பின்பற்றுபவர்கள்

சனி, 31 டிசம்பர், 2016

பானத்தில் பாஷாணம்??

நம்பிக்கை துரோகம்.

நண்பர்களே,

மனிதன் உயிர் வாழ தேவைப்படும் இன்றியமையாத -  ஆதார-  அச்சான நீர், காற்று, உணவு போன்றவையின் முக்கியத்துவத்தை நாம் எல்லோரும் அறிவோம்.

பன்னீரும் பணிவும்!!

   செல்வமும் செழிப்பும்!!
.
நண்பர்களே,

ஆண்டாண்டு காலமாக நமது இந்திய திரு நாட்டின் பாரம்பரிய வழக்கமாக நடைமுறையிலிருக்கும் ஒரு மரபு,

வெள்ளி, 30 டிசம்பர், 2016

காயமும் மாயமும்!!!!

 தீர்க்கதரிசனம்  ?

நண்பர்களே,

இந்த ஆண்டு  நிகழ்ந்த பேரிழப்பின் வடுவும் வலியும்  ஆறாத மனநிலையில் விழாக்கள், கொண்டாட்டங்களில் அத்தனை ஆர்வமில்லாமல் இருந்தேன்.

இரண்டு கால்களும் போனதெங்கே?


புரியாத புதிர்.
நண்பர்களே,

நாம் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் செல்லவேண்டுமாயினும்,ஒரு தகவலை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டுமாயினும், அல்லது விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்லவேண்டுமாயினும்,

வியாழன், 29 டிசம்பர், 2016

கார்டனில் காஞ்சனா.

R.I.P.
நண்பர்களே,

நிறைவேறாத ஆசைகளுடனும் ,படுபாதகமானமுறையிலும்  இறந்தவர்களும் கொல்லப்பட்டவர்களும்,

வியாழன், 22 டிசம்பர், 2016

தோட்டத்திலிருந்து துரத்தப்பட்ட முதல்வர்.

கூடா நட்பு!! 

நண்பர்களே,

சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த இடத்தில்  திருமண வாழ்த்து செய்தியின் ஒரு பகுதியாக இந்த பேச்சு அடிபட்டது :-

செவ்வாய், 15 நவம்பர், 2016

"நோட்" பண்ணவேண்டிய விஷயம்.

தாய் மண்ணே வணக்கம்!!

நண்பர்களே,

நாட்டு நடப்பை பார்க்கும்போது, ஒரு சிறு துளி அதிகாரம் இருப்பவர்கள் மட்டுமன்றி அவர்களை  சார்ந்தவர்களும்  சமூகத்தில் செய்யும் வரம்பு மீறிய அட்டகாசங்களுக்கு எல்லையே இல்லாமல் இருக்கும்.

திங்கள், 14 நவம்பர், 2016

கொட்டி, சுட்டி காட்டு!

என்னாச்சி???


நண்பர்களே,

முன்பொரு காலத்தில் அகில இந்திய வானொலி- சென்னை வானொலி  நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பல நிகழ்ச்சிகள் வழங்கப்படும்.

வெள்ளி, 11 நவம்பர், 2016

வழக்கு இன்னும் நிலுவையில்...

குற்றச்சாட்டு.

நண்பர்களே,

என்னை வசித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான நண்பர்களுக்கு தெரியும் இன்று என்னுடைய தந்தையாரின் நினைவு நாள்  என்று.

வியாழன், 10 நவம்பர், 2016

அஞ்சிக்கும் பத்துக்கும்

காசிருந்தால் வாங்கலா(ம்)மா??

நண்பர்களே,

சமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக  பழைய  500  மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் கொள்கையில்  பல புரியாத புதிர்களுக்குள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்லாது பெரும் பணக்காரர்களும்  சிக்கி இருப்பதை கடந்த இரு நாட்களாக உணர முடிகிறது.

செவ்வாய், 8 நவம்பர், 2016

தங்கச்சிய (மெய்யாலுமே) நாய் கச்சிச்சிப்பா ......

