டு.</p><p style="text-align: center;">உலவுகின்ற நோய்த்தொற்று </p><p style="text-align: center;">உலககன்று செல்லவேண்டும்.<span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: center;">படுத்தியது போதும் - சோர்ந்து </p><p style="text-align: center;">படுத்ததுவும் போதும் - காலை </p><p style="text-align: center;">புதியதாய் விழிக்கும்போது - இனிய </p><p style="text-align: center;">பூபாளம் கேட்கவேண்டும். </p><p style="text-align: center;"><br /></p><p style="text-align: center;">இரண்டாண்டு நாடகங்கள் </p><p style="text-align: center;">இருட்டினில் கண்ணாமூச்சி </p><p style="text-align: center;">இழுபறி ஆட்டத்தால் - நாங்கள் </p><p style="text-align: center;">இழந்ததவை ஏராளம் - ஆட்டம் </p><p style="text-align: center;">இத்தோடு நிற்கவேண்டும் </p><p style="text-align: center;">இனிவரும் காலமெல்லாம் </p><p style="text-align: center;">இனிமைத்தவிர வேறொன்றும் - இந்த </p><p style="text-align: center;">இகம் காணாதிருக்கவேண்டும்.</p><p style="text-align: center;"><br /></p><p style="text-align: center;">செல்வங்கள் பெருகவேண்டும் - வாழ்வின் </p><p style="text-align: center;">பள்ளங்கள் நிரம்ப வேண்டும் </p><p style="text-align: center;">இல்லாமை கொடுமைகள் முற்றாய் </p><p style="text-align: center;">இல்லாமை ஆகவேண்டும்</p><p style="text-align: center;">செல்வந்தர் சொல்வதெல்லாம் - இங்கே </p><p style="text-align: center;">பிரகடனம் ஆகிடுமோ </p><p style="text-align: center;">சாமானியனும் மகிழும் வண்ணம் - தூய </p><p style="text-align: center;">சட்டங்கள் தோன்றவேண்டும்.</p><p style="text-align: center;"><br /></p><p style="text-align: center;">சாதி மத தரித்திரங்கள் ஒழிந்த </p><p style="text-align: center;">சரித்திரங்கள் தோன்ற வேண்டும்.</p><p style="text-align: center;">கல்லாமை இருந்தபோதும் </p><p style="text-align: center;">காட்டில் குகையில் வாழ்ந்தபோதும் </p><p style="text-align: center;">இல்லாதிருந்த அந்த பேதைமை இழிநிலை </p><p style="text-align: center;">இனியும் இங்கு தங்கிடாமல் </p><p style="text-align: center;">ஆதி மனிதன் கொண்ட அன்பு - மீண்டும் </p><p style="text-align: center;">அப்படியே திரும்பவேண்டும்.</p><p style="text-align: center;"><br /></p><p style="text-align: center;">ஓட்டளித்தவர்க்கு மட்டுமன்றி </p><p style="text-align: center;">ஒட்டுமொத்த குடிகளுக்கும் </p><p style="text-align: center;"> ஒரே நீதி ஒரே ஞாயம் </p><p style="text-align: center;">உலகமெல்லாம் கிடைக்க வேண்டும்.</p><p style="text-align: center;">விவசாயம் பெருகவேண்டும் - வாழ்வு </p><p style="text-align: center;">விவசாயிக்கும் பெருகவேண்டும் - அடிமை </p><p style="text-align: center;">சாசனம் உழைப்பாளியும் - உயர் </p><p style="text-align: center;">ஆசனத்தில் அமரவேண்டும்.</p><p style="text-align: center;"><br /></p><p style="text-align: center;">கடந்த கால கரி நிகழ்வு </p><p style="text-align: center;">கடந்தேதான் போகவேண்டும் - அவை </p><p style="text-align: center;">கடுகளவும் திரும்பிடாமல் - உலகை </p><p style="text-align: center;">கதைவடைத்து காக்கவேண்டும்.</p><p style="text-align: center;">காலனி அணிந்ததினால் </p><p style="text-align: center;">கண்டதில் கால் வைப்போமா ?</p><p style="text-align: center;">கண்பாடி(Gun body ) என்றெண்ணி -தடுப்பு </p><p style="text-align: center;">கவசம் இன்றி நடக்கலாமா?</p><p style="text-align: center;"><br /></p><p style="text-align: center;">நட்புடன் சுற்றத்தாரும் - நம் </p><p style="text-align: center;">நலம் வேண்டும் குடும்பத்தாரும் </p><p style="text-align: center;">உலக மக்கள் யாவரோடும் </p><p style="text-align: center;">உயர்வு தாழ்வு பேதமின்றி </p><p style="text-align: center;">உன்னத மேன்மையோடும் </p><p style="text-align: center;">நலமோடு வளம் வாழ </p><p style="text-align: center;">உளமார வாழ்த்துகிறேன் - உயர் </p><p style="text-align: center;">உறையோனை வேண்டுகிறேன்".</p><p style="text-align: center;"><br /></p><p style="text-align: center;"><b>"களிப்புடன் வா புத்தாண்டே !</b></p><p style="text-align: center;"><b>கனிவோடு வா புத்தாண்டே.!! நன்மை </b></p><p style="text-align: center;"><b>அளித்திட வா புத்தாண்டே!!! - அன்பாய் </b></p><p style="text-align: center;"><b>அணைத்திட வா புத்தாண்டே!!!!.</b></p><p style="text-align: center;"><br /></p><p>அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.</p><p><br /></p><p>நன்றி,</p><p>மீண்டும் ச(சி)ந்திப்போம்.</p><p>கோ.</p><p><br /></p><p>.</p><p><br /></p><p></p><p><br /></p><p><br /></p><p></p><p></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-22023945185814784302021-12-27T10:03:00.004-08:002021-12-27T10:30:01.569-08:00டேக் இட் ஈசி !!<p style="text-align: center;"> <u>ஊர்வசி! </u></p><p style="text-align: left;">நண்பர்களே,</p><p style="text-align: justify;">யாரேனும் இக்கட்டான - நெருக்கடியான வேளைகளில் இருக்கும்போது, அவர்களை பார்ப்பவர்கள், தெரிந்தவர்கள் சொல்லும் ஆறுதலான - பொதுவான-உற்சாகமூட்டும் வார்த்தைகள் "டேக் இட் ஈஸி".<span></span></p><a name='more'></a>அப்படி சொல்லப்படும் அந்த வார்தைகளுக்கு நேரடியான மொழி பெயர்ப்பு அர்த்தம் வேறாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தம், பரவாயில்லை விடு, போகட்டும் விடு, அதையெல்லாம் பெருசா நினைக்காதே, வருத்தப்படாதே... எளிதாக எடுத்துக்கொள் போன்றவையாகத்தான் இருக்கும்.<p></p><p style="text-align: justify;">இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் நம் பலரின் நினைவிற்கு தவறாமல் வருவது ஒரு திரைப்பட பாடல். அந்த பாடலில் எந்த கஷ்டமான சூழலிலும் , ஏமாற்றத்திலும், எதிர்மறை நிகழ்வுகளின்போது. சோர்ந்துபோகாமல் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தவேண்டும் எனும் பொருள்படும்படி, அந்த பாடலில் பல சூழல்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். </p><p style="text-align: justify;">உதாரணத்திற்கு:</p><p style="text-align: justify;">ஒளியும் ஒலியும் வரும் நேரம் பார்த்து மின்சார தடை ஏற்பட்டால் வருத்தப்படவேண்டாம், டேக் இட் ஈஸி.</p><p style="text-align: justify;">ஒழுங்காக படித்தும் தேர்வில் தோற்றுபோனாலும் டேக் இட் ஈஸி.</p><p style="text-align: justify;">தண்ட சோறு என்று அப்பன் சொன்னால் டேக் இட் ஈஸி.</p><p style="text-align: justify;">பயணத்தின்போது பக்கத்து சீட்டில் பாட்டி உட்கார்ந்தால் டேக் இட் ஈஸி.</p><p style="text-align: justify;">இந்த வரிசையில் , பண்டிகை தேதி ஞாயிற்று கிழமை வந்தால் (ஒரு நாள் அரசு விடுமுறை போய்விட்டதே என எண்ணி வருத்தப்படமால்) டேக் இட் ஈஸி என்று தொடரும்.