பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 ஜனவரி, 2015

பொங்கலோ பொங்கல்!!

"உழவர் திருநாள் - பொங்கல்  நல் வாழ்த்துக்கள்".


தொழுதுண்டு பின்செல்லதக்க பழுதற்ற மேன்மைகொண்ட- உலோகோரின் உயிர் வேருக்கும் உணவளிக்கும் ,
உழவர்கள் அனைவருக்கும் , அவர்தம் மேன்மையினை , அவர்களோடு  இணைந்து வயல்களில்  பாடுபட்டு உழைக்கும் கால்நடைகள், பயிருக்கு மட்டுமல்லாது உலகின் அத்தனை உயிர்களுக்கும் வாழ்வளிக்கும் பகலவனையும் போற்றி கொண்டாடும் அத்தனை அன்பர்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை மனமார உரித்தாக்குகின்றேன்.



தேம்ஸ் நதி புரண்டோடும் நதி வெள்ளம் ஜதி பாடும் பின்னணி தாளம் கேட்டு பிண்ணப்பட்ட இந்த பதிவினில் கொஞ்சம் பதியுங்கள் உங்கள் பார்வைகளை, பகிருங்கள் உங்கள் உறவுகளோடு  இந்த கோர்வைகளை.

இமயத்தில் மீன் நீந்தும் நற்கொடி அசைந்தாட
இதயத்தில் தேன் சிந்தும் பூங்கொடி இசைபாட
அனைத்துலக தமிழ் நெஞ்சம் அத்தனையும் மகிழ்ந்தாட
தைத்திருநாள் மகிழ் வெள்ளம் உள்ளமெலாம் வழிந்தோட

புது - நெல்மமணியின் முனைகொண்டு
கரும்புச்சார் மை தோய்த்து 
நல்வாழ்த்து நானுரைக்க 
நலம் வேண்டும் வேளையிலே

வண்ணத்து பூச்சிகள் விழியோரம் படபடக்க
எண்ணமதில் சிந்தனைகள் எழிலோடு மினுமினுக்க
கற்பனைகள் சிறகடித்து காற்று வழி சென்றபோது
தற்செயலாய் தட்டு பட்ட தங்க தமிழ் சொற்கள் தமை

முறைபடுத்தி முனை திருத்தி முடிந்தவரை கவிதையாக்கி

எதுகையோடு மோனை தனை ஏற்ற விகிதத்தில் யாம் கலந்து
பொதிகை மலை சாரலோடு  பூங்கொத்தும் அலங்கரித்து
புது பொங்கல் வாழ்த்துரைக்க
 புனைந்து வந்தோம் இப்பாமாலை
 நனைந்திருப்போம் கொஞ்சமிதில் இந்நாளில் இவ்வேளை . 

பைந்தமிழர் பண்பாடும் பாரம்பரிய கொண்டாட்டம்
கை நிறைய பொன்னை தரும் கழனி புகழ் வான் முட்டும்.

கருக்கலில் கலப்பை ஏந்தி வயல் 
காட்டுக்கு செல்பவன் - உணவு
பெருக்கல் வேலை செய்வதற்காய்
கலப்பை முனையால்;
'சேற்றுக்குள் எழுதுகின்றான் -நம்
சோற்றுக்கான பார்முலாவை'.

ஏரோடும் வயல்களில் எழில் பூத்து கதிர் நிறைந்தால் - மகிழ்ச்சி
தேரோடும் இல்லங்களில் - சிலவேளை தேன் ஓடும் உள்ளங்களில்.

வாசலெங்கும் வண்ண கோலங்கள் 
விழி திறக்கும் விழா காலங்கள்
வாசம் வீசும் மலர் மஞ்சள் சந்தானம் 
 வழிந்தோடும் உறவுகளின் புன்னகை வந்தனம்.

புது பானை பொங்கலிட்டு புத்தாடை தனை உடுத்தி
குதூகல குலவிபாடி கொண்டாடும் ஒருநாள்
உழவனின் மேன்மையினை உலகுக்கு உணர்த்திடும்
அழகான திருநாளாய் அமைந்திட்ட பெருநாள்.

ஆதவனை நன்றியோடு ஆர்பரிக்கும் இந்நாள்
மாதனைய பசு மற்ற கால் நடைகளுக்கும் 
மகுடம் சூட்டி மகிழ்விக்கும்  மகத்தான பொன்னாள்

இதற்கிடையில் ஒரு செய்தி இச்சமயம்  சொல்லவேண்டும்:

நீண்ட காலமாக எந்தன் நெஞ்சதனில் நெருஞ்சியாய்
நெருடுகின்ற ஒரு செய்தி அதை நிச்சயம் நான் சொல்லவேண்டும்:

வருண பகவான் கருணை வேண்டி 
வாஞ்சையுடன் வானை பார்த்து
பொருத்தனைகள் பலவும் செய்து
பெருங்காலம் வீணாய் போனதினால்

பொறுமை தனை  இழந்ததோடு
பெண்டுகளின் நகைகள் விற்று
சிறு வட்ட கிணறு வெட்டி அதில் 
கீழ்நோக்கி எட்டி பார்ப்பான்.