மீண்டும் ஜனகர்.

நண்பர்களே,

சமீபத்தில் எழுதி இருந்த என்னுடைய பதிவு ஒன்றில் கோண(ல்)வாய்  கோலிவுட்!! ) திரை பட நடிகர் திரு.ஜனக ராஜ்  அவர்கள் மீண்டும் திரையில் தோன்றி மக்களை மகிழ்விக்கவேண்டும் எனும் என்னுடைய  ஆவலையும் அதற்காக,.

வெள்ளி, 4 நவம்பர், 2016

படிப்படியாக......

உன்னை அறிந்தால்...
 நண்பர்களே,

வாசிப்பு என்பது எத்தனை நல்லது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு உண்மை.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

தலை(கால்)தீபாவளி!!

காலுக்குமா??

நண்பர்களே,

"தலை" என்ற  சொல்லுக்கு, பிரதானம், முதன்மை, தலைமை,முக்கியமான, பிரத்தியேகமான,சிறப்பான குறிப்பிடத்தக்க...போன்ற எத்தனையோ வார்த்தைகளை அதன் பொருளாக கருதலாம்.

வியாழன், 27 அக்டோபர், 2016

மீண்டும் சந்திப்போம்!!

இரட்டிப்பு மகிழ்ச்சி !!

நண்பர்களே,

நமக்கு யாரையாவது பிடித்திருந்தாலோ, அல்லது அவர்களை பற்றி யார் மூலமோ, பத்திரிகை, தொலைகாட்சி, ஊடகங்கள் மூலம் அறிந்திருந்தாலோ   நமக்கு அவர்களோடு பேசவேண்டும் பழகவேண்டும்   என்று வாஞ்சை மிகுந்திருக்கும்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

அதான் இது!... "செந்தில்"அதிரசம் !!

 Two-in-One!!

நண்பர்களே,

இனிப்பு என்ற சொல்லுக்கே நம் உமிழ்நீரை வழியவைக்கும் மகத்துவம் உண்டு, அதிலும் பண்டிகை காலங்களில் செய்யப்படும் விதவிதமான இனிப்புகளை நினைத்தாலே இனிக்கும் என்று ஜொள்ளவும் , அதாவது  சொல்லவும் வேண்டுமோ?

திங்கள், 17 அக்டோபர், 2016

ஏ கே 47(??!!...)

எண்ண எண்ண  இனிக்குது... 
நண்பர்களே,

தலைப்பில் உள்ள  பொருளுக்கும் உபதலைப்பில் உள்ள கருத்திற்கும் ஏணி போட்டாகூட எட்டாத தூரத்திலுள்ள இந்த இரு துருவ சொற்கள் எப்படி இன்றைக்கு பதிவின் தலைப்புகளாயின என்ற கேள்வி எழுவது வாஸ்த்தவம்தான்.  

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஹனி மூ(மீ)ன்!!

அமாவாசை

நண்பர்களே,

பேரை கேட்டாலேசும்மா.... அதிருதில்ல என்று ஒரு பிரபலமான வசனம் உண்டு. அதேபோல சில வார்த்தைகளை கேட்டாலே உள்ளத்திலே மகிழ்ச்சி  பொங்கும்.

வியாழன், 13 அக்டோபர், 2016

ஒரிஜினல்(??) முனியாண்டி விலாஸ்.

எச்சரிக்கை.!!!
நண்பர்களே,

சமீபத்தில் கவுண்டமணி அவர்கள் கதநாகயகனாக நடித்து ஒரு படம் வந்திருப்பதாக செய்தி அறிந்தேன்.  

புதன், 12 அக்டோபர், 2016

வாசல் எங்கும் வானவில்லாய்...

அ(ம்)ன்பு வில்!!

நண்பர்களே,

சில தினங்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு சுற்றறிக்கை சுற்றி வந்தது.