</p><p style="text-align: justify;">ஆமாம், அரசு விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் வந்துவிட்டால் யார்தான் வருத்தப்படமாட்டார்கள் ? அதை எப்படி ஈசியாக எடுத்துக்கொள்ள முடியும்?</p><p style="text-align: justify;">இந்த பாடல் இந்திய - தமிழக கலாச்சார பண்பாட்டு சூழலில் எழுதப்பட்ட பாடல் அது உலகின் அனைத்த்து நாடுகளின் நடைமுறை வாழ்வியலோடு ஒத்து போகுமா என்றால், இல்லை என்று தான் சொல்லவேண்டும்.</p><p style="text-align: justify;">ஏனெனில் இங்கு(இங்கிலாந்தில்) திடீர் கரண்ட் கட் என்பது அபூர்வமே, விருப்பமான எந்த தொலைக்காட்சி நிகழ்சியையும் தடை இன்றி பார்த்து மகிழலாம்.</p><p style="text-align: justify;">பக்கத்து சீட்டில் யார் அமர்ந்தாலும் அதை பற்றி யாரும் இங்கு கவலை படுவதில்லை, பயண தூரம் கொஞ்சம்தான் மேலும் அவரவர் தமது கைகளிலுள்ள புத்தகத்தில் கண் பதித்தருப்பதாலும் காதுகளில் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிவாங்கி மூலம் தமது விருப்ப பாடல்களை கேட்டு ரசித்துக்கொண்டிருப்பதாலும் அருகில் யார் அமர்ந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.</p><p style="text-align: justify;">நன்றாக படித்தும் தேர்ச்சிபெறவில்லை என்றாலும் பெரிதாக யாரும் வருத்தப்படுவதில்லை, அடுத்து வரும் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றுவிடமுடியும் என்ற நம்பிக்கை பலமாக இருப்பதால்.</p><p style="text-align: justify;">தண்ட சோறு என்று எந்த தகப்பனும் தன் பிள்ளைகளை சொல்வதில், ஏனெனில் படிக்கும்போதே பகுதி நேர வேலைக்கு போய் பிள்ளைகள் தங்கள் செலவுக்கு தாங்களே சம்பாதித்து கொள்வதால்.</p><p style="text-align: justify;">மேற்சொன்னவைகூட சாதாரணம்தான் எங்கும் நிகழலாம் , ஆனால்......</p><p style="text-align: justify;">எல்லாவற்றிற்கும் மேலாக அரசு விடுமுறை நாட்கள் (பண்டிகை தேதி) SUNDAY அன்று வந்துவிட்டால் இங்கே யாரும் கொஞ்சம் கூட வருத்தப்படுவதே இல்லை, மாறாக அதை மிகவும் மகிழ்சியுடன் வரவேற்பார்கள்.</p><p style="text-align: justify;"> ஆச்சரியம்!!!!!.... ஆனால் அதுதான் உண்மை.</p><p style="text-align: justify;">அதெப்படி? மேலை நாட்டினர் அந்தளவிற்கு பரந்த மனப்பான்மையும் தியாக உள்ளமும், கடமை உணர்வும் கொண்டவர்களா? </p><p style="text-align: justify;">அது எனக்கு தெரியாது.</p><p style="text-align: justify;">ஆனால் பண்டிகை நாட்கள் சனி ஞாயிறுகளில் வந்தால் அதை பற்றி துளியும் வருத்தப்படமாட்டார்கள் மாறாக மிகவும் சந்தோஷப்படுவார்கள், இரட்டிப்பு மகிழ்ச்சியும் அடைவார்கள்.</p><p style="text-align: justify;">அதெப்படி இரட்டிப்பு மகிழ்சி?</p><p style="text-align: justify;">அதாவது இங்கே(இங்கிலாந்தில்) வார இறுதி விடுமுறை(weekend)நாட்கள் பெரும்பான்மையான உலக நாடுகளைப்போல சனிக்கிழமையும் ஞாயிற்று கிழமையும் தான்.</p><p style="text-align: justify;">அந்த சனி ஞாயிறுகளில் அரசு விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் அதற்கு அடுத்து வருகிற வேலை நாள் அதாவது திங்கட்கிழமை அரசு விடுமுறை. என்பது எழுதப்பட்ட விதிமுறை.</p><p style="text-align: justify;">இங்கிலாந்தில் வருடத்திற்கு எட்டு நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் , இந்த விடுமுறை நாட்கள் சனி ஞாயிறுகளில் வந்துவிட்டால் , சனி ஞாயிறுகளை கணக்கில் கொள்ளாமல் அடுத்துவருகிற வார நாளை விடுமுறையாக அறிவித்துவிடுவார்கள்.</p><p style="text-align: justify;">உதாரணத்திற்கு:</p><p style="text-align: justify;">எந்த ஆண்டாக இருந்தாலும் ஈஸ்டர் என்பது ஞாயிற்று கிழமைதான் என்பது உலகம் அறிந்த ஒன்று , எனினும் அதற்கு அடுத்தநாள் ஈஸ்டர் Monday என்ற பெயரில் அரசு விடுமுறை அளிக்கின்றது. அதாவது Good Friday என்று சொல்லப்படும் புனித வெள்ளி அன்று அரசு விடுமுறை அதற்கடுத்து வரும் சனிக்கிழமை வார இறுதி விடுமுறை, அதை தொடர்ந்துவரும் ஞாயிற்றுக்கிழமை(Easter Sunday) வார இறுதி விடுமுறை.</p><p style="text-align: justify;">அதே சமயத்தில் இந்த ஈங்ஸ்டர் தினம் ஞாயிறாக இருப்பதால் அதற்கடுத்த திங்கட்கிழமை அரசு விடுமுறை; அப்படி பார்த்தால் வெள்ளி சனி ஞாயிறு திங்கள் என தொடர்ந்து நான்கு நாட்களை விடுமுறையாக அனுபவிப்பதால் இங்கே பண்டிகை தேதி Sunday வந்தாலோ Saturday வந்தாலோ யாரும் கவலைப்படுவதில்லை மாறாக இரட்டிப்பு மகிழ்ச்சிதான் - டேக் இட் ஈஸி பாலிசிதான்.</p><p style="text-align: justify;">அதேபோல இந்த ஆண்டு(2021) Christmas தினமும் அதற்கடுத்த Boxing day வும் சனி மற்றும் ஞாயிறுகளில் வந்ததால் அதற்கடுத்த இரண்டு வார நாட்களாகிய திங்கட்கிழமையும் செவ்வாய் கிழமையும் அரசு விடுமுறை.</p><p style="text-align: justify;">இப்படி சேர்ந்தாற்போல் போல் நன்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இரட்டிப்பு மகிழ்சிதான்.</p><p style="text-align: justify;">இதேபோல வருகிற 2022 புத்தாண்டுதினம் வார இறுதி சனிக்கிழமை வருவதால் , அடுத்துவரும் ஞாயிறும் அதை தொடர்ந்துவரும் திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாகிவிடுவதால் சேர்ந்தாற்போல மூன்று தினங்கள் விடுமுறை கிடைக்க பெறுவார்கள்.</p><p style="text-align: justify;">எனவே பட்டியலிடப்பட்ட விடுமுறை நாட்கள் சனிக்கிழமை வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலும் இங்கே டேக் ஈஸி பாலிசிதான்.</p><p style="text-align: justify;">இப்போ சொல்லுங்க, Christmas விடுமுறையாக சேர்ந்தாற்போன்று நான்கு நாட்கள் அனுபவித்துவிட்டு அடுத்துவரும் புத்தாண்டு விடுமுறையான தொடர் மூன்று நாட்களை எதிர்நோக்கி காத்திருக்கும் இங்குள்ளோர் விடுமுறை நாட்கள் எந்த கிழமை வந்தாலும் மனப்பூர்வமாக டேக் இட் ஈஸியாகத்தானே கருதுவார்கள்.</p><p style="text-align: justify;">இதில் என்னைப்போன்று மேலும் சிலர் தங்களின் செலவிடப்படாத விடுமுறை(AL) நாட்களில் சில நாட்களை சேர்த்து டிசம்பர் 23ஆம் தேதியில் இருந்து ஜனவரி 3 ஆம் தேதிவரை சுமார் 12 நாட்கள் தொடர் ஓய்வில் இருந்துவிட்டு ஜனவரி 4 ஆம் தேதிதான் வேலைக்கு திரும்புவர்..... எத்தனை ஆனந்தம்.?</p><p style="text-align: justify;">இதுபோன்ற நடைமுறை வேறு எங்கேனும் இருந்தால் தெரிவியுங்கள்.</p><p style="text-align: justify;">நண்பர்களே,</p><p style="text-align: justify;">மேற்சொன்ன விஷயங்கள் மட்டுமின்றி வாழ்வில் எந்த சூழலிலும் மனம் சோர்வடையாமல் டேக் இட் ஈஸி யாக எடுத்துக்கொண்டு வாழ்வை தொடரும்போது எதுவும் நம்மை நிலைகுலைய செய்வதில்லை என்பது உறுதி.</p><p style="text-align: justify;">அனைவருக்கும் வர இருக்கும் 2022 புத்தாண்டு வாழ்த்துக்களுடன், இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.</p><p style="text-align: justify;">WISH YOU ALL A HAPPY NEW YEAR 2022!!</p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://lh3.googleusercontent.com/-d3IMNBBbiDY/YcoFUgzka2I/AAAAAAAAAKY/d79RmpSrZk0-lEi8YTbj76eK0crx6FeoQCNcBGAsYHQ/image.