சொட்டு சொட்டாய் சொட்டும் நீரை- கவலை
சொட்டுகின்ற நெஞ்சத்தோடு -வாழ்வில்
எட்டவேண்டும் ஏற்றம் என்று 
ஏற்றம் இறைத்து பயிர் வளர்ப்பான்.

பயிர் வளரும் தாமதமாய் -பட்ட
கடன் வளரும் பூகம்பமாய்.
உயிர் கொடுத்து வளர்த்தபயிர்
உதவிடுமா உற்ற காலத்தில்?

என்று இவன் எண்ண அலைகள்
சுனாமியாய் உருவெடுக்க

நஞ்சையும் புஞ்சையும் 
யாமிருக்க பயமேன் என
புன்னகித்து பலம் சேர்க்கும் -அதில்
தன்னை மறந்து தலை சாய்ப்பான்.

மழை வேண்டி இவன் செய்த  
மன்றாட்டு விண்ணப்பங்கள்
கொஞ்சம் பிழையாக பின்தங்கி
பிதாவிடம் சேர்ந்ததுபோலும்.

அறுவடை நேரம் பார்த்து -நல்ல
அடைமழை பெய்ததனால்
அத்தனையும் போனதோடு 
அவனும்தான் பித்தனானான்.

இத்தனைக்கும் காரணம் யார்?
இறைவனா?  இல்லை இல்லை

அங்கிருக்கும் அரசுகளின்
மங்கிப்போன ஆணைகளால்
பொங்கிவரும் ஆற்று கெல்லாம் 
போட்டனரே அணைகள் எங்கும்.

ஆறுகளை இணைக்க - புது
 ஆணைகள் பிறக்கவேண்டும்
சோறுபோடும் தோழர் என்றும் 
சோராது இருக்கவேண்டும்.

நதிகளை இணைக்க - புது
விதிகள் சமைக்கவேண்டும்
விதிகளில்லா பொது  நதிகளாய் 
அமைக்கவேண்டும்.

கடந்த நாட்களின் கருமேகம்
கடக்கட்டும் அதிவேகம்
நடக்கின்ற நிகழ்வுகள் -நமை
நலம் கொண்டு நிரப்பட்டும்.

இவ்வண்ண பெரு விழாவில்
வனப்புடனே மகிழ்ச்சி வெள்ளம்
எண்ணமெலாம் வழிந்தோடி - வாழ்வில்
ஏற்றங்கள் பெருகிடவே
என் இதய வாழ்த்துக்கள்
என் இனிய தமிழருக்கெல்லாம்.

வாழ்க பாரதம்!
 வெல்க தமிழ்!!
உயர்க வேளாண்மை.!!!


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

12 கருத்துகள்:

  1. அருமை நண்பரே,,,,, பொங்கல் கவி இனித்ததே.....
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    எனது மோதகமும், அதிரசமும். சுவைக்க வருக....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கில்லருக்கு,

      மீண்டும் வந்தது மகிழ்ச்சி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. சௌந்தர்

    கவிதை வீதி, நம் கடை வீதிக்கு வந்தது மகிழ்ச்சி.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க அன்றி.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  3. ஆஹா! என்ன ஒரு இனிமையான கவிதை! நண்பரே! பொங்கலுக்கு டபுள் போனஸ் இனிப்பு போல!!!! அருமை அருமை!

    தேம்ஸ் நதி புரண்டோடும் நதி வெள்ளம் ஜதி பாடும் பின்னணி தாளம் கேட்டு பிண்ணப்பட்ட இந்த பதிவினில் கொஞ்சம் பதியுங்கள் உங்கள் பார்வைகளை, பகிருங்கள் உங்கள் உறவுகளோடு இந்த கோர்வைகளை.//

    பகிர்ந்தோம்!

    அருமை! அருமை! சுவைத்தோம் தேன் தமிழை!

    பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      கவிதையை ரசித்து பாராட்டியமைக்கும் டபுள் போனஸ் இனிப்பென தரம் தந்தமைக்கும் நன்றிகள், இருந்தாலும், பொங்கல் ச்வீட்டையும் கொஞ்சம் சுவையுங்கள்.

      வீட்டில் எல்லோரும் நலம் தானே.

