பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 26 மார்ச், 2021

முடியாது!!

படிப்பானா?..படித்தானா?
நண்பர்களே,

யாராவது நம்மிடம்   ஒரு உதவியையோ அல்லது ஒரு ஒத்தாசையையோ, அனுகூலத்தையோ எதிர்பார்த்து   நாடி வருபவரின் முகத்தில் அடித்தாற்போல "முடியாது" என்று சொல்லி மறுக்கும் போது கேட்பவரின் உள்ளம் என்ன பாடு படும். 

புதன், 24 மார்ச், 2021

காற்றோடு வந்ததற்கு நேற்றோடு ஓராண்டு!

மகிழ்வதா- இகழ்வதா?

நண்பர்களே,

பாதிக்கப்பட்டவர் இரும்புவதாலோ தும்முவதாலோ அவருக்கு மிகவும் அருகில் இருப்பவருக்கு பரவி, அவர் மூலம் அவர் தொட்ட பொருட்களில் ஒட்டிக்கொண்டு அதை தொடுபவருக்கு தொற்று ஏற்பட்டு தனது நீட்சியை விஸ்தாரன படுத்திகொண்டு தமது ஆட்சியை ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த கொரானாவினால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதன் நிறைவு நேற்றோடு ஓராண்டு இங்கே இங்கிலாந்தில்.

வியாழன், 18 மார்ச், 2021

உள்ளங்கை நெல்லிக்கனி.

உள்ளமெல்லாம்.... நொள்ளைக்கனி !!


நண்பர்களே,

முன்பொரு பதிவில் குறிபிட்டிருந்ததுபோல, நம்ம ஊரில் கிடைக்கும் பெரும்பான்மையான  பொருட்களும்,காய்கள், பழங்கள் உணவு பொருட்கள்  இங்கேயும்  கிடைக்கும். ஒரே வித்தியாசம்  விலை பல மடங்கு அதிகம்.

புதன், 17 மார்ச், 2021

போதும்டா சாமி.

ஆங்கிலத்திலும் ...

நண்பர்களே,

இறை நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் நம்பிக்கைக்குரிய தமக்கு மிஞ்சிய  ஒரு  சக்தியை இறைவன், கடவுள்,பரம்பொருள்,தெய்வம்,ஆண்டவன் என்று பல வார்த்தைகள் மூலம் விளித்து வழிபடுகின்றனர்.

சனி, 13 மார்ச், 2021

திருமண அழைப்புடன்...2

வந்ததென்ன?

 தொடர்கிறது...

முன்பதிவை வாசிக்க...திருமண அழைப்புடன்...

என் திருமணதிற்கு ஒருவாரம் முன்னதாக வந்திருந்து எங்களோடிருந்து எங்களை மகிழ்சி  படுத்தியது போல் நடைபெறப்போகும் என் மகனின் திருமணத்திற்கும் நீ எங்களோடிருந்தால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைவோம், நீ எங்கள் குடும்பத்தில் ஒருவன் உனக்கென்று எங்கள் எல்லோர் மனதிலும் ஒரு இடம் உண்டு என்பதை நீ அறிந்தவன்.

வியாழன், 11 மார்ச், 2021

திருமண அழைப்புடன்....

வந்ததென்ன?


நண்பர்களே,

ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம்(+2) வகுப்புவரை  ஒரே பள்ளியில் படித்தவன் என்பதால் மாற்று பள்ளிகளில் இருந்து ஒன்பதாம் மற்றும் பதினோராம் வகுப்புகளில்  சேரும் புதிய மாணவர்களை  அணுகி அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகையில் ஒத்தாசை செய்வது பழைய மாணவர்களின்  இன்றியமையாத கடமைகளுள் ஒன்று.

புதன், 10 மார்ச், 2021

வணக்கம் !

நலமறிய ஆவல்!!.

 நண்பர்களே,

அனைவரும் சுகமுடனும் பாதுகாப்புடனும் இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

பதிவுகள் பக்கம் தலை  வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டன, காரணம் , எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்ததுபோல  இந்த வலைதளத்தின் புதிய  வடிவமும் செயல்பாடும் எனக்கு பிடிபடாமல் இருந்ததுதான்.