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="183" data-original-width="275" height="213" src="https://lh3.googleusercontent.com/-d3IMNBBbiDY/YcoFUgzka2I/AAAAAAAAAKY/d79RmpSrZk0-lEi8YTbj76eK0crx6FeoQCNcBGAsYHQ/image.png" width="320" /></a></div><br />நன்றி,<p></p><p style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம்.</p><p style="text-align: justify;">கோ. </p><p style="text-align: justify;"><br /></p><p></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82781661591599442742021-12-21T08:52:00.002-08:002021-12-22T02:00:32.490-08:00நிறம் மாறும் வெள்ளை மழை!<p style="text-align: center;"><u>கண்ணாமூச்சு!!</u></p><p style="text-align: justify;">நண்பர்களே,</p><p style="text-align: justify;">சாதாரணமாக எல்லோராலும் பார்த்து இயல்பாக அர்த்தப்படுத்தி புரிந்துகொள்ளும் விடயங்களை கற்பனை ஊற்று பெருக்கெடுக்கும் கவிஞர்கள், வேறு கோணத்தில் பார்த்து பொருத்தமான உவமைகளால் வெளிப்படுத்துவர்.<span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">உதாரணத்திற்கு, ரோஜா என்ற திரைப்படத்தில், பனிபிரதேசத்தில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில் நிகழும் பனிப்பொழிவை, " ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது" என்று பனி பொழிவை வெள்ளை நிற மழைபொழிவாக உருவகப்படுத்தி அந்த பாடலின் ஆசிரியர் எழுதி இருப்பார். ஏற்கத்தக்க உவமையாகவே அந்த காட்சியோடு பொருந்திப்போகிறது அவரின் கற்பனை.</p><p style="text-align: justify;">வானிலிருந்து பொழிகிறது மழைபோல, அதே சமயத்தில் நீராக இல்லை என்றாலும் தொடர்ந்து பொழிவதாலும் அது வெள்ளை நிறத்தில் இருப்பதாலும் அதை வெள்ளை மழை என்று உருவக படுத்துவது ஏற்புடையதே.</p><p style="text-align: justify;">பனி, மலை மீது பொழிந்தாலும் மரம் மீது பொழிந்தாலும் , வீட்டின் கூரை மீது பொழிந்தாலும் , வாகனத்தின் மீது பொழிந்தாலும், சாலையில் பொழிந்தாலும் வெள்ளையாகத்தான் இருக்கும். சீதோஷண, தட்பவெட்பத்தை பொறுத்து உருகும் வரை அப்படியே உறைந்த நிலையில் இருந்தாலும் வெள்ளையாகத்தான் இருக்கும்.</p><p style="text-align: justify;">அப்படி பொழிந்து உறைந்து இருக்கும் பனியை கருப்பு பனி என்று குளிர் பிரதேசத்து நாடுகளில் இருக்கும் மக்கள் வெகுவாக சொல்வதை முதன் முதலில் கேட்டபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் சொல்பவர்கள் அனைவரும் கவிஞர்களா என்று பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை.</p><p style="text-align: justify;">பிறகு எதனால் அப்படி சொல்கிறார்கள் அது எப்படி இருக்கும்?</p><p style="text-align: justify;">அதிலும் அந்த கருப்பு பனியை கண்களால் பார்க்கவும் முடியாதாம், அந்த கருப்பு பனி அதிக ஆபத்தானதும் பல வேளைகளில் கைகள் கால்கள், தலை இடுப்பு போன்ற உடலுறுப்புகள் உடைந்துபோகவும் சில வேளைகளில் உயிருக்குக்கூட ஆபத்தை விளைவிப்பதாகவும் இருக்குமாம். </p><p style="text-align: justify;">வினோதமாக இருந்தது கேட்பதற்கு, பிறகு பனி பெய்து ஓய்ந்திருந்த சாலை ஓரங்களில் - நடை பாதைகளில் நடக்கும்போதும் சாலையில் வாகனத்தில் பயணிக்கும்போதும் அனுபவத்தால் அறியவந்தது அது உண்மைதான் என்று.</p><p style="text-align: justify;">பனி இறுகி ஐஸ் போல கெட்டியாக மாறி சாலைகளில் படர்ந்திருக்கும் போது தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் , நடை பாதைகளின் நிறத்தோடு இரண்டற கலந்து , அப்படி ஒரு கூடுதல் படிவம் அந்த சாலையில் இருப்பதாகவே தெரியாது.</p><p style="text-align: justify;">அப்படி இருக்கும் அந்த சாலையில் நடக்கும் போதும் வாகனத்தில் பயணிக்கும் போதும் கடுமையான எச்சரிக்கையோடும் கூடுதல் நிதானத்தோடும் பயணிக்க வேண்டும். </p><p style="text-align: justify;">பலவேளைகளில் இந்த சாலையில் இருக்காது என்றெண்ணி அதில் பயணப்பட்டு வழுக்கி விழுந்தும் வாகன கட்டுப்பாட்டை இழந்தும் காயம் அடைந்தவர்கள் / அடைபவர்கள் ஏராளம்.</p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://lh3.googleusercontent.com/-A_7msU8zOmA/YcIAV_u-4fI/AAAAAAAAAKQ/KJS63uOEo6wuCw5ezRPa7izuTJjR__-kgCNcBGAsYHQ/image.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="189" data-original-width="267" height="227" src="https://lh3.googleusercontent.com/-A_7msU8zOmA/YcIAV_u-4fI/AAAAAAAAAKQ/KJS63uOEo6wuCw5ezRPa7izuTJjR__-kgCNcBGAsYHQ/image.png" width="320" /></a></div><br />சரி இது பனிக்காலத்தில் ஏற்படுவது , எனவே இதுபோன்ற காலங்களில் சாலை பயணத்தின்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து நடந்துகொள்ளலாம். சில இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் இருக்கலாம்.<p></p><p style="text-align: justify;">ஆனால் வாழ்க்கை பயணத்தின்போது நமக்கு முன்னால் என்ன இருக்கின்றது, பின்னால் எது தொடர்கின்றது, எங்கே அடி எடுத்து வைப்பது, நாளை என்ன நடக்கப்போகிறது என்று யூகிப்பதோ, உணர்ந்துகொள்வதோ பெரும்பாலும் முடியாததாகவே போகிறது இந்த கறுப்பு பனியின் கண்ணாமூச்சு போல. </p><p style="text-align: justify;">வெள்ளை பனி சறுக்கு போன்ற கண்ணுக்கு தெரிந்த குதூகலங்கள் குறைவின்றி இருந்தாலும், கருப்பு பனி(Black Ice) போன்ற கண்ணுக்கு தெரியாத - யூகிக்க முடியாத வழுக்கல்கள், சறுக்கல்கள், பின்னடைவுகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளால் வெளி உலக தொடர்பை தற்காலிகமாக தள்ளிவைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டவர்கள் / தள்ளப்படுபவர்கள் நம் மத்தியில் வாழ்ந் துக்கொண்டுதான் இருக்கின்றனர்.</p><p style="text-align: justify;">நாளை நடப்பது என்னவென்று தெரியாத புதிர் நிறைந்த இந்த பூவுல வாழ்க்கைபயணத்தை மேற்கொள்ள நம்மை மீறிய ஒரு சக்தி துணை நின்று நம்மை இயக்குகின்றது என்று ஆணித்தரமாக அறிய தோன்றுகின்றது.</p><p style="text-align: justify;">என்னதான் எச்சரிக்கை உணர்வு மேலோங்கி இருந்தாலும் மேலுள்ளவனின் கைப்பாவைகளே நாம் எனும் புரிதலும் உணர்வும் நம் மனதில் உறுதியாக மேலோங்கி இருக்கும் வரை சறுக்கல்கள் வந்தாலும் தடம் பிறழாமல் தாங்கிப்பிடிக்கும் ஊன்றுகோலாகிய இறை நம்பிக்கை /இயற்கை நம்பிக்கை நம் பாதம் எதிர்மறை எனும் கல்லில் இடராதபடி நம் பாதைக்கு வெளிச்சம் வீசி நம்மை வழி நடத்தும் என்ற நம்பிக்கையோடு வரும் புத்தாண்டில் நடை தொடர்வோம்.</p><p style="text-align: justify;">"I DO NOT KNOW WHAT TOMORROW HOLDS , BUT I DO KNOW WHO HOLD TOMORROW" </p><p style="text-align: justify;">சமயம் வாய்க்கும் என நம்புகிறேன் உங்களை மீண்டும் பதிவுகளின் மூலம் சந்திக்க.</p><p style="text-align: justify;">நன்றி,</p><p style="text-align: justify;">அனைவருக்கும் ப(னி)ணிவான வணக்கங்கள்.</p><p style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம்.</p><p style="text-align: justify;">கோ.</p><p style="text-align: justify;"> </p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-60723274645500615252021-06-10T08:06:00.000-07:002021-06-10T08:06:21.372-07:00முதல்வர்!