      அனைவருக்கும் என் அன்பையும் அன்பு தோய்ந்த நல் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  4. வண்ணத்து பூச்சிகள் விழியோரம் படபடக்க
    எண்ணமதில் சிந்தனைகள் எழிலோடு மினுமினுக்க
    கற்பனைகள் சிறகடித்து காற்று வழி சென்றபோது
    தற்செயலாய் தட்டு பட்ட தங்க தமிழ் சொற்கள் தமை

    முறைபடுத்தி முனை திருத்தி முடிந்தவரை கவிதையாக்கி//

    முடிந்தவரை?!!!! அது என்ன முடிந்தவரை?! இவ்வளவு அருமையாக எழுதிவிட்டு....முடிந்த்வரை என்று உங்கள் தன்னடக்கம் வெளிப்பட்டு....ஆஹா போட வைக்கின்றது! தமிழில் தாண்டவம் ஆடுகின்றீர்கள் நண்பரே! நாங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை....வெத்து வேட்டுக்கள் தான்!

    அருமையான வரிகள்! தமிழ் மணம் வீசுகின்றது! சுகந்த மணம்! இனிமையுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      உங்களின் ஆழ்ந்த அலசலுக்கும் அளவுகடந்த பாராட்டுக்கும் (காலம் தாழ்ந்த உங்கள் )பின்னூட்டத்துக்கும் மிக்க மிக்க நன்றி.

      பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

      எப்படி இருக்கின்றீர்கள்.

      சென்னையும் பாலகாடும் நலமா.

      அவ்வப்போது கொஞ்சம் தலையை காட்டுங்கள்.

      உங்களின் பின்னூட்டம் கிடைக்காத நேரங்களில் நான் கொஞ்சம் மனசோர்வோடு பின்னுக்கு தள்ளபடுவதாக உணர்கின்றேன்,

      சமயம் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை.

      (என்றும்)நட்புடன்

      கோ

      நீக்கு
  5. நண்பரே எங்கள் கருத்து எல்லாம் எங்கே போயிற்று? காக்கா தூக்கிக் கொண்டு போயிற்றா? இங்கள் கவிதையை ரசித்து வாசித்து கருத்து இட்டோம்! தமிழர் திருநாள் வாழ்த்தும் தெரிவித்து...என்னாயிற்று? நேற்று நண்பர் விசு அழைத்த போது கூட சொன்னோம் உங்கள் கவிதை பற்றி சிலாகித்து.....ஏன் கருத்து வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. உங்கள் கல்யாணப் பரிசு முதல் பாகத்திற்கும் கருத்து தெரிவித்தோம். பார்க்கப்போனால் அந்த டைரி கல்யாணப் பரிசாக ப் போயிருக்கும் என்ற சஸ்பென்சைச் சொல்லி....அதுவும் வரவில்லையோ....பார்க்க வேண்டும்.

    அருமையான கவிதை நண்பரெ! வரிகள் மின்னுகின்றன! தமிழ் விளையாடுகின்றது! அதுவும் முதல் வரிகள்..உழவரின் இன்னல்களை வெளிப்படுத்தும்...வரிகள்...அருமை.

    இந்தத் தமிழர் திருநாளாவது நமது பூமி வளம் பெற்றுச் செழித்து, உழவருக்கும் மக்களுக்கும் நல்லன நடக்கட்டும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      உங்கள் பின்னூட்டம் நல்ல வேலை வெள்ளை காக்காய் தூக்கி சென்றதால் இங்கு வந்து டெலிவரி செய்தது.

      கவிதையை நண்பரிடம் நீங்கள் பாராட்டி(???) பேசியதாக சொல்லுவது மனதுக்கு இதமளிக்கின்றது.

      ஆழ படித்து அலசி ஆராய்ந்து பாராட்டும் உங்களுக்கு என் நன்றிகள்.

      பொங்கலெல்லாம் எப்படி போகின்றது.

      கரும்பு சாப்பிட்டீர்களா? இங்கே கிடைக்கவில்லை.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  6. அப்பப்பா என்ன ஒரு வீரியம். கவிதை வரிகள் அத்துனையும் அருமை, சேற்றுக்குள் எழுதுகின்றான் –நம் சோற்றுக்கான பார்முலாவை - வார்த்தைகள் தங்களின் வரம் வேண்டினவோ?. சொட்டு சொட்டாய் சொட்டும் நீரை- கவலை சொட்டுகின்ற நெஞ்சத்தோடு …………. உண்மைதானே. மழை வேண்டி இவன் செய்த மன்றாட்டு விண்ணப்பங்கள் கொஞ்சம் பிழையாக பின் தங்கி பிதாவிடம் சேர்ந்ததுபோலும். இருக்கலாம் சகோ இல்லை என்றால் நம் பாரம்பரிய தொழில் இன்று இருக்கும் நிலை அறியாயோ
    அருமையான கவிதை.
    இனி வருகிறேன் தொடர்ந்து.



    பதிலளிநீக்கு
  7. பொங்கல் பதிவினை, பருக்கை பருக்கையாய் ருசித்து,தங்களின் கருத்துரைத்தமைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ.

    வாருங்கள் மற்ற பதிவுகளைகுறித்த தங்களின் விமர்சனங்களையும் தாருங்கள்.

    நன்றியுடன்

    கோ

    பதிலளிநீக்கு