அதில் வருகிற 12 ஆம் தேதி, நீங்கள் விரும்பும் வண்ணம், வண்ண வண்ண ஆடைகளை அணிந்துகொண்டு அலுவலகம் வரலாம் என மகிழ்வூட்டும் வாசகத்தோடு  துவங்கிய அந்த சுற்றறிக்கை போகப்போக  வாசிப்பவர்களின் மனதில் ஒரு இறுக்கமான - உருக்கமான சோக செய்தியை படரவிட்டது.

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

தொடரியில் "படவா" கோபி.

ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு ரயிலே....

நண்பர்களே,

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில் என்னை மிகவும்  கவர்ந்த தலைப்பு, இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படமான தொடரிதான்.

வியாழன், 8 செப்டம்பர், 2016

அத்திக்காய் காய்! காய்!!

எனக்காய்!!!.

நண்பர்களே,

பொதுவாக உலகில் மனிதர்கள்சாப்பிடக்கூடிய அத்தனை காய்கறிகளும், பாகற்காய் உட்பட, எனக்கு பிடிக்கும் என்றாலும்   எனக்கு மிக மிக பிடித்தவை இரண்டு.

திங்கள், 5 செப்டம்பர், 2016

டைட்டானிக் சாவிகள்!!

Thought பூட்!!

நண்பர்களே,

நம்ம ஊரில் சில கோவில்களில் இருக்கும் சில விசேஷித்த மரங்களில், மஞ்சள் கயிறுகளும் சில மரங்களில் தொட்டில்களும் கட்டப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சைப்ரஸ் சர்ப்ரைஸ்

இதையும் இணைக்கும் இதயம்.

 நண்பர்களே,

வெனிசுக்கு வருபவர்களில்  பெரும்பாலானவர்கள் தவறாமல் புகைபடமெடுத்துக்கொள்ளும் முக்கிய இடங்களுள்  பிரதான கால்வாய் மீது கட்டப்பட்டிருக்கும் அந்த ரியால்டா பாலமும் ஒன்று என்பதால் அதன் மீது நின்றுகொண்டு விதவிதமான பாவனைகளில் தங்களை புகைபடமெடுத்துக்கொண்டிருந்தனர்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இனிய வடு!!

அனுபவ சாரல்.

நண்பர்களே,

நீரால் சூழப்பட்ட வெனிஸ் நகர்ப்புற குட்டி குட்டி தீவுகள்   கால்வாய்களாலும், சிறிய சிறிய பாலங்களாலும் இணைக்கப்பட்டிருப்பதை நேரில் பார்க்கும் போது உள்ளத்தில் ஏற்படுகின்ற உற்சாக பெருவெள்ளத்தை என்னவென்று நானுரைப்பேன்.

சனி, 27 ஆகஸ்ட், 2016

படகுகள் பலவிதம்!!

கோண்டோலா கொண்டாட்டம்!

நண்பர்களே,

நூற்றி பதினேழு தீவுகள் அவற்றை  ஒன்றோடொன்று இணைத்து கரம் சேர்க்க மொத்தம் சுமார் 400 பாலங்கள்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

கனவு (கலையாத) நகரம்.

எட்டா(த) வது அதிசயம்!!

நண்பர்களே,

உருட்டிய விழிகளோடு சில பகுதிகளும்,  வசீகரிக்கும் பார்வைகளோடு வேறு சில பிராந்தியங்களும் , கண்ணீரோடு வேதகனைகளோடு வேறு பல பிரதேசங்களும், கந்தக புகைகளையும் அமில நெடிகளையும் மடியில் சுமந்தவண்ணம் வேறு சில நிலப்பரப்புகளுமாக....

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

தண்ணீர் நேசம்.


எல்லோரும் ரஜினிபோல்...

மிதி வண்டிகள் இல்லை, ரிக்கஷாக்கள் இல்லை,   இரு சக்கர மோட்டார் வண்டிகள் இல்லை, கார்கள் இல்லை, பஸ்கள் இல்லை, லாரிகள் இல்லை , ரயில்கள் இல்லை, குதிரை வண்டிகள் இல்லை, மாட்டு வண்டிகள் இல்லை அட ஒரு ஆட்டோ கூட இல்லைங்க.