<p style="text-align: center;"><u><span style="text-align: left;"><b>உழைப்பாளி!</b></span> </u></p><p style="text-align: justify;">நண்பர்களே, </p><p style="text-align: justify;"><b>அவர்</b> ஒரு கடின உழைப்பாளி, எளிமையானவர், கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பவர், ஏற்ற தாழ்வு பாராமல் எல்லோரிடத்திலும் அன்பு கொண்டவர்.<span></span></p><a name='more'></a>ஊரில் பெரிய தலைக்கட்டு எனும் அந்தஸ்துடன் இருந்தாலும் விவசாயமே அவர்களது குடும்ப ஆதாரம் - அடையாளம்..<p></p><p style="text-align: justify;">பல நூறு ஏக்கர் விளை நிலங்கள், தென்னை ,மாந்தோப்புகள், வாழை தோட்டங்கள், தொழிலாளிகள் என்று பலரும் இவர்களின் சேவைக்காய் அமர்த்தப்பட்டிருந்தாலும் இவரின் தந்தையார் தாம் பெற்ற அனைத்து பிள்ளைகளையும் நிலத்தில் இறங்கி பாடுபட்டு உழைக்கவும் பயிற்றுவித்திருந்தார்.</p><p style="text-align: justify;">நாற்று நடும் சமயங்களிலும், அறுவடை செய்யும் நேரங்களிலும், தோட்டங்களை இரவு வேளைகளில் காவல் புரியும் நேரங்களிலும்கூட யார் வேலை ஆட்கள் யார் உரிமையாளர்கள் என்று பாகுபடுத்தி பார்க்க இயலாதபடி , அனைவரும் களத்தில் இறங்கி வேலை செய்துவந்தனர்.</p><p style="text-align: justify;">களத்து மேட்டிற்கு நெற்கதிர் கட்டுகளை சுமந்து வருவதிலிருந்து உழவு மாடுகளையும் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் பசுமாடுகளை தொழுவத்தில் கட்டுவது - பராமரிப்பது பால் கறந்து சொசைட்டிக்கு எடுத்து செல்வது, மேட்டு பகுதியிலிருக்கும் மாங்காய் தோப்பில் புதிதாய் வைத்திருக்கும் மாங்கன்றுகளுக்கு மாட்டு வண்டியில் நீர் எடுத்து சென்று ஊற்றுவது வரையிலும் தமது குடும்ப மக்களையும் ஈடுபடுத்திவந்தார் குடும்ப தலைவர்.</p><p style="text-align: justify;">அந்த குடும்பத்தலைவர் அவரை சார்ந்த மூன்று தம்பிகள் மற்றும் தங்கைகளின் பெருங்குடும்பங்களுக்கும் அவரே தலைவராக எல்லோராலும் ஏகோபித்து மகுடம் சூட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வந்தவர்.</p><p style="text-align: justify;">இப்படி நிலம் உழவு, பயிர்,வேளாண்மை என்றிருந்தாலும் தம் மக்களை ஓரளவு சிறப்பாக அடிப்படை கல்வி பயிலவும் செய்திருந்தார் <b>இவரின்</b> தந்தையார்.</p><p style="text-align: justify;">நான்கு வயது நிரம்பி இருந்த <b>இவரை</b> கொஞ்சம் தொலைவிலுள்ள ஒரு ஆங்கில தொடக்க பள்ளியில் சேர்த்து பயில செய்தார்.</p><p style="text-align: justify;">மகன் மிடுக்குடன் பள்ளி சீருடை, டை , ஷூ, பேட்ஜ் என அணிந்து செல்வதையும் பள்ளியின் வேனில் ஏறி இறங்கி பவனி வருவதையும் கண்டு பூரிப்படைந்தார்.</p><p style="text-align: justify;">படிப்படியாக தொடக்க பள்ளி கல்வி முடிந்து உயர் நிலை ,மேல் நிலை வகுப்புகளுக்காக தூரத்திலுள்ள டவுனுக்கு சென்று படிக்க வேண்டிய சூழலில் அத்தனை தூரம் அனுப்ப வேண்டுமா என அக்கம் பக்கத்தவர் சொல்வதோடு நிறுத்தாமல், உங்களுக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி நம்ம ஊரிலேயே ஒரு உயர் பள்ளிக்கூடம் கொண்டுவந்தால் சுற்றுப்புறத்து மக்களுக்கும் பயன்படுமே என கூற வேறு சிலரோ, வேண்டாம் வேண்டாம் பள்ளிக்கூடம் வந்துவிட்டால் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய்விட்டால் எங்கள் ஜீவனம் -பிழைப்பு எப்படி ஆகும்?</p><p style="text-align: justify;">பெரியவர் யோசித்தார். நம் பிள்ளைகள் உள்ளூரிலேயே படிக்கவேண்டும் என்பதற்காக உள்ளூரிலேயே பள்ளி என்பது சரி அல்ல.</p><p style="text-align: justify;">மேலும் கிராமத்தில் வளர்ந்த பிள்ளைகள் தூரத்திலுள்ள பெரிய டவுன்களுக்கு சென்று படித்தால்தான் நாட்டு நடப்பின் - நான்கு விஷயங்களை கற்க முடியும் மேலும் தைரியத்தையும் வளர்த்துக்கொள்ளமுடியும் எனவே தூரத்து டவுனுக்கு சென்று வர வசதியாக , தமது நற்பெயரை பயன்படுத்தி, பள்ளி சென்று வரும் நேரங்களில் தடை இன்றி பயணிக்கும்படி சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தி இருந்தார்.</p><p style="text-align: justify;">இதனால் விருப்பமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும் தூரத்து டவுனுக்கு அனுப்பி படிக்க வைத்தனர்.</p><p style="text-align: justify;"><b>இவரும்</b> நன்றாக படித்ததோடு, காலை, மாலை, விடுமுறை நாட்களில் தமது பெற்றோருக்கு உறுதுணையாக. செங்கல் சூளை, வயல், தோப்புகளில் ஒத்தாசையாக இருந்தார்.</p><p style="text-align: justify;">பள்ளி மேல் நிலை வகுப்பிலும் தேர்ச்சி பெற்றார்.</p><p style="text-align: justify;">இதனிடையில் பெரியவருக்கு வயதாகிக்கொண்டிருந்தது.</p><p style="text-align: justify;">சரி படித்தது போதும் இதற்குமேல் பிள்ளைகள் நிலங்களை நிர்வாகித்து, தோப்பு துறவுகளை கவனித்துக்கொண்டும், செங்கல் சூளைகளை பார்த்துகொண்டும் பிழைத்துக்கொள்ளட்டும் என முடிவெடுத்தார் பெரியவர்.</p><p style="text-align: justify;">இதற்கிடையில் அரசு அனுமதியுடன் கள்ளுக்கடைகள் மாநிலமெங்கும் வியாபிக்க தொடங்கி இருந்தது.</p><p style="text-align: justify;">அதன்மீது அத்தனை ஈடுபாடு இல்லை என்றாலும் ஊர் தலைக்கட்டு எனும் விதத்தில் வலிய வந்து இவரிடம் சில கடைகளுக்கான உரிமம் திணிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;">சரி , ஆயிரம் தென்னை மரங்களுக்கு மேல் உள்ள தமதுதோப்பிலிருந்து சுமார் நானூறு மரங்களை கள்ளுக்காகவும் மீதமுள்ள மரங்களையும் நிலங்களையும் விவசாயத்திற்காக பயன்படுத்தினாலும் நம்மிடம் வேலை செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாது என்று எண்ணி அந்த கடைகளை நடத்த முடிவு செய்தார்.</p><p style="text-align: justify;">பதினேழு வயதே நிரம்பிய தன் மகனை இனி இந்த இரண்டு கடைகளையும் நீயும் உன் அண்ணனும்தான் நிர்வகிக்க வேண்டும் என கூற படிப்பில் ஆர்வம் கொண்ட நம் கதையின் <b>கதா நாயகன்</b> அதிர்ச்சியுற்றார்.</p><p style="text-align: justify;">அப்பாவிடம் எதிர்த்து பேசி பழக்கமில்லை அதே சமயத்தில் தமக்கு விருப்பமானதை விட்டுக்கொடுக்கவும் மனதில்லை.</p><p style="text-align: justify;">இரவு உணவிற்கு பிறகு அடுத்த நாள் காலை உணவிற்காக ஊற வைத்த அரிசியை அரைத்துக்கொண்டிருந்த தன் அம்மாவின் அருகில் சென்று அமர்ந்து சன்னமான குரலும் சந்தடி இல்லாமல் சிந்திய கண்ணீருமாக தனது விருப்பத்தை சொல்கிறார். </p><p style="text-align: justify;">சரி நான் சொல்லிப்பார்க்கிறேன் நீ போய் தூங்கு.</p><p style="text-align: justify;">வழக்கமாக காலையில் ஒலிக்கும் சுப்ரபாதத்தின் சுலோகங்கள் மட்டுமல்ல குரலும் சுருதி பிறழ்ந்து கேட்டது இவருக்கு. விழித்து கண்களை கசக்கிக்கொண்டு பார்த்தவருக்கு, அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்ததும் அதில் அப்பாவின் குரல் ஓங்கி ஒலிப்பதையும் கேட்டு பயத்தில் நடுங்கிப்போனார்.</p><p style="text-align: justify;">எதற்காக இந்த வாக்குவாதம் ? கூர்ந்து கவனித்தவருக்கு புரிந்தது அது நமது விவகாரத்தின் விபரீதமென்று. பயந்துபோனவர் கதவிற்கு பின்னால் மறைந்துகொண்டு பெற்றோரின் வாக்குவாதத்தை செவி குவித்து கேட்ட்க ஆரம்பித்தார்.</p><p style="text-align: justify;">எல்லாவற்றையும் நானே நிர்வகிக்க முடியாது, பிள்ளைகள் இருப்பதால்தான் இந்த புதிய வியாபாரத்திற்கு ஒப்புக்கொண்டேன் இப்போது இவன் கல்லூரிக்கு போய்விட்டால்...... ? </p><p style="text-align: justify;">காலை எட்டு மணிக்கு கள் கேன்களை கடைக்கு எடுத்து செல்லவேண்டும் , மீண்டும் காலி கேன்களை திரும்ப கொண்டு வந்து நிரப்பி இரண்டு மணிக்கு திருப்பி கொண்டு சேர்த்துவிட்டு நான்கு மணிக்கு வீட்டிற்கு வரவேண்டும் , பின்னர் கேன்களை கழுவி சுத்தம் செய்து அடுத்த நாள் காலை நிரப்ப தயார் படுத்தி வைக்கவேண்டும் , இதற்கு நாளின் பகல் நேரம் முழுமையும் சரியாக இருக்கும் இதில் எப்படி அவன் கல்லூரிக்கு போக முடியும்?</p><p style="text-align: justify;">பெற்றோரின் வாக்குவாதம் விரிந்துகொண்டே இருக்க இவரின் சிந்தனையும் விரிந்துகொண்டே போனதன் விளைவாக, அப்பாவிற்கும் வருத்தம் அளிக்காமல் அதே சமயத்தில் நம் படிப்பும் பாதிக்காதபடி மாலை கல்லூரிக்கு சென்று படித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, தைரியமாக பெற்றோரிடம் தமது எண்ணத்தை சொல்லிவிட்டார்.</p><p style="text-align: justify;">அம்மாவிற்கு ஒருபுறம் வருத்தம் மறுபுறம் இப்படி ஒரு வாய்ப்பிருந்தால் பயன்படுத்தி அவன் விருப்பப்படி படித்து கொள்ளட்டுமே என நினைத்து மகிழ்ந்தார்கள்.</p><p style="text-align: justify;">அப்பா அதற்கு ஒப்புக்கொண்டதினால் <b>இவரும்</b> மகிழ்ந்தார்.</p><p style="text-align: justify;">மாலை கல்லூரி வகுப்புகள் மாலை 7 மணிக்கு ஆரம்பித்து 10 வரை வகுப்புகள் நடக்கும். மாலை தன் வீட்டிலிருந்து 2 மணி நேரம் பேருந்து மூலம் மத்திய பேருந்து நிலையம் அங்கிருந்து டவுன் பஸ் பிடித்துஅரை மணி நேரம் பயணித்து கல்லூரிக்கு போகவேண்டும்.</p><p style="text-align: justify;">மீண்டும் கல்லூரியில் இருந்து பேருந்து மூலம் மத்திய பேருந்து நிலையம் வந்து அவரது கிராமத்திற்கு போகும் கடைசி பேருந்து பிடித்து வீட்டிற்கு வர வேண்டும் . அப்படி வீட்டை அடைவதற்கு நள்ளிரவு பனிரெண்டை தாண்டிவிடும்.</p><p style="text-align: justify;">அதன் பிறகு அன்றைக்கு கற்ற பாடங்களை அசைபோட்டபடி களைப்பு நீங்க சில மணி நேரம் உறங்க வேண்டும், மீண்டும் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து அன்றைய கடமைகளை செய்யவேண்டும் , மாலை மீண்டும் கல்லூரிக்கு செல்லவேண்டும். இப்படி மூன்றாண்டுகள் அவர் பட்ட பாடுகள் அத்தனையையும் அவர் கல்வியின் பாலுள்ள தீராத மோகத்தால் மகிழ்வுடன் அனுபவித்தார், தான் விரும்பியபடி இளங்கலை பட்டமும் பெற்றார்.</p><p style="text-align: justify;">அத்தோடு நிற்காமல் தபால் மூலம் சென்னை பல்கலை கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.</p><p style="text-align: justify;">செல்வந்தரின் மகனாகவும் , வேலையாட்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரிடம் எனக்கு பிடித்த பல பண்புகளில் சில:</p><p style="text-align: justify;">எளிமை, நேர்மை, கடின உழைப்பு, தர்ம சிந்தை , கல்வியின்பால் அவருக்கிருந்த காதல் , ஏறக்குறைய அவர் பிறந்த கிராமத்தின் பெரும்பாலான வீடுகளுக்கு படி அளக்கும் குடும்பத்து பிள்ளையாக இருந்தாலும், விவசாயத்தின் மேன்மையை முற்றும் உணர்ந்ததின் விளைவாக ஒரே ஒரு சோற்றுப்பருக்கையைக்கூட வீணாக்காமல் தேவையான அளவிற்கு மட்டுமே சாப்பிடுவது, உடுக்கை இழந்தவன் கைபோல நண்பர்களின் இடுக்கண்களின்போது உதவுவதில் <b>முதல்வராக</b> திகழும் பண்பு அவரின் நற்குண மகுடத்தின் ரத்தினங்கள்.</p><p style="text-align: justify;">பெற்றோரின் பெருஞ்செல்வத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட தனது முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளாமல், தன்னுடைய சொந்த முயற்சியால் பல தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் தொழிலதிபராக வெற்றி கொடி நாட்டிவரும் இவரின் தெய்வ நம்பிக்கையும் பக்தி பாடல்கள் பாடி பக்கதர்களை நல்வழிப்படுத்தும் ஆன்மீக சேவைகளும் போற்றுதலுக்குரியது.</p><p style="text-align: justify;">இப்படியாக கடின உழைப்பின் மறு உருவமாக திகழும் இந்த சிறந்த மனிதர் என் நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் உள்ளபடியே கர்வம் கொள்கிறேன்.</p><p style="text-align: justify;">இவரோடு படித்து இன்றைக்கு உலகமெல்லாம் வியாபித்திருக்கும் அனைத்து நண்பர்களையும் WhatsApp எனும் ஒற்றை நூலில் ஒருங்கிணைத்து நட்பு பாலத்தை இறுக்கி கட்டியதில் மட்டும் முதல்வராய் இல்லாமல் எங்கள் தோழமைகளுள் திருமணம் ஆன <b>முதல்வரும்</b> இவரே.</p><p style="text-align: justify;">உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கடுஞ்சொல் பேசாமல், இனிமையாக பேசி இடைபடும் இடறல்களை எளிமையாக எதார்த்தமாக தீர்த்து வைப்பவர். </p><p style="text-align: justify;">அழகான குடும்பம், மகன் - மகள் மருமக்கள் பேர பிள்ளைகள் என ஐந்தாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்துவரும் இவரின் நேற்றைய தொலைபேசி அழைப்பும் அவரோடு அளவளாவிய மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் அவரை குறித்த இந்த ஞாபக பதிவு வெளிபடுகிறது. </p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://lh3.googleusercontent.com/-X__U0iPiF7s/YMIp6-nZstI/AAAAAAAAAI8/yHg5LN5vdG0qzBFP1ONfo4Y5HD06gAh8wCLcBGAsYHQ/image.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="219" data-original-width="230" height="240" src="https://lh3.googleusercontent.com/-X__U0iPiF7s/YMIp6-nZstI/AAAAAAAAAI8/yHg5LN5vdG0qzBFP1ONfo4Y5HD06gAh8wCLcBGAsYHQ/image.png" width="252" /></a></div><br /><b>இவரை</b> நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இதே ஈரம் காயாத நட்புடனும் வாழ வாழ்த்தியும் இறையருள் பூரணமாய் இவர் மீது பொழிய வேண்டியும் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.<p></p><p style="text-align: justify;">நன்றி.</p><p style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம் </p><p style="text-align: justify;">கோ</p><p style="text-align: justify;"><br /></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26544426614928607392021-06-08T08:02:00.002-07:002021-06-09T00:54:36.292-07:00இதய கீதம்!!<p style="text-align: center;"><span style="background-color: white; white-space: pre-wrap;"><u>நெஞ்சம் மறப்பதில்லை</u>.</span></p><p style="text-align: justify;"><span style="background-color: white; white-space: pre-wrap;">நண்பர்களே,</span></p><p style="text-align: justify;">பொதுவாக பேசும்போதும் எழுதும்போதும் நெஞ்சம், மனம், இதயம் என்பவை ஒரே விஷயத்தை குறிப்பதாகவே நடைமுறை வழக்கப்படுத்தியுள்ளது.<span></span></p><a name='more'></a><p></p><p style="text-align: justify;">என் மனசு யாருக்கு தெரியும், என் நெஞ்சின் வேதனை யாருக்கு புரியும், என் இதயத்தின் குரலை/ குமுறலை என்னை அன்றி யார் அறிவர்?