புதன், 24 ஆகஸ்ட், 2016

வழிவாய்க்கால்= வழி+வாய்+கால்

நேரா போய் லெஃப்ட் அப்புறம் ரைட்டு ...

நண்பர்களே,

சில நாட்களாக நான் ஊரில் இல்லாததாலும்  அதே சமயத்தில் ஊரில் இருந்ததாலும் உங்களோடு பதிவினூடாய் பரஸ்பரம் பகிரமுடியாமல் போனது.

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

கோண(ல்)வாய் கோலிவுட்!!

ஜனங்களின் ராஜா! 

நண்பர்களே, 

திடீரென்று நாம் அறிந்த ஒருவர்பற்றி என் மனதில் இனம் கானா ஒரு இன்ப நினைவு அலை இதமாக வீசிச்சென்றதன் விளைவாக விளைந்ததே இந்த பதிவு.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

தூங்கா இதயத்தில் நீங்கா நினைவுகள்!!

  வாழ்க   எல்லா வளத்துடன் !!

நண்பர்களே,

சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றை காண நேர்ந்தது.

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

வாகை சூடும் உன் வாசல் தேடும்....

உணர்வின் மொழி!.

நண்பர்களே,

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நான் எழுதி இருந்த எனது அனுபவ பதிவான, முதல்வர் முன்னிலையில்  கோவின் மேடைபேச்சு எனும் தொடரின் நான்காம் பாகம் படித்தவர்களில் ஒருசிலர் அனுப்பிய பின்னூட்டம் உணர்வுபூர்வமாக , மொழி பற்றின் வெளிப்பாடாக அமைந்திருந்தன.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

ஆஹா..ஆகஸ்டு 14!

"வாழ்த்துவோம்."

நண்பர்களே,

ஆகஸ்டு மாதம் , நமது தேசிய அளவில், மகிழ்ச்சிக்குரிய ஒரு மாதம் என்றால் அது மிகை அல்ல.

வெள்ளி, 29 ஜூலை, 2016

புகைப்படம்!!

கொஞ்சம் சிரி(க்காதே) 


புகைப்படங்கள் எடுப்பதும் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது பார்ப்பதும் அதிலும் சுப நிகழ்ச்சிகளின் போது எடுத்த புகைப்படங்களை பார்த்து மகிழ்வதும் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். 

வியாழன், 28 ஜூலை, 2016

பாவம் அந்த பச்சப்புள்ள.

டா- டா- பாய் பாய்!!

நண்பர்களே,

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும்  ஆண், பெண்,வயது,  மொழி, கல்வி, பொருளாதாரம், நாடு போன்ற எந்த பாகுபாடும்மின்றி பரவலாக சொல்லும் ஒரு வார்த்தை "டா-டா".

புதன், 27 ஜூலை, 2016

ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல?

 எத்தனை ?
நண்பர்களே,

சில வருடங்களுக்கு முன்னால், மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் உள்ள சிறிய தனி நாடான, மால்டா எனும் ஐரோப்பிய  நாட்டிற்கு சென்றிருந்தேன், அதை பற்றி....

செவ்வாய், 26 ஜூலை, 2016

சங்கும் -நுங்கும்

கேட்கிறதா?
நண்பர்களே,

நாம் யாரிடமாவது ஏதாவது அல்லது முக்கியமானதாக நாம் கருதும் ஒரு செய்தியை சொல்லும்போது அதை அவர்கள் உன்னிப்பாக கேட்கவேண்டும் என்று நினைப்போம்.

திங்கள், 25 ஜூலை, 2016

விஜயகாந்த் சொல்றதும் சரிதானே.

வருவியா... வரமாட்டீயா ..