</p><p style="text-align: justify;">அல்லது அவர் மனம் என்ன பாடுபடுமோ, அதை கேட்டவுடன் என் நெஞ்சிக்குள்ளே பெருக்கெடுத்த மகிழ்ச்சியை என்ன சொல்ல? அதை அப்படியே என் இதயத்தில் வைத்து பத்திரப்படுத்தி மகிழ்கிறேன் .... இது போன்ற பேச்சுக்களை கேட்டிருப்போம்.</p><p style="text-align: justify;">இவை அத்தனையும் எதையோ ஒன்றை குறித்து சொல்கிறது அதுவும் அந்த ஒன்றை பற்றியே சொல்கிறது என்பது புலப்படுகிறது.</p><p style="text-align: justify;">பொதுவாக எல்லா உயிரினங்களின் உடற்கூறுகளின் ஒரு முக்கிய அங்கமாக காணப்படும் ஒரு உன்னத உறுப்பிற்கு "இதயம்" என்ற பெயரிடப்பட்டும் அதன் உருவம் எப்படி இருக்கும் , அதன் திசுக்கள் எப்படி இருக்கும், அதன் தன்மை இயக்கம், வேலை என்ன போன்ற விவரங்கள் அனைத்தும் எளியவருக்கும் பாமரருக்கும்கூட எளிதாக விளங்கும்படி இந்த நவீன விஞ்ஞான வளர்ச்சியில் நம் கண் முன்னே காட்சிப்படுத்தப்படுகிறது.</p><p style="text-align: justify;">ஆனால் அந்த உறுப்பை , இது தான் நெஞ்சம், இதுதான் மனது என்று எவரும் சொல்வதில்லை அப்படி சொன்னாலும் எவரும் ஏற்கப்போவதுமில்லை.</p><p style="text-align: justify;">அப்படியானால் நெஞ்சம் வேறு, மனசு வேறு இதயம் வேறு என்றாகிவிடுகிறது. இப்படி இருக்க இந்த மனசெல்லாம் நீதான் இருக்கின்றாய், என் நெஞ்சம் இதை எப்போதும் நினைவில் நிறுத்தி இருக்கும், என் இதயத்தில் அந்த நிகழ்சி நீங்காத வடுவாக உள்ளது என்று சொல்வதெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகளாகக்கூட தோன்றுகின்றது.</p><p style="text-align: justify;">இதயத்தை படம் மூலமும் X-RAY மூலமும் காணொளி மூலமும் காண முடிகிறது ஆனால் மற்ற இரண்டும் இதயத்தை குறிக்கும் வெறும் உருவகங்களே.</p><p style="text-align: justify;">எந்த ஒரு மகிழ்ச்சியையும் அல்லது பெரும் துயரத்தையும் நம் மனமெனும் இதயம் பல காலங்களுக்கு மறக்காமல் ஏதோ ஒரு மூலையில் அவற்றை சேகரித்து வைத்துக்கொள்வதையும் சரியான நேரத்தில் அந்த நிகழ்ச்சி குறித்த நினைவுகள் வெளிப்படுவதையும் நாம் அனுபவித்திருப்போம்.</p><p style="text-align: justify;">இப்படி எங்கோ, எப்போதோ, எவருக்கோ நிகழ்ந்த நிகழ்வுகளையே இதயம் நினைவில் வைத்திருக்கும்போது, இதயம் தமக்கே ஏற்பட்ட சில நிகழ்வுகளை அந்த இதயம் மறப்பது என்பது சாத்தியம் இல்லை. என்றோ ஒருநாள் எப்படியும் அதை ஏதோ ஒரு சந்தர்பத்தில் அந்த இதயம் சம்பந்தப்பட்டவருக்கு வெளிப்படுத்தும் என்பது உண்மையே.</p><p style="text-align: justify;">சர்க்கரை நோயின் அறிகுறியின் ஆரம்ப காலத்தில் மருத்துவர் கேட்கும் கேள்வி,"உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்திருக்கிறதா?</p><p style="text-align: justify;">சாதாரணமாக முடி கொட்டி வழுக்கையானவர்களைக்கூட உங்கள் குடும்பத்தில் யாருக்காவது வழுக்கை தலை இருந்திருக்கிறதா என்ற மருத்துவரின் கேள்வி மிகவும் இயல்புதான்.</p><p style="text-align: justify;">சிலருக்கு சரும வியாதிகள் நரம்பு தளர்ச்சி புற்று நோய் போன்றவற்றிற்கும் குடும்ப பின்னணி குறித்த கேள்விகள் கேட்கப்படுகின்றன.</p><p style="text-align: justify;">இப்படி இருக்க இதய பலவீனம், இதய கோளாறு, இதய வால்வு பழுது, இதய ரத்த குழாய்களின் சுருக்கம் அல்லது அவற்றில் கொழுப்பு படர்வது போன்ற குறைகாளால் சுகவீனம் அடையும் நபர்களின் அறிகுறிகளை பார்த்த மருத்துவர்கள் கேட்கும் முதல் கேவி, உங்கள் குடும்பத்தில் எவருக்கேனும் இதயம் சம்பந்தமான நோய் இருந்ததா என்பதே.</p><p style="text-align: justify;">சம்பந்தப்பட்டவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் இதயம் அதை மறப்பதில்லை; எனவேதான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு யாராயிருந்தாலும் எத்தனை முன்னெச்சரிக்கையோடு , நல்ல உணவு உடற்பயிற்சி திட்டமிட்ட வாழ்க்கை முறை அமைத்துக்கொண்டிருந்தாலும், குடும்பத்தில் பெற்றோர்களுக்கு இருந்த தாக்கத்தின் சில அறிகுறிகள் அடுத்த தலைமுறையினரையும் பாதிப்பது தவிர்க்க முடியாததாகிறது.</p><p style="text-align: justify;">இப்போதிருக்கும் கல்வி கேள்வி விஞ்ஞான வளர்ச்சியின் முதிர்ச்சியால், பெரும்பாதிப்பும் விபரீதமும் ஏற்படுமுன்னே அவற்றை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாக வாய்ப்புகள் உள்ளன என்றாலும் பெற்றோருக்கு இதய கோளாறுகள் இருந்திருந்தால் அதை எத்தனை தலைமுறை கடந்தும் இதயம் எனும் நெஞ்சம் மறப்பதில்லை.</p><p style="text-align: justify;">26 ஆறு வயது விளையாட்டு வீரன் தன் அப்பாவுக்கும் தாத்தாவிற்கு தாத்தாவின் அப்பாவிற்கும் இதய நோய் இருந்ததாலும் அவர்கள் இள வயதிலேயே இறந்துவிட்டனர் என்று அறிந்ததினாலும் தன் சிறு வயது முதல் கடுமையான - முறையான உடற்பயிற்சி, சரிவிகித உணவு,திட்டமிட்ட வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டிருந்தான்.</p><p style="text-align: justify;">எனினும் ஒரு நாள் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் மூர்ச்சை அடை ந்துவிட்டான். மருத்துவ மனை கொண்டுவரப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட அந்த இளைஞனிடம் கேட்கப்பட்ட கேள்வி உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதயம் சம்பந்தப்பட்ட நோய் இருந்ததா? இப்போது அவர்கள் உயிரோடு இல்லை என்றால் அவர்களின் மரணத்திற்கான காரணம் என்ன?</p><p style="text-align: justify;">மிகவும் கோபமடைந்த அந்த இளைஞன், ஆமாம் என் தந்தை என் தாத்தா, அவரின் தந்தை அனைவரும் இதய நோயினால் பாதிக்கப்பட்டு இளமை யிலேயே இறந்துவிட்டனர். அதேபோல எனக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே நான் என் உணவு பழக்க வழக்கங்களை, உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறைமைகளை ஏற்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ்த்துவந்தேன் அப்படி இருக்க இது எனக்கு எப்படி ஏற்பட்டது?</p><p style="text-align: justify;">அதற்கு மருத்துவர் சொன்ன பதில், நீ மேற்கொண்ட எல்லா ஆரோக்கிய நடவடிக்கைகளால்தான் உன் அப்பா, உன் தாத்தா அவரது தந்தை போன்றோருக்கு ஏற்பட்ட மரணம் உனக்கு ஏற்படவில்லை இன்று நீ உயிரோடு இருக்கின்றாய், மேலும் இதய நோய்களை குறித்த அவர்கள் காலத்து விழிப்புணர்விற்கும் உனக்கிருக்கும் விழிப்புணர்விற்கும் , அவர்காலத்து மரு த்த வளர்ச்சிக்கும் உன் காலத்து மருத்துவ வளர்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.</p><p style="text-align: justify;">குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் அடுத்து வருபவருக்கும் அதன் பாதிப்பு இருக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல சீரான வாழ்க்கை முறையும் சரி விகித உணவும் உடற்பயிற்சியும் முறையான மருத்துவ ஆலோசனைகளும் நோயின் வீரியத்தையம் அதன் பாதிப்பையும் குறைத்து நீண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி வகுக்கும். இப்போது நீ இதய நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டாய் இனி மகிழ்ச்சியோடு நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்" என கூறி அவனை அனுப்பி வைத்தனராம். </p><p style="text-align: justify;">இதேபோல இதய நோயினால் கஷ்டப்படும் மக்களுக்கும் மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்காகவும் வேண்டிக்கொள்வோம்; அதேபோல சுகம் பெற்று சகஜ வாழ்க்கைக்கு திரும்பி இருக்கும் அன்பர்களை பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம்.</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://lh3.googleusercontent.com/-t7SI8fCEajY/YL-G92DjwLI/AAAAAAAAAI0/aZ3StXxzpDUfUeKk-e0RsWMo-0vPZIi0QCLcBGAsYHQ/image.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="697" data-original-width="1291" height="173" src="https://lh3.googleusercontent.com/-t7SI8fCEajY/YL-G92DjwLI/AAAAAAAAAI0/aZ3StXxzpDUfUeKk-e0RsWMo-0vPZIi0QCLcBGAsYHQ/image.png" width="320" /></a></div><br /><br /><p></p><p style="text-align: justify;">நண்பர்களே, இது ஒரு பயமுறுத்தும் பதிவல்ல மாறாக பலருக்கும் பலனுள்ள பதிவாக அமையும் என்று என் <b>மனதில்</b> பட்டதை என் <b>இதயத்தின் </b>கீதம்கேட்டு <b> </b> <b>நெஞ்சத்தின் </b> யோசனையோடு பதிவாக்கி இருக்கின்றேன்.</p><p style="text-align: justify;"><b>விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வோம் வியத்தகு வாழ்வமைப்போம்.</b></p><p style="text-align: justify;">நன்றி,</p><p style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம்.</p><p style="text-align: justify;">கோ.</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><span face="Roboto, sans-serif" style="background-color: white; white-space: pre-wrap;"></span></p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"></p>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-24402403338303410732021-06-05T15:20:00.028-07:002021-06-06T04:43:32.923-07:00எனக்கு எப்படிங்க தெரியும்? .<div style="text-align: center;"><u> பின்னுக்குப்பின்னால்...??!!</u></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நண்பர்களே, </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பள்ளி பருவத்தில் அவ்வப்போது இன்ப சுற்றுலா, உறவினர் வீட்டு திருமணம், ஊர் பயணம் போன்றவற்றின் போது தொடர் வண்டி , பேருந்து, வேன்கள், மகிழுந்துகளில் பயணம் செய்திருக்கின்றேன்.<span><a name='more'></a></span></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வீட்டு பெரியவர்கள் யாருக்கு எங்கே இடம் கொடுக்கின்றார்களோ அந்த இடத்தில் அமர்ந்தும், சில சமயங்களில் சன்னல் ஓரத்து இருக்கையிலும் கூட அமர்ந்து பயணித்து இருக்கின்றேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின்னர் கல்லூரி காலங்களில் நண்பர்களோடும், சக மாணவர்களோடும் பல இடங்களை சுற்றிப்பார்க்க செல்லும்போதும் நண்பர்களின் வீட்டு விசேஷங்களின்போதும் இது போன்ற வாகனங்களில் பயணித்திருக்கின்றேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்போது நமக்கு பிடித்தமான இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததுண்டு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்படி பல வேளைகளில் நீண்ட தூரம் பயணிக்க நேரும்போது ஓட்டுனரின் பக்கத்தில் பெரும்பாலும் என்னை தான் அமர சொல்லுவார்கள், ஏனென்றால் நான் பயணத்தின்போது உறங்க மாட்டேன், அதே சமயத்தில் ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே அவரையும் சோர்வடையாமல் பார்த்துக்கொள்வேன் என்பதால்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கார் ஓட்ட பழகியபோது மட்டுமே ஓட்டுநர் சீட்டில் அமரும் முதல் வாய்ப்பு கிடைத்தது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதன் பிறகு வேலை செய்த நிறுவனத்தின் கார்களை ஓட்டி இருந்தாலும் , வெளி நாட்டிற்கு சென்ற பிறகு அங்கு வாங்கிய எனது முதல் சொந்தக்காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து முதன்முதலில் ஓட்டும்போது அந்த மகிழ்ச்சிக்கு அளவேது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இப்படியாக பல சந்தர்ப்பங்களில் வாகனங்களின் பல்வேறு இருக்கைகளில் அமர்ந்து பயணித்திருக்கின்றேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இப்படி இருக்கும்போது வளைகுடா நாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள், நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட, வரவு செலவு, மற்றும் பேலன்ஸ் ஷீட் என்று சொல்லப்படும் இருப்பு நிலை குறிப்புகள் மற்றும் சில ஆவணங்களை தேசிய வங்கி மேலாளரிடம் காண்பித்து, எங்கள் நிறுவனத்தின் நிதி நிலையை விளக்கும் ஒரு சந்திப்பிற்காக ஆயத்தமாகி கொண்டிருந்தேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்போது எங்கள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்களில் ஒருவரும் நிறுவன உரிமையாளரின் மகனுமான அவர், தான் வேறு ஒரு வேலையாக அதே வங்கி இருக்கும் பகுதிக்கு செல்வதாக கூறி என்னை அவரின் காரில் வந்தமரும்படி கூறினார். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அத்தனை பெரிய பொருப்பிலுள்ள மனிதர் தம்மை அவரோடு பயணிக்க அழைக்கின்றாரே எனும் சந்தோஷத்திலும் அவரிடமிருந்த மரியாதையின் நிமித்தமும் ...பளபளக்கும் விலை உயர்ந்த அவரின்காரின் பின் இருக்கையில் பவ்வியமாக அமர்ந்து கொண்டு , எடுத்து வைத்த முக்கிய தஸ்தாவேகிகளை சரிபார்த்துக்கொண்டிருந்தேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கார் இன்னும் புறப்படவில்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஏன் இன்னும் புறப்படவில்லை என நினைத்து தலையை தூக்கி பார்த்தேன், அப்போதுதான் தெரிந்தது அந்த மேலாண்மை இயக்குனர் என்னை திரும்பி பார்த்துக்கொண்டிருந்ததை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என்ன ஆச்சு ஏன் என்னை பார்க்கிறார் என்று புரியவில்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முக பாவனை சற்று இறுகிய நிலையில் காணப்பட்ட அவர் என்னிடம் முன் இருக்கையில் வந்து அமரும்படி கூறினார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எனக்கு இன்னும் பெருமிதமாக இருந்தது, என்னையும் தமக்கு சரிசமமாக உட்காரும்படி அழைகின்றாறே என நினைத்து இல்லை பரவாயில்லை நான் இங்கேயே அமர்ந்துகொள்கிறேன் என்றேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவர் கொஞ்சம் sarcastic தோரணையில் நான் உங்களுக்கு கார் ஓட்ட வேண்டுமா?, முன்னால் வந்து அமருங்கள் என கூறினார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எனக்கு ஒன்றும் புரியவில்லை, நாம் எங்கு அமர்ந்தாலும் அவர்தானே கார் ஓட்டப்போகிறார், பின்னே ஏன் இந்த அர்த்தமற்ற கேள்வி?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எனினும் , என்ன சொல்கின்றார்? நான் முன்னால் வந்தமரவேண்டுமா? ஒருவேளை என்னை ஓட்ட சொல்கிறாரா? இத்தனை விலை உயர்ந்த காரை என்னை ஓட்ட சொல்லுவாரா?அப்படி நான் ஓட்ட வேண்டுமானால் அவர் காரை விட்டு இறங்கி இருக்கை மாற்றியல்லவா அமரவேண்டும் , அப்படி இல்லாமல் ஓட்டுநர் இருக்கையிலேயே அமர்ந்திருக்கிறாரே?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என்ன சொல்கின்றீர்கள்? </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முன்னால் வந்து அமர சொல்கிறேன்?