நண்பர்களே,

சமீபத்தில் வெளிவந்து மகிழ்ச்சியுடன்(யாருக்கு??) வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஒரு பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தினை குறித்து இதுவரை சுமார் 7 கோடி மக்கள்தங்களின் விமர்சனங்களை எழுதி குவித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்அதிலிருந்து கொஞ்சம் விலகி எனது மலேசிய நண்பர் சொன்ன ஒரு கருத்தை   உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்ளும் வாஞ்சையே இந்த பதிவு.

வெள்ளி, 22 ஜூலை, 2016

மருந்து வச்சிட்டாங்கய்யா.

 நாட்டு மருந்து !!

நண்பர்களே,

சமீப காலம் வரை நண்பர்களாக திகழ்ந்த நம்மில் ஒருவருக்கொருவர் மனம் புண்படும்படி ஏதேனும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் ஏற்பட்டு, அதனால் உறவில் விரிசல் ஏற்படுமாயின்  நம் மனம் படும் வேதனையை சொல்லி மாளாது.

வியாழன், 21 ஜூலை, 2016

கவுண்டமணி - வைரமுத்து

"அப்போ செந்தில்....? "
நண்பர்களே,

பல வருடங்களாக நம் தமிழ் மண்ணில் பல விதமான வழக்கு சொற்கள் புதிதாக உலாவந்துகொண்டிருக்கின்றன.

புதன், 20 ஜூலை, 2016

இரண்டே இரண்டு கண்ணே கண்ணு.

கண்ணும் கருத்தும்.

நண்பர்களே,

"ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு" என்று பலரும் பலமுறை சொல்லியும் இருப்போம்  சொல்லவும் கேட்டிருப்போம்.

திங்கள், 18 ஜூலை, 2016

உலகே மா(சா)யம்!!

மெய்ப்பொருள் காண்பதரிது!!

நண்பர்களே,

பழைய காலத்து மனிதர்களுள்  பெரும்பான்மையானவர்கள், சூது வாது தெரியாத வெள்ளந்தி மனிதர்களாக வாழ்ந்திருந்தனர் என்பதை  வரலாறுகளும், வழி வழியாக சொல்லப்பட்ட உண்மை சம்பவங்கள் மூலமும் நாம் அறிவோம்.  

வெள்ளி, 15 ஜூலை, 2016

வேண்டாம் விட்டுடுங்க.

ஆமா நீங்க நலமா?

நண்பர்களே,

சமீபத்தில் ஊரில் தங்கி இருந்த நாட்களில் மிக முக்கியமான வேலைகள் இருந்தபோது மட்டுமே வெளியில் சென்று வந்தேன் மற்றபடி வீட்டிலேயே குடும்பத்தினருடன் தங்கி இருந்தேன்.

வியாழன், 14 ஜூலை, 2016

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ??

மகுடம் சூடு.!!

நண்பர்களே,

மனிதனின் வாழ்வோடு  நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டற  கலந்து மனித வாழ்வியலை வளம்பெற செய்வதில் கால்நடைகளின் பங்களிப்பு மிக மிக அதிகம்.

செவ்வாய், 12 ஜூலை, 2016

பதிவும் - பதிலும்

கைமேல்  பலன்!!.

நண்பர்களே,

பதிவர்களும் பதிவரல்லாத பெரும்பான்மையானவர்களும், பெரும்பான்மையான நேரங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி, "பதிவுகளால் என்ன பயன்?" என்பதே.

வெள்ளி, 8 ஜூலை, 2016

நேர் "கொன்ற" பார்வை.

"கை (துசெய்யும்) தொலைபேசிகள்"  
நண்பர்களே,

பேருந்தில் பயணித்துக்கொண்டே, அக்கம் பக்கம் என்ன நடக்கின்றது என்று கொஞ்சம் கண்களை அகல விரித்து ஆழ்ந்து கவனித்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்த எனக்கு பல விஷயங்கள் பார்வையில்பட்டு மறைந்தாலும் ஒரே ஒரு காட்சி மட்டும்  மனதில் புகுந்து கொஞ்சம் சிந்திக்க தூண்டியதின் விளைவே இந்த பதிவு.

வெள்ளி, 1 ஜூலை, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகா.!!

மணக்குமா?  இனிக்குமா?

நண்பர்களே,

இது என்ன தலைப்பு?

மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றுதானே கேட்டிருக்கின்றோம்.

சரிதாங்க, நானும் மல்லிகை என்றுதான் சில நாட்கள் வரை கேட்டிருந்தேன்.

ஆனால் சமீபத்தில் ஊருக்கு சென்றபோதுதான் இந்த மல்லிகாவை குறித்து அறிந்து சுவைத்தேன்.

என்ன சுவைத்துகூட விட்டீரா?

ஆமாங்க.

இப்போ நம்ம ஊரில் சரியான மாங்காய் சீசன் என்பது நாம் அறிந்ததே.

 இந்த வருடம் சந்தைக்கு வந்த மாங்காய்களில் ஒருவகை மாங்காய்க்குத்தான் இப்படி பெயர் வைத்துள்ளனர்.  மல்லிகா என்று.

(இது வேற ரகம் - ஒருவேளை கனகவோ?)
.
சுவைமிக்க அந்த மாம்பழம்  நண்பரின் தோட்டத்தில் இருந்து  கொண்டு கொடுக்கப்பட்டது.  

எந்த மானுடனும் இதுவரை கண்டிராத சுவைகொண்ட இந்த மாம்பழத்தின் சுவையினை தேனுடன் தான்  ஒப்பிட வேண்டும் அத்தனை இனிப்பு.

மல்கோவா மாம்பழத்தை விட மூன்று மடங்கு பெரிது.

ஒரு பழத்தை துண்டுதுண்டுகளாக அரிந்தால் குறைந்த பட்சம் பத்துபேர் வரை சுவைக்கலாம் இந்த மல்லிகாவை.

அதன் விதையும்  மிக மிக தட்டையாகவே உள்ளதால் சதை பிடிப்பு  அதிகம்.

ஊரில் இருந்து திரும்பி வரும்போது கொண்டுவந்து அரிசி மூட்டையில் வைத்து பழுக்க வைத்து பதம் பார்த்தோம்.  ஆஹா.... என்னே சுவை.

வேண்டுமென்றால் கண்டுபிடித்து சுவைத்துப்பாருங்கள் மல்லிகாவை.

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

வியாழன், 30 ஜூன், 2016

"Money தா" பிமானம்

நமக்கு என்ன ஆச்சி  ?? 


நண்பர்களே,

சமீபத்தில் சென்னையில் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த துணிகர கொலை சம்பவம் என்னை மிகவும் பாதித்தது என்று சொல்வதைவிட, அந்த இளம்பெண்ணின் குடும்பத்தை எப்படி பாதித்திருக்கும் என்று கற்பனைகூட செய்ய முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

செவ்வாய், 28 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!--4


 மௌன சம்பாஷணை!!.

நண்பர்களே,

 தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க, அம்மா இங்கே வா! வா!!--3

தான் வருவதற்குள் -  தன்னை காண்பதற்குள் கண்மூடிப்போன அம்மாவை மண்மூட காத்திருக்கும் கந்தக செய்தியால் பேரதிர்ச்சியில் மூழ்கி இருந்தவர் தன்னிலை மறந்தவராய், தன் தாயாரின் ஆன்மாவோடு மானசீகமாக தன் மனதிற்குள் பற்பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாராம்.

திங்கள், 27 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!--3

"தலை மகனுக்கு தலைப்பு செய்தி"

நண்பர்களே,

 தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க, அம்மா இங்கே வா! வா!!--2

காரில் சுமார் 2 மணி நேர பயணத்தின்போது, நாட்டின் வளர்ச்சி, சாலை பராமரிப்பு,  குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரின் நலன் பற்றிய விசாரிப்புகள், தொடர்பான பேச்சுக்கள் இடம் பெற்றன.