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உடனே முன்னிருக்கையில் அவருக்கு பக்கத்தில் மிக மிக பவ்யமாக அமர்ந்து சீட் பெல்ட்டை போட்டதும் காரை எடுத்தார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பயணம் முழுவதும் அமைதியாகவே இருந்தவர், வங்கி கார் நிறுத்தத்தில் என்னை இறக்கி விட்டுவிட்டு உங்கள் வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் இங்கே வந்து எனக்காக காத்திருங்கள், ஒருவேளை என்னுடைய வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் நான் உங்களுக்காக இதே இடத்தில் காத்திருப்பேன் என கூறி காரை விட்டு இறங்கி அவர் வேறு அலுவலக கட்டிடம் நோக்கி நடக்க துவங்கினார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நானும் வந்த வேலைகளை முடித்துக்கொண்டு கார் நிறுத்தும் இடத்திற்கு வந்து, காத்திருந்த அவரின் காரின் முன் இருக்கையில் அமர்ந்து வங்கி மேலாளருடன் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டு அலுவலகம் வந்தடைந்தேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின்னர் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு என்னுடைய அலுவலக அறைக்கு சென்றுவிட்டேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் என் குழப்பம் தீரவில்லை அவர் ஏன் என்னை முன்னால் வந்து அமர சொன்னார் பிறகு அவரே நான் உங்களுக்கு கார் ஓட்ட வேண்டுமா என கேட்டார் ? அவர்தானே என்னை தமது காரில் வரும்படி கூறினார்?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்போது அந்த நிறுவனத்தில் என்னைவிட பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பணிபுரியும் கோவாவை சார்ந்த ஒரு கணக்காளர் என்னை பார்க்க என் அறைக்குள் நுழைந்தார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவர் எந்த வேலைக்காக வந்திருக்கின்றார் என்றுகூட கேட்காமல் நடந்தவற்றை கூறி என் சந்தேகத்தை கேட்டேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவர் சொன்னார் , அதாவது பெரும்பாலானோர், பின்னால் உட்காருபவர்கள் முதலாளிகள் அல்லது தங்களைவிட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் அல்லது சக இனத்தவர்கள் (ஷேக்) என்றும், ஓட்டுனர்கள் என்பவர்கள் அவர்களுக்கு சேவை புரிபவர்கள் அதாவது வேலை ஆட்கள் எனும் மன நிலையில் பிடிப்புள்ளவர்கள் எனவே தான் அவரிடம் பணிபுரியும் நம்மை போன்றவர்கள் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் ஓட்டும்போது நாம் பின்னால் உட்காருவதை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அடடே... இப்படியும் ஒரு அர்த்தம் இருப்பது எனக்கு தெரியாமல் போனதே... நாம் மரியாதை என்று நினைத்து பின்னால் உட்கார்ந்த செயலுக்கு பின்னால் இத்தனை அர்த்தங்களா?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நம்ம ஊரில் எத்தனையோ முதலாளிகள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் செல்வந்தர்கள், திரைப்பட பிரபலங்கள் என காரின் முன் இருக்கையில் ஓட்டுனருக்கு பக்கத்தில் சகஜமாக அமர்ந்து பயணிப்பதை பார்த்திருக்கின்றோம் , அப்போதெல்லாம் இதுபோன்ற பாகுபாடுகளை எவரும் பார்த்ததில்லை இங்கு இவர்கள் மத்தியில் இப்படி ஒரு பாகுபாடான எண்ணமா? என திகைத்துப்போனேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின்னர் ஓரிரு மாதங்கள் கழித்து நிறுவன தலைவரும் மேற்சொன்ன நபரின் தந்தையுமான பெரியவர், நான் வங்கிக்கு செல்லும்போது என்னுடன் என்னுடைய காரில் வருவதாக கூறினார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவர் காரில் ஏறுமுன்னே ஏற்கனவே எப்போதும் ( நிறுவன ஊழியரால்) தினமும் காலையில் துடைத்து தூய்மையாக இருக்கும் எனது சொந்த காரின் பின் இருக்கையை மீண்டும் ஒருமுறை துணி கொண்டு துடைத்து அவரை அமரும்படி காரின் பின் கதவை திறந்து காட்ட அவரோ முன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டு சீட் பெல்ட்டை போட்டுகொண்டு போகலாம் வந்து ஏறுங்கள் என்றார்., எனக்கு இப்போதும் ஒன்றுமே புரியவில்லை. (காலையில் ஒரு வண்டியும், பிற்பகல் வேறு வண்டியும் , மாலை வேறு ஒரு வண்டியும் பயன்படுத்துபவர் இன்று நம் வண்டியிலா?) </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒருவேளை பாதியில் வண்டியை நிறுத்த சொல்லி இடம் மாறுவாரோ? எந்த சலனமும் இன்றி இயல்பாக - ஜாலியாக என்னுடன் பேசிக்கொண்டே வந்தவர் வங்கி வந்தடைந்ததும் இறங்கி எனக்கு இங்கே வேலை ஒன்றும் இல்லை; நான் லாபியில் அமர்ந்திருக்கிறேன் நீங்கள் வேலையை முடித்துவிட்டு வாருங்கள் என கூறிவிட்டு லாபியில் இருந்த இருக்கையில் அமர்ந்து அன்றைய செய்தி தாளை புரட்ட ஆரம்பித்துவிட்டார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என்ன நடக்கின்றது? சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி நினைவில் நிழலாட இன்றைய நாளின் நிகழ்ச்சி நெஞ்சில் வியப்பூட்டியது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மீண்டும் அலுவலகம் வரும்போதும் அவர் எனக்கு பக்கத்தில்தான் அமர்ந்து வந்தார் கலகலப்பாக பேசிக்கொண்டு வந்தார் , இறங்கியதும் நன்றாக கார் ஓட்டுகின்றீர்கள் என்ற பாராட்டுடன் எனக்கு நன்றியும் சொன்னார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்போதுதான் புரிந்தது , முன்னாள் நடந்த நிகழ்ச்சியில் வெளிப்பட்ட மனப்பான்மை "அவர்களின்" பொதுவான மனப்பான்மை அல்ல என்றும் அது தலைமுறை இடைவெளியின் தவறான புரிதலினால் ஏற்பட்ட மனப்பான்மை என்றும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">(ஒருவேளை மகனின் செயல் எனக்கு வருத்தத்தை தந்திருக்கும் என அவர் யார்மூலமோ அறிந்து இப்படி செய்தாரோ?)</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அதற்கடுத்த பல சந்தர்ப்பங்களில் மகனோடும் தந்தையோடும் பயணிக்க நேர்ந்தபோதெல்லாம், கவனமாக முன் இருக்கையில் அமர்ந்து செல்வதை மறக்காமல் இருந்தேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இப்போதும் யாருடைய காரிலாவது பயணிக்க நேரும்போதெல்லாம் எனக்கு பல வருடங்களுக்கு முன்னாள் நிகழ்ந்த அந்த ,பின்னால் அமர்ந்த, பழைய நினைவுகள் நெஞ்சின் முன்னால் வந்து நிழலாட தவறுவதில்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பி.கு: பல சந்தர்ப்பங்களில் மனைவியை, வசதியாக இருக்கட்டும் என்றெண்ணி, பின் சீட்டில் அமர செய்து கணவர்கள் கார் ஓட்டும்போது மனைவியை முதலாளி என்றும் தான் சாதாரண ஓட்டுநர் மட்டுமே என்றும் (எந்த கணவனும்) நினைப்பதில்லையே.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒருவேளை கணவர்கள் கார் ஓட்ட பின் சீட்டில் அமர்ந்து பயணிக்கும் மனைவிமார்களுக்கு அப்படி தாம் ஒரு முதலாளி என்றும் கணவன் நமது காரோட்டி என்றதான எண்ணம் கொஞ்சம் இருக்குமோ? - எனக்கு எப்படிங்க தெரியும்?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நன்றி. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மீண்டும் ச(சி)ந்திப்போம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கோ.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"